குஷ்புவிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் விஜய் – எதற்க்கு தெரியுமா..?

184 0

திரைப்படத்தில் ஏற்பட்ட சில தவிர்க்க முடியாக சூழலால் கோபமாக இருந்த நடிகை குஷ்புவிடம் நடிகர் விஜய் வருத்தம் தெரிவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமே வாரிசு . விஜய் நடிப்பில் உருவான இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியிருந்தார்.

சரத்குமார், ரஷ்மிகா மந்தனா, ஷாம், பிரபு எஸ் ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ் , யோகி பாபு , குஷ்பு உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் கமிட்டாகி நடித்திருந்தது .

மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் பட்டய கிளப்பியதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை குஸ்பு வாரிசு படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அப்படி அவர் கூறியதாவது :

வாரிசு படத்தில் எனக்கும், விஜய்க்கும் மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகள் படமாக்கப்பட்டன.
வேறு யாருடனும் எனக்கு அந்தப் படத்தில் காட்சிகள் இல்லை. ஆனால், அவை நீக்கப்பட்டது எனக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது .

எனக்கும் விஜய்க்கும் இடையிலான அந்த காட்சிகள் படமாக்கப்பட்ட போது நானும் விஜய்யும் உண்மையாகவே அழுதுவிட்டோம் அப்படிப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டது உண்மையாகவே வலித்தது.படம் திரையரங்குங்களில் வெளியான உடன் படக்குழுவுடன் ஏற்பட்ட சந்திப்பின்போது நடிகர் விஜய் , இயக்குநர் வம்சி ஆகியோர் என்னிடம் வருத்தம் தெரிவித்தனர் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

Related Post

விஜய் சேதுபதி எடுத்த முடிவு, கோபத்தில் ரசிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா

Posted by - September 29, 2023 0
விஜய் சேதுபதி ஒரு பக்கம் ஹீரோ, மறுபக்கம் வில்லன் என பட்டையை கிளப்பி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெற்றிபெற்ற…

விளம்பரங்களை காட்டிலும் படத்தின் கதை தான் முக்கியம்.. அருண் விஜய் பதிவு

Posted by - June 12, 2023 0
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘போர் தொழில்’. இப்படத்தில் சரத்குமார், நிகிலா…

மகுடத்தை சூடியது பொன்னியின் செல்வன்-2 ..

Posted by - April 29, 2023 0
கல்கியின் எழுத்தில் உருவான காவியம் பொன்னியின் செல்வன். இதை இயக்குனர் மணிரத்னம் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம்,…

ஒரு தேங்காய் பன்னு சாப்பிட அலைவேன்.. எமோஷனலாக பேசிய நடிகர் சூரி..

Posted by - May 12, 2025 0
சூரி நகைச்சுவை நடிகராக பிரபலமாகி, இன்று கதாநாயகனாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் சூரி. இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் மாமன். எமோஷனல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பிரஷாந்த்…

தங்கலான் படத்தின் ஒடிடி ரிலீஸிற்கு வந்த புதிய சிக்கல்.. ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கு!

Posted by - October 7, 2024 0
திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *