டெல்லியில் பட்டப்பகலில் வழிப்பறி சம்பவம்: இருவர் கைது- போலீஸ் விசாரணை

233 0

டெல்லி சாந்தினிசவுக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருபவர் பட்டேல் சஜன் குமார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் சென்றார். செங்கோட்டை அருகே இருந்து தனியார் நிறுவன வாடகை காரில் அவர் புறப்பட்டார். பிரகதி மைதான சுரங்கப்பாதை பகுதி அருகே கார் சென்று கொண்டிருந்தது.டெல்லியில் பட்டப்பகலில் வழிப்பறி சம்பவம்: இருவர் கைது- போலீஸ் விசாரணை | Two  arrested - Police investigation Robbery incident in Delhi

அப்போது அந்த காரை 2 மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் பின் தொடர்ந்தது. கார் வளைவில் திரும்பும்போது அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களை முன்னாள் நிறுத்தி வழிமறித்தது. 2 மோட்டார் சைக்கிளிலும் 4 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். அதில் 2 பேர் காரை நெருங்கி அதில் இருந்த சஜன்குமார் மற்றும் டிரைவரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணப்பையை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

பட்டப்பகலில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. ரூ.2 லட்சம் பணம் கொள்ளை போய் இருந்தது பின்னர் தெரிய வந்தது. சுரங்கப் பாதையில் பொருத்தப்பட்டு இருந்த கேமிராவில் இந்த கொள்ளை சம்பவம் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக திலக் மார்க் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டு விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், இந்த சம்பவத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்ற நபர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை சுற்றி வளைக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனாவை ராஜினாமா செய்யக் கோரினார். இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், “துணை நிலை ஆளுநர் பதவி விலக வேண்டும்.

டெல்லி மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை வழங்கக்கூடிய ஒருவரை வழி செய்யுங்கள். மத்திய அரசால் டெல்லியை பாதுகாப்பாக மாற்ற முடியவில்லை என்றால், அதை எங்களிடம் ஒப்படையுங்கள். ஒரு நகரத்தை அதன் குடிமக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பாக மாற்றுவது என்று நாங்கள் உங்களுக்கு காட்டுவோம்” என்று ட்வீட் செய்தார்.

 

Related Post

ChatGPT Image Mar 26 2026 05 38 30 PM

மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு?

Posted by - March 26, 2026 0
மேற்காசிய போர் காரணமாக பெட்ரோல், டீசல், எரிபொருள் தட்டுப்பாடு போன்ற தகவல்கள் பரவிய நிலையில், அடுத்த சில நாட்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்…

ChatGPT எப்படி நமக்கு உதவும்?ChatGPT AI – உங்கள் கையிலும் இப்போது!

Posted by - December 20, 2025 0
இன்றைய டிஜிட்டல் உலகில், Artificial Intelligence (AI) ஒரு முக்கிய கருவியாக வளர்ந்து வருகிறது. அதில் ChatGPT ஒரு பிரபலமான AI மெஷின் ஆகும். தமிழர்கள் குறிப்பாக…

ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!

Posted by - July 17, 2025 0
இதன்மூலம் சுமார் 36 கோடி ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் பயனர்கள், இலவசமாக Perplexity வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏர்டெல் பயனாளர்களுக்கு 1 ஆண்டுக்கு செயற்கை நுண்ணறிவு…

கேரளாவில் 6 வயது மகளை கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை…

Posted by - June 9, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் மாவேலிக்கரையை அடுத்த புன்னமூடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 38). இவருடைய மனைவி வித்யா. இந்த தம்பதியின் ஒரே மகள்…
annamalai

‘சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 3-வது மொழியை கட்டாயம் ஆக்குவதா?’ – மத்திய அரசுக்கு அண்ணாமலை எதிர்ப்பு

Posted by - May 26, 2026 0
சென்னை: “சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த கல்வியாண்டில் இருந்தே மூன்று மொழிகளைக் கட்டாயமாக்கியுள்ள புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *