ஓபிஎஸ் என்பது ஒரு முடிந்து போன கதை… ஒட்டுமொத்த இயக்கமே இபிஎஸ் பின்னால் இருக்கு ; கடம்பூர் ராஜு!!

199 0

ஓபிஎஸ் என்பது ஒரு முடிந்து போன கதை என்றும், ஒட்டுமொத்த இயக்கமே எடப்பாடியார் பின்னால் உள்ளது என தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் இழப்பீட்டு தொகையும், நிவாரணமும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று அவர் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :- கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அதிகப்படியான மழைப்பொழிவு, நூற்றாண்டு காலம் இல்லாத அளவு தூத்துக்குடி மாவட்டம் சந்தித்தது குறிப்பாக காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை பதிவானது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக 50 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன் விளைவாக மாவட்டத்தின் பல இடங்களில் அதிகமான கண்மாய்கள் உடைப்பு, சாலைகள் சிதலமடைந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் தீவு போல துண்டிக்கப்பட்டு மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

கோடநாடு என்பது தனிப்பட்ட சொத்து அம்மா அவர்கள் அம்மா அவர்களோடு இணைந்து சேர்ந்து வாங்கப்பட்ட டிரஸ்டின் மூலமாக அதில் அவர்கள் உறுப்பினராக இருக்கின்ற காரணத்தினால் அங்கே சென்று மேம்பாட்டு பணிகளை செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது. அம்மாவின் மேல் உள்ள விசுவாசத்தின் காரணமாக இப்பணியை செய்தால் நல்லது தான். அம்மாவிற்கு யார் பெருமை சேர்த்தாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

ஓபிஎஸ் என்பது ஒரு முடிந்து போன கதை. நீதிமன்றத்தில் அனைத்து தீர்ப்புகளும் வந்தாகிவிட்டது. ஒட்டுமொத்த இயக்கமே எடப்பாடியார் பின்னால் உள்ளது. 100 சதவீத தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பின்னால் இருக்கின்ற நேரத்தில் யாரை வைத்து அவர் (ops) அரசியல் செய்யப் போகிறார், என்றார்.

Related Post

யாருக்கும் பிடிக்காத 5 ராசிக்காரர்கள்: யார் யார்னு தெரியுமா?

Posted by - October 16, 2023 0
பொதுவாகவே ஒருவருக்கு ஒருவர் நடை உடை பாவனை மற்றும் பழக்கவழக்கஙகள் என அனைத்தும் வேறுபடுகின்றது. ஒருவர் மற்றவரை ஈர்க்க வேண்டும் என்றால் பொதுவாகவே அனைவரும் விரும்பும் சில…

நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

Posted by - September 13, 2023 0
உடுமலை: நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் நோய் தமிழகத்தில் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள்…

விவசாயிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த கும்பல்- அதிகாரிகள் போல் நடித்து பணத்துடன் ஓட்டம்

Posted by - July 6, 2023 0
மொடக்குறிச்சி: தேனி மாவட்டம் உத்தம பாளையம் தாலுக்கா சின்ன ஓலாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி (67). விவசாயி. இவரிடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள…

வேண்டிய வரங்களைத் தரும் குலதெய்வ விரத வழிபாடு

Posted by - December 2, 2022 0
குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும். ஒருவருக்கு குல தெய்வம், இஷ்ட தெய்வம், வழிபடு…

தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்… கனிமொழிக்கு அண்ணாமலை பதில்…!

Posted by - April 28, 2023 0
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துககொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்திய விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *