காதல் திருமணங்களுக்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயமாக்கப்படும்

107 0

திருமணமும்.. அதிகரிக்கும் பிரச்னையும்

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிக முக்கிய அங்கமாக உள்ளது. காதல், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது என இருவகைகளில் திருமணமானது நடைபெறுகிறது. அதேசமயம் சாதி, மதம், பொருளாதார பின்னணி போன்ற பல காரணங்களால் காதல் திருமணமானது பெரும்பாலான வீடுகளில் நிராகரிக்கப்படுகிறது. ஆனால் காதல் வயப்பட்ட ஆணும், பெண்ணும் கடைசி வரை பெற்றோர்களின் சம்மதத்திற்காக போராடுகின்றனர். இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

இந்திய அரசு சட்டமும் திருமணத்திற்கான வயதை ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனியாக நிர்ணயித்துள்ளது. இப்படியான நிலையில் வீட்டை விட்டு வெளியேறி நடைபெறும் காதல் திருமண வழக்குகள், மோசடியாக நடைபெறும் நிகழ்வுகள், பெற்றோர்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் என பல விஷயங்களை மேற்கொள் காட்டி குஜராத்தில் அவசர சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறி நடைபெறும் காதல் திருமணங்களில் பெரும்பாலானவை பிரச்னையையும் சந்திக்கின்றன. விவாகரத்து தொடங்கி பெற்றோர் ஆதரவு இல்லாமல் போவதால் உயிரை மாய்த்துக் கொள்வது வரை விபரீத முடிவுகளுக்கும் செல்வது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

விரைவில் அவசர சட்டம்

இந்த நிலையில் காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் சம்மதம் அவசியம் என்ற அவசர சட்டத்தை விரைவில் குஜராத் மாநில அரசு கொண்டு வரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு முன்மொழியப்பட்ட இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரும் எனவும், இந்த சட்டத்தைக் கொண்டு வந்த முதல் மாநிலமாக குஜராத் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த அவசர சட்டத்துக்கு அந்த மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ஒரு மனதாக ஆதரவைத் தெரிவித்துள்ளது முரண்பாடாகவும், சுவாரஸ்யமானதாகவும் மாறியுள்ளது.

தங்களுக்குத் தெரிவிக்காமல் திருமணம் செய்து கொள்ளும்போது பெற்றோர்கள் கைவிடப்பட்டவர்களாக உணர்கிறார். அதனை தவிர்க்க ஒரு சட்ட கட்டமைப்பு தேவை என பாஜக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளால் அவர்களின் வாழ்க்கை மற்றும் குடும்பங்களின் சமூக நிலையும் பாதிக்கப்படுகிறது.

ஒருவேளை வீட்டை விட்டு வெளியேற திருமணம் செய்ய நினைத்து காவல்துறையை அணுகும்பட்சத்தில் மணப்பெண்ணின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட முகவரிக்கு முறையான அறிவிப்பு அனுப்பப்பட வேண்டும். பின் பெற்றோர் பதிலளிக்க அல்லது ஆட்சேபனைகள் தெரிவிக்க ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

— செய்தியாளர், PixelTamil

Related Post

கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து திருமணம் செய்த ராணுவ வீரரை உயிரோடு எரித்து கொன்ற மனைவி

Posted by - June 8, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், பூஜாரி வாரி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36). ராணுவ வீரர். இவரது மனைவி மம்தா. இவர்கள் இருவரும் கல்லூரியில்…

அலார்ட் மக்களே.. ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது.. ரிசர்வ் வங்கி அதிரடி!

Posted by - July 30, 2024 0
இந்திய ரிசர்வ் வங்கி தரவுகளின்படி ஆகஸ்ட் மாதம் வங்கிகள் 14 நாட்கள் இயங்காது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. அந்த நாட்கள் எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்கும் இயங்காது…

சிறுவனை கொன்ற கல்நெஞ்ச தாயுடன் பயணம்: திக்… திக்… அனுபவங்களை பகிர்ந்த கார் டிரைவர்

Posted by - January 13, 2024 0
பெங்களூரு: பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெசிடன்சி ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுசனா சேத்(வயது 39). இவரது கணவர் வெங்கட்ராமன். கருத்து வேறுபாடு காரணமாக…

டெல்லியில் பட்டப்பகலில் வழிப்பறி சம்பவம்: இருவர் கைது- போலீஸ் விசாரணை

Posted by - June 27, 2023 0
டெல்லி சாந்தினிசவுக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருபவர் பட்டேல் சஜன் குமார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் சென்றார். செங்கோட்டை…

கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்து ஆசி வழங்கிய கணவன்

Posted by - July 8, 2023 0
பீகார் மாநிலம் நவாடா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய கணவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *