சிவராத்திரிக்கு முன்பு கனவில் பாம்பு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

249 0

Mahasivarathri 2025 | சிவனுக்கு உகந்த நாளான சிவராத்திரி நாளில் பலரும் விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள். இப்படி சிறப்பு வாய்ந்த இந்த நாளுக்கு முன்பு உங்கள் கனவு பாம்பு வந்தால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்..!

பொதுவாகவே பிரதோஷம், சிவராத்திரி சிவனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. பெண்களுக்கு 9 ராத்திரி நவராத்திரி என்றும், ஆண்களுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்றும் புராணங்கள் கூறுகிறது. இந்த சிவராத்திரி நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.இந்து மத நம்பிக்கையின் அடிப்படையிலும், கனவு சாஸ்திரத்தின் படி எதிர்காலத்தில் நடக்கும் சில விஷயங்கள் நம் கனவில் வரும் என்று சொல்லப்படுகிறது. அவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டால், வரப்போகும் ஆபத்துக்களைத் தவிர்க்கலாம் என்றும் கருதப்படுகிறது. சில சமயங்களில் அந்த கனவுகள் சுப அறிகுறிகளாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமான் கனவில் முன்கூட்டியே அறிவுரைகளை வழங்குவதாகவும் கூறப்படுகிறது.இந்து நாட்காட்டியின் படி, மகாசிவராத்திரி, மாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தின் பதினான்காவது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, மகாசிவராத்திரி பிப்ரவரி 26, புதன்கிழமை வருகிறது. அன்றைய இரவு தான் கண்விழித்து விரதம் இருப்பார்கள். இந்தத் தேதியில் ருத்ராபிஷேகம் செய்வதால், சிவபெருமான் விரைவில் மகிழ்ச்சி அடைகிறார். விரதம், வழிபாடு, விழிப்பு, சிவ நாமத்தை தியானம் செய்தல் ஆகியவை மூலம் சிவனின் அருளை பெறலாம்.அபிஷேகம் : மகாசிவராத்திரிக்கு முன், சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால், சிவபெருமான் மகிழ்ச்சி அடைந்து, அந்த நபரின் அனைத்து கஷ்டங்களையும் விரைவில் நீக்குவார் என்று அர்த்தம். மேலும் இந்த கனவு வாழ்க்கையில் மகிழ்ச்சியின் வருகையைக் குறிக்கிறது.வில்வ இலைகள்: சிவராத்திரிக்கு முன்பு உங்கள் கனவில் வில்வ இலைகளோ, அல்லது வில்வ மரத்டை கண்டால் நிதி பிரச்சனைகளை தீரும் என்று சொல்லப்படுகிறது.ருத்ராட்சம்: ருத்ராட்சம் மிகவும் மங்களகரமானதாகும். பொதுவாகவே ருத்ராட்சம் கனவில் வருவது மிகவும் சிறப்பாகும். அதிலும், சிவராத்திரி முன்பு கனவில் தோன்றினால் துன்பங்கள் விலகி நோய் நொடியின்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம் என்று சொல்லப்படுகிறது.கருப்பு சிவலிங்கம்: கருப்பு சிவலிங்கம் சிவபெருமானின் சின்னம். மஹாசிவராத்திரிக்கு முன் உங்கள் கனவில் கருப்பு சிவலிங்கத்தைக் கண்டால், உங்கள் வேலையில் விரைவில் பதவி உயர்வு கிடைக்கும் என்று அர்த்தம்.பாம்பு : மகாசிவராத்திரிக்கு முன் பாம்பு அல்லது பாம்புகளின் புற்றுகளை கண்டால், அது உங்கள் செழிப்பு மற்றும் செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.திரிசூலம்: சிவன் எப்போதும் திரிசூலம் வைத்திருப்பார். திரிசூலத்திற்கு 3 விளிம்புகள் உள்ளன. அவை காமம், கோபம் மற்றும் பேராசை ஆகியவற்றைக் குறிக்கின்றன. படைப்பின் ஒற்றுமையை நிலைநாட்ட சிவபெருமான் திரிசூலத்தைப் பயன்படுத்துகிறார். மஹாசிவராத்திரியின் போது இந்த கனவு வந்தால், மகாதேவன் உங்கள் எல்லா கஷ்டங்களையும் அழிக்கப் போகிறார் என்று அர்த்தம்.

maha shivratri
shivaratri 2025
maha shivratri 2025
shivratri 2025
maha shivaratri 2025
महाशिवरात्रि
महाशिवरात्रि कब है

Related Post

பயங்கரவாதிகளிடம் சிக்கி துடிதுடித்து மரணித்த மணிப்பூர் மாணவன், ”நீட்” மாணவி- உருக்கமான தகவல்கள்!

Posted by - September 27, 2023 0
இம்பால்: வடகிழக்கு இந்திய மாநிலங்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது மணிப்பூர் மாணவர் மற்றும் மாணவியின் படுகொலைகள். பள்ளி சிறுவர்களை கடத்திச் சென்று பயங்கரவாதிகள் சித்ரவதை செய்து…

தட்கல் டிக்கெட் முன்பதிவில் OTP கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Posted by - December 25, 2025 0
இந்தியா ரயில்வே, தட்கல் (Tatkal) டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இனி தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது OTP (One…

பழச மறந்துடுங்க.. 7 நாட்களுக்கு இலவசம்.. மொபைலுக்கு தானாக ரீசார்ஜ்..

Posted by - August 2, 2024 0
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தினாலும், கஸ்டமர்களுக்கு உரிய நேரத்தில் சலுகைகளை கொடுப்பதற்கு…

ஒடிசாவில் இன்று சரக்கு ரெயில் தடம் புரண்டது

Posted by - June 5, 2023 0
ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று ரெயில்கள் மோதி 275 பேர் உயிரிழந்தனர். சீரமைப்பு பணி முடிவடைந்து சுமார் 51 மணி நேரத்திற்குப் பின் பஹனாகா பகுதியில் தற்போது…

‘சிபில் ஸ்கோர்’ பிரச்சினையை தீர்க்க… – சு.வெங்கடேசன் எம்.பி முன்வைக்கும் யோசனை

Posted by - June 27, 2025 0
மதுரை: ‘சிபில் ஸ்கோர்’ முறையில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க, கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை ரிசர்வ் வங்கி தீர்மானிக்க வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *