குடவாசல் அருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்… வருவாய்த்துறையினரை கண்டித்து திடீர் சாலை மறியல்…!!

188 0

திருவாரூர் அருகே குடவாசல் பேருந்து நிலையத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை வருவாய்த்துறை, காவல்துறை பிடுங்கியதால் பரபரப்பு நிலவியது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் திருவாரூர் வடக்கு மாவட்டம் தெற்கு ஒன்றிய , நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குடவாசல் பேருந்துநிலையம் முன்பு, முன்னாள் மாவட்ட அமைப்பாளர் இனியன் நினைவாக அமைக்கப்பட்டு இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகம்பத்தில் கட்சிக்கொடி ஏற்றி வைத்திருந்தனர். நேற்று அதிகாலை கொடிகம்பம் பிடுங்கப்பட்டு காணாமல் போனது. இதனை வருவாய்த்துறையினர், காவல்துறையினர் அகற்றியதாக தெரிவித்திருந்தனர்.

 

சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் குடவாசல் காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மாறன் பேச்சுவார்த்தையில் நடத்தியதில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது காவல்துறையினருடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திருச்சியில் மாநாடு நிறைவடைந்த உடன் வரும் 31. 1 .2024 அன்று குடவாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தில் நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் என்டி. இடிமுரசு, நன்னிலம் சட்டமன்ற தொகுதி செயலாளர் மயிலையன், மாநில துணைச்செயலாளர் திருமாறன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் அமுதாஇனியன் மற்றும் நிர்வாகிகள் ஆ.தமிழ், உ.அமுதவளவன், கோவி.கணேசன் பால்கிட்டு, உலகநாதன், அப்புவினோத், செல்லூர்அறவாணன், சுடர்வளவன், சரவணன், மஞ்சக்குடி செந்தில் , நேருநகர் ராஜா, மாரியப்பன், இபி .செல்வராஜ் , ஆசிரியர் செல்வராஜ் உட்பட ஏராளமான கலந்துகொண்டனர்.

Related Post

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: திண்டுக்கல், தென்காசியில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை!

Posted by - August 20, 2025 0
சென்னை: திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்பட 10 இடங்களில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.…

புதுச்சேரி

Posted by - April 12, 2022 0
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வரும் 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும்…

ஆயுர்வேதத்தின் படி தொப்புளில் இந்த எண்ணெய் வைப்பது உங்களுக்கு பல அற்புத நன்மைகளை கொடுக்குமாம்…!

Posted by - December 13, 2023 0
பழமையான இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதம், நாபிகா மர்மா என்றும் அழைக்கப்படும் தொப்புளை பல உடல் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்ட ஒரு முக்கிய இடமாக கருதுகிறது. தொப்புளில் எண்ணெய்…

தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள 10 முக்கிய அறிவிப்புகள்?

Posted by - February 19, 2024 0
2024–25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 2024–25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் இடம்பெற்றுள்ள …

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *