தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி?

183 0

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனவரி மாதம் மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக தேர்தல்.. பாஜக திவிரம்..

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததில் இருந்தே, தமிழ்நாடு தேர்தலில் பாஜக தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வர முனைப்பு காட்டி தீவிர பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. வலுவான திமுக கூட்டணிக்கு நிகராகவும், அதற்கு சவால் கொடுக்கும் விதமாகவும் தங்களது கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்பதில் டெல்லி பாஜக தலைமை உறுதியாக உள்ளதாம். இதற்காகவே ஓபிஎஸ் மற்றும் டிடிவி ஆகியோருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் தான், பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் பிரதமர் மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பிரதமர் மோடி தமிழகம் வருகை:

இந்நிலையில் வரும் ஜனவரி இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனவரி 13-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. இந்த பயணத்தின் போது, தமிழக விவசாயிகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. அப்படி நடந்தால் தமிழகத்தில் விவசாயிகளுடன் இணைந்து முதல்முறையாக பிரதமர் மோடி கொண்டாடும் பொங்கல் விழாவாக இது இருக்கும். இதுபோக பொங்கல் விழாவை ஒட்டி நடைபெறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கக் கூடும் என கூறப்படுகிறது. டெல்டா சார்ந்த மற்றும் கொங்கு மாவட்டங்களிலும் பிரதமர் பயணம் மேற்கொள்ளக்க்கூடுமாம். கூடுதலாக கூட்டணி கட்சிகளை மேடையேற்றி பிரதமர் மோடி தலைமையில், பொதுக்கூட்டத்தை நடத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். பிரதமரின் இந்த பயணம், கிராமப்புற மக்கள் மற்றும் தமிழகத்தின் கலாச்சார ரீதியான ஒருங்கிணைப்பை இலக்காகக் கொண்ட ஒரு முக்கிய மக்கள் சந்திப்பு முயற்சியாக இருக்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக பாஜக தீவிரம்:

பிரதமர் மோடி வருகையின்போது தேசிய ஜனநாயக கூட்டணி, முழு வடிவம் பெற்றிருக்க வேண்டும் என தமிழக பாஜகவிற்கு தேசிய தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். பாமக, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரையும் கூட்டணியில் ஒருங்கிணைக்க விரும்புகிறதாம். இதன் காரணமாகவே அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் அடுத்தடுத்து டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனராம். மோடி வருகையின்போது கூட்டணி இறுதி செய்யப்படுவதோடு, தொகுதிப் பங்கீட்டையும் கிட்டத்தட்ட உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம். இதனால் பிரதமர் மோடியின் வருகை, தமிழக சட்டமன்ற தேர்தலில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என கருதப்படுகிறது.

Related Post

விஜய் அதிரடி சவால்: நேருக்கு நேர் சந்திக்க வாருங்கள் – நாகையில் விஜய் பேசியது என்ன?

Posted by - September 20, 2025 0
“மக்களே நான் உங்களிடம் பேசக்கூடாதா, வரக்கூடாதா, குறைகளை கேட்க கூடாதா, உங்களுக்காக குரல் கொடுக்கக் கூடாதா நீங்களே சொல்லுங்கள்” – விஜய் தமிழக வெற்றி கழகம் சார்பில்…
Gemini Generated Image gy0uv1gy0uv1gy0u

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Posted by - March 20, 2026 0
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அவருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். டெல்லி சென்றுள்ள…
Generated Image November 19 2025 10 32AM e1763528556825

பிஹார் தோல்வி பிடிக்குள் சிக்கிய காங். – என்ன செய்யப் போகிறது திமுக?

Posted by - November 19, 2025 0
பிஹார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தங்களின் பேரவலிமையைக் கூட்டிக் கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் கட்சி, இப்போது திமுக தரும் இடங்களை மறு பேச்சுப் பேசாமல்…
tvk aiadmk

TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?

Posted by - May 28, 2026 0
தமிழக வெற்றிக் கழகத்தில் அடுத்தடுத்து அதிமுக-வின் முன்னாள் எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் இணைவது தவெக கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒவ்வொரு…

துரோகத்தால் நாறும் சென்னை: தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளையாவது முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி

Posted by - August 7, 2025 0
2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால், தற்காலிகப் பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் ஏழாவது நாளாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *