ஈரோடு இடைத்தேர்தல் விதிமீறல் தொடர்பாக 110 புகார்கள் வந்துள்ளன – தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

252 0

தேர்தல் விதிமுறைகள் மீறியது தொடர்பாக இதுவரை 110 புகார்கள் வந்துள்ளதாக ஈரோடு தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி  சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27ம் தேதி இடைத்தேர்தல்  நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில அவர் கூறியதாவது:  தொடர்ந்து புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்கள் யாரும் சிறை வைக்கபடவில்லை. இதுகுறித்து வாக்காளர்களிடம் விசாரணை நடத்தினோம்.  ஆனால் தாங்களாகவேதான் சென்றோம் என தெரிவித்ததாக சொல்கிறார்கள்.இந்திய தேர்தல் ஆணையத்திலிருந்து எங்களிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. நேற்று கூட தேர்தல் நடத்தும் ஏற்பாடுகள் குறித்துதான் வீடியோ  கான்பிரஸ் மீட்டிங் நடந்தது, விதிமுறைகள் மீறியது குறித்து எங்களிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 48.6 லட்சம் ரூபாய் வரை பணம் பிடிக்கப்பட்டது. இவ்வாறு சிவகுமார் தெரிவித்தார்.

Related Post

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் …

Posted by - December 4, 2022 0
பொன்னேரி, பொன்னேரியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக…

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது… மீனவர்களுக்கு எச்சரிக்கை…

Posted by - November 29, 2023 0
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது…

தஞ்சையில் மோதல்: பேருந்தை மற்றொரு பேருந்தின் மீது மோதியதால் பரபரப்பு..

Posted by - November 21, 2022 0
இரண்டு பேருந்திற்க்கும் இடையே யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தஞ்சை: பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கு பேருந்துகளை இயக்குவதில் இரண்டு தனியார் பேருந்து டிரைவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பேருந்து…

டெங்குக் காய்ச்சல் – பள்ளி மாணவன் உயிரிழப்பு..!

Posted by - October 31, 2023 0
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராஜ் பாலாஜி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அடுத்த பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த…

சினிமாவை விட்டு விலகும் முடிவில் விஜய்? அப்போ கடைசி படம் இதுதானா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Posted by - June 18, 2023 0
சினிமாவை விட்டு விலகும் முடிவில் விஜய்? அப்போ கடைசி படம் இதுதானா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய், சினிமாவை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *