’’சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா?’’ திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்

107 0

உள் பாவாடை கிடையாதா? சிவி சண்முகத்தை அடுத்து திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டித்து நடைபெற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா என்று கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

திமுக ஆட்சியின்கீழ் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வழக்குகள், போதைப் பொருள் பிரச்சினைகள் குறித்து அதிமுகவினர் இன்று (மார்ச் 17) மாநிலம் முழுவதும் கண்டனப் போராட்டத்தை நடத்தினர்.

சி.வி.சண்முகம் சர்ச்சைப் பேச்சு

சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கிடையே விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

அவர் கூறும்போது, ’’அப்துல் கலாம் கனவு காணுங்கள் என கூறினார். ஆனால் முதல்வர் ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறோம் என கூறுகிறார். “நயன்தாரா” வேண்டும் என்றால் முதல்வர் நிறைவேற்றுவாரா? “நயன்தாராவை” திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்பார்கள் முதல்வர் நிறைவேற்றுவாரா.? என்று கேட்டது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கிடையே தவறுதலாக நயன்தாராவின் பெயர் உச்சரிக்கப்பட்டதாகவும் அதில் எந்த உள் நோக்கமும் இல்லை எனவும் சி.வி. சண்முகம் தெரித்துள்ளார்.

சீனுக்கு வந்த திண்டுக்கல் சீனிவாசன்

சி.வி. சண்முகம் சர்ச்சை ஓய்வதற்குள் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சும் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது.

மணிக்கூண்டு பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், ’’பணத்தை வைத்து திமுக மக்களை வீழ்த்துகிறது. ஏற்கெனவே 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். பிறகு ஹாட் பாக்ஸ் கொடுத்தார்கள். பின்பு சேலை கொடுத்தார்கள்.

பாவாடை இல்லாமல் எப்படி கட்டுவது?

பெண்கள் எல்லோரும், ’’பாவாடை இல்லாமல் எப்படி கட்டுவது?’’ என்று கேட்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். பணத்தை வைத்து வீழ்த்திவிட நினைக்கிறார்கள் என்று பேசி இருந்தார்.

இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டித்து நடைபெற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்களே பெண்களுக்கு எதிராகப் பேசுவதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

”பாக்கெட்டில் பெண் கட்சி தலைவி புகைப்படம் இருக்கும், ஆனால் பேசும் பேச்செல்லாம் வக்கிரம்” என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Related Post

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் வாக்குரிமை: திருமாவளவன் எச்சரிக்கை! ஸ்டாலின் நடவடிக்கை தேவை!

Posted by - August 2, 2025 0
எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும் – திருமாவளவன் விழுப்புரம்: வடமாநிலத்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின அரசியல் தலைவர்களாக…

திமுகவின் மெகா பிளான்…

Posted by - December 17, 2025 0
கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த பாஜக…

திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு – இது தான் காரணமா.?

Posted by - November 4, 2025 0
சர்ச்சை பேச்சு காரணமாக திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமும்…

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

Posted by - August 18, 2025 0
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாதக பொதுக் கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. செஞ்சிக்கோட்டையை மராட்டிய மன்னர்கள் ஆண்ட கோட்டை…

எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பதும் தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Posted by - September 13, 2025 0
ஆளும் கட்சி கூட்டணி கட்சிகளுக்கு சிறப்பு அனுமதியும், எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பதும் தான் திராவிட மாடல் அரசு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *