“சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்“ – நயினாரை அதிர்ச்சியில் உறையவைத்த பாஜக தொண்டர்

168 0

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், மக்கள் சோறு போட தயாராக இருப்பதாகவும், ஆனால் ஓட்டு போட மாட்டோம் என்று கூறுவதாகவும் தொண்டர் ஒருவர் தெரிவித்ததால், அவர் அதிர்ச்சி அடைந்தார்.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும், தேர்தல் வேலைகளை தொடங்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், பாஜக பூத் கமிட்டி ஆய்வுக்கு வந்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், அக்கட்சியின் தொண்டர் ஒருவர், சோறு கூட போடுறோ, ஆனா ஓட்டு போட மாட்டோம் என்று மக்கள் கூறுவதாக தெரிவித்து, அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

பாஜக பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரம்

தமிழ்நாட்டில், அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், தேர்தலுக்கான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் பாஜக பூத் கமிட்டி அமைத்து வருகிறது.

இந்நிலையில், விருதுநகரில் பூத் கமிட்டி ஆய்வுக்கு திடீரென சென்றார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். அங்குள்ள ரோசல்பட்டி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே, அவர் பூத் கமிட்டி ஆய்வுக்கு சென்றார்.

“சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டுப் போட மாட்டோம்“

அப்போது, அங்கு வந்திருந்த பாஜக தொண்டர் ஒருவர், “நீங்கள் தேர்தலில் நில்லுங்கள், உங்களுக்கு சாப்பாடு கூட போடுறோம், ஆனா ஓட்டுப் போட மாட்டோம் என எல்லாரும் சொல்றாங்க“ என்று நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தார் நயினார் நாகேந்திரன். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட பாஜக நிர்வாகிகள், அந்த தொண்டரிடம், அதைப் பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம் எனக் கூறி அவரை அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தால் நயினார் அதிர்ச்சியடைந்தாலும், அங்கிருந்த மற்றவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அந்த தொண்டரின் கருத்து மக்களின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிப்பதாக சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.

பொதுவாக இது போன்ற விஷயங்களில் அண்ணாமலை உஷாராக இருப்பார். அவரது அதிரடி நடவடிக்கைகள், பேச்சுக்களால், பாஜக தொண்டர்கள் அவர் அருகில் போவதற்கே யோசிப்பார்கள். ஆனால், நயினார் நாகேந்திரன் அடிப்படையிலேயே மென்மையான போக்கைக் கொண்டவர். இதனால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துவிட்டது. இதற்குப் பிறகாவது, அவர் கொஞ்சம் ஸ்ட்ரிக் ஆஃபீசராக மாறுவாரா என்று பார்க்க வேண்டும்.

தேர்தல் நெருங்கி வருவதால், இதுபோன்ற கட்டெண்ட்டுகளை கொடுக்காமல் இருப்பது கட்சிக்கு நல்லது. என்ன செய்வார் நயினார்.?

 

Related Post

தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி?

Posted by - December 15, 2025 0
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும்…

மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு விஜய் மாநாட்டுக்குப் போனார்களா? – திமுகவுக்கு புளியை கரைக்கும் புள்ளிவிவரம்!

Posted by - October 11, 2025 0
தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, அதற்காக அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கவும், கல்வியில் சிறந்த சாதனையாளர்களை அழைத்து கவுரவிக்கவும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற…

சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் சென்னையில் போராட்டம்!

Posted by - December 17, 2025 0
பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்…

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி: மேட்ரிஸ் – ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

Posted by - March 16, 2026 0
தமிழக அரசி​யல் களம் குறித்து கருத்​துக் கணிப்பு வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் திமுக கூட்​ட​ணியை பின்​னுக்​குத் தள்​ளி, தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ)…

மதுரை மாநாட்டிலாவது திருந்துவாரா விஜய்? பவுன்சர்கள் ஒகே.. ஆனா ரவுண்ட்ஸ் எப்போ? தவெக சம்பவம் செய்யுமா?

Posted by - August 21, 2025 0
மதுரை மாநாட்டின் மூலமாவது தவெக தலைவர் விஜய் தீவிர அரசியலை முன்னெடுப்பாரா? என அவரது கட்சி தொண்டர்களே ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மதுரை மாநாட்டில் விஜய் தனது மாநிலம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *