FEATURED
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது .
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறிருப்பதாவது :
அரசுப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு வெளியிட்ட அறிவிப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 50 வயதைக் கடந்த 1.06 லட்சம் ஆசிரியர்களுக்கு16 வகையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது .ஒரு ஆசிரியருக்கு ருபாய் 1000 வீதம் நிதி ஒதுக்கி, தேசிய ஆசிரியர் நலநிதியில் இருந்து இச்செலவினத்தை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.