சிவராத்திரிக்கு முன்பு கனவில் பாம்பு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

248 0

Mahasivarathri 2025 | சிவனுக்கு உகந்த நாளான சிவராத்திரி நாளில் பலரும் விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள். இப்படி சிறப்பு வாய்ந்த இந்த நாளுக்கு முன்பு உங்கள் கனவு பாம்பு வந்தால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்..!

பொதுவாகவே பிரதோஷம், சிவராத்திரி சிவனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. பெண்களுக்கு 9 ராத்திரி நவராத்திரி என்றும், ஆண்களுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்றும் புராணங்கள் கூறுகிறது. இந்த சிவராத்திரி நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.இந்து மத நம்பிக்கையின் அடிப்படையிலும், கனவு சாஸ்திரத்தின் படி எதிர்காலத்தில் நடக்கும் சில விஷயங்கள் நம் கனவில் வரும் என்று சொல்லப்படுகிறது. அவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டால், வரப்போகும் ஆபத்துக்களைத் தவிர்க்கலாம் என்றும் கருதப்படுகிறது. சில சமயங்களில் அந்த கனவுகள் சுப அறிகுறிகளாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமான் கனவில் முன்கூட்டியே அறிவுரைகளை வழங்குவதாகவும் கூறப்படுகிறது.இந்து நாட்காட்டியின் படி, மகாசிவராத்திரி, மாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தின் பதினான்காவது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, மகாசிவராத்திரி பிப்ரவரி 26, புதன்கிழமை வருகிறது. அன்றைய இரவு தான் கண்விழித்து விரதம் இருப்பார்கள். இந்தத் தேதியில் ருத்ராபிஷேகம் செய்வதால், சிவபெருமான் விரைவில் மகிழ்ச்சி அடைகிறார். விரதம், வழிபாடு, விழிப்பு, சிவ நாமத்தை தியானம் செய்தல் ஆகியவை மூலம் சிவனின் அருளை பெறலாம்.அபிஷேகம் : மகாசிவராத்திரிக்கு முன், சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால், சிவபெருமான் மகிழ்ச்சி அடைந்து, அந்த நபரின் அனைத்து கஷ்டங்களையும் விரைவில் நீக்குவார் என்று அர்த்தம். மேலும் இந்த கனவு வாழ்க்கையில் மகிழ்ச்சியின் வருகையைக் குறிக்கிறது.வில்வ இலைகள்: சிவராத்திரிக்கு முன்பு உங்கள் கனவில் வில்வ இலைகளோ, அல்லது வில்வ மரத்டை கண்டால் நிதி பிரச்சனைகளை தீரும் என்று சொல்லப்படுகிறது.ருத்ராட்சம்: ருத்ராட்சம் மிகவும் மங்களகரமானதாகும். பொதுவாகவே ருத்ராட்சம் கனவில் வருவது மிகவும் சிறப்பாகும். அதிலும், சிவராத்திரி முன்பு கனவில் தோன்றினால் துன்பங்கள் விலகி நோய் நொடியின்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம் என்று சொல்லப்படுகிறது.கருப்பு சிவலிங்கம்: கருப்பு சிவலிங்கம் சிவபெருமானின் சின்னம். மஹாசிவராத்திரிக்கு முன் உங்கள் கனவில் கருப்பு சிவலிங்கத்தைக் கண்டால், உங்கள் வேலையில் விரைவில் பதவி உயர்வு கிடைக்கும் என்று அர்த்தம்.பாம்பு : மகாசிவராத்திரிக்கு முன் பாம்பு அல்லது பாம்புகளின் புற்றுகளை கண்டால், அது உங்கள் செழிப்பு மற்றும் செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.திரிசூலம்: சிவன் எப்போதும் திரிசூலம் வைத்திருப்பார். திரிசூலத்திற்கு 3 விளிம்புகள் உள்ளன. அவை காமம், கோபம் மற்றும் பேராசை ஆகியவற்றைக் குறிக்கின்றன. படைப்பின் ஒற்றுமையை நிலைநாட்ட சிவபெருமான் திரிசூலத்தைப் பயன்படுத்துகிறார். மஹாசிவராத்திரியின் போது இந்த கனவு வந்தால், மகாதேவன் உங்கள் எல்லா கஷ்டங்களையும் அழிக்கப் போகிறார் என்று அர்த்தம்.

maha shivratri
shivaratri 2025
maha shivratri 2025
shivratri 2025
maha shivaratri 2025
महाशिवरात्रि
महाशिवरात्रि कब है

Related Post

சாப்பிட மறுத்து அடம்பிடித்ததால் ஆத்திரம்: கரண்டியால் அடித்ததால் குழந்தை பலி- வீட்டின் பின்புறம் புதைத்த தாய்

Posted by - July 24, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துவாடாவை சேர்ந்தவர் சினேகா (வயது 18). இவரது 2 வயது குழந்தை கீதா ஸ்ரீ. கடந்த 17-ந் தேதி மதியம் சினேகா…

மத்திய பட்ஜெட் சிறு, குறு தொழில்களுக்கு எப்படி? : என்ன சொல்கிறார்கள் தொழிலாளர்கள்?

Posted by - February 1, 2025 0
 பட்ஜெட் அறிவிப்பின்படி, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு 10 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் வெளியாகியிருக்கும் அறிவிப்புகள் சிறு குறு தொழிலார்களுக்கு எந்த…

கடனை திருப்பி கொடுக்காவிட்டால் வீடு தேடி வரும் ‘சாக்லேட்’ பரிசு

Posted by - September 21, 2023 0
மும்பை: கடன் தவணையை உரிய தேதியில் திருப்பித் தராத வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு சென்று ‘சாக்லேட்’ அளிக்கும் நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி…

கூவி கூவி விற்பனை..! ஓயாமல் தொல்லை செய்யும் வங்கிகள் – கிரெடிட் கார்ட்களின் டார்க் சீக்ரெட்ஸ்

Posted by - March 11, 2025 0
வங்கிகள் விநியோகம் செய்யம் கிரெடிட் கார்ட்களின் பின்னணியில் உள்ள பலரும் அறியாதா, வியாபார திட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். வங்கிகளின் லாபத்தின் ஆதாரமாக கிரெடிட் கார்ட்கள்…

இரக்கமின்றி பிஞ்சு மகனை பெண் தொழில் அதிபர் கொன்றது எப்படி?: போலீஸ் வெளியிட்ட திடுக் தகவல்கள்

Posted by - January 11, 2024 0
பெங்களூரு: பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெசிடன்சி ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுசனா சேத் (வயது 39). இவரது கணவர் வெங்கட்ராமன். இவர்கள் இருவரும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *