”தீபாவளிக்கு பரிசு காத்திருக்கு”சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு

100 0

ஜிஎஸ்டி வரி குறைப்புக்கான நேரம் வந்துவிட்டதாகவும், இதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த மாற்றம் சிறு, குறு தொழில்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பெரும் பலன் அளிக்கும் என்றார்

தீபாவளி அன்று நடுத்தர மக்களுக்கு பெரிய தீபாவளி பரிசு காத்திருப்பதாக பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.

சுதந்திர தின விழா

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடும் நிலையில், தேசியத் தலைநகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் 12-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

தீபாவளி பரிசு காத்திருக்கு:

அப்போது பேசிய அவர்  தீபாவளி அன்று மக்களுக்கு பெரிய பரிசு காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ஜிஎஸ்டி வரி குறைப்புக்கான நேரம் வந்துவிட்டதாகவும், இதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த மாற்றம் சிறு, குறு தொழில்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பெரும் பலன் அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

சர்வதேச விண்வெளி சாதனை

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயணம் செய்து திரும்பி, நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் என மோடி பாராட்டினார். விரைவில் இந்தியா தனது சொந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இளைஞர்களுக்கான புதிய திட்டம்:

பிரதமர் மோடி இளைஞர்களுக்காக ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார். ” பிரதமரின் விகாசித் பாரத் யோஜனா இன்று, ஆகஸ்ட் 15 முதல் செயல்படுத்தப்படுகிறது. அரசாங்கத்தால் ரூ.15,000 வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.

பாக் எச்சரிக்கை:

மேலும் பேசிய பிரதமர் “வேறொருவரின் கோட்டைக் குறைக்க நம் சக்தியை வீணாக்கக் கூடாது, நம் சொந்த கோட்டை நீட்டிக்க நம் முழு சக்தியையும் பயன்படுத்த வேண்டும். இதைச் செய்தால், உலகமும் நம் பலத்தை ஏற்றுக்கொள்ளும்”

“நமது நாடு பல தசாப்தங்களாக பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது. இப்போது நாம் ஒரு புதிய இயல்பு நிலையை ஏற்படுத்தியுள்ளோம். பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளுக்கு பலம் கொடுப்பவர்களையும் நாங்கள் இனி வேறுபடுத்திக் கருத மாட்டோம். அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது” என்று பிரதமர் மோடி கூறினார்.

“ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயக்கூடாது என்று இந்தியா முடிவு செய்துள்ளது” என்று பாகிஸ்தானை எச்சரித்தார் பிரதமர் மோடி.

“ஆபரேஷன் சிந்தூரில் நீங்கள் தன்னம்பிக்கை மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைக் கண்டீர்கள், அவை எங்களிடம் உள்ளன, அவை எதிரியை ஒரு நொடியில் அழித்துவிட்டன. நாங்கள் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இல்லாவிட்டால், மற்றவர் உங்களுக்கு உதவி செய்வாரா இல்லையா என்று நாங்கள் கவலைப்பட்டிருப்போம், ஆனால் எங்கள் சுயசார்புதான் இந்த நடவடிக்கையை எங்கள் சொந்த திறனின் பலத்தில் மேற்கொண்டோம், அதன் முடிவுகளை நீங்கள் காண்கிறீர்கள்” என்றூ தனது உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார். 

Related Post

சிவராத்திரிக்கு முன்பு கனவில் பாம்பு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Posted by - February 24, 2025 0
Mahasivarathri 2025 | சிவனுக்கு உகந்த நாளான சிவராத்திரி நாளில் பலரும் விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள். இப்படி சிறப்பு வாய்ந்த இந்த நாளுக்கு முன்பு உங்கள்…

பெங்களூரு ரெயில் நிலையத்தில் கொலை செய்து டிரம்மில் அடைத்து வீசப்பட்டது பீகார் இளம்பெண்

Posted by - March 17, 2023 0
பெங்களூரு: பெங்களூரு பையப்பனஹள்ளி சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் முனையத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் கடந்த 13-ந் தேதி காலையில் ஒரு டிரம் கிடந்தது. அதில், ஒரு…

துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

Posted by - August 20, 2025 0
புதுடில்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.15வது துணை ஜனாதிபதியை…

கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்து ஆசி வழங்கிய கணவன்

Posted by - July 8, 2023 0
பீகார் மாநிலம் நவாடா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய கணவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *