தாய்கோ வங்கியில் ரூ. 94 லட்சம் மோசடி- 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

197 0

சேலம்:

சேலம் 4 ரோடு அருகே தாய்கோ வங்கி உள்ளது. இங்கு 2010-ம் ஆண்டு தொடங்கி 2020 வரை போலி நககைளை அடகு வைத்து ரூ. 94 லட்சம் மோசடி நடந்தது தெரிய வந்தது. இது குறித்து அப்போதைய வங்கி மேலாளர் தெய்வசிகாமணி என்பவர் சேலம் மாநகர குற்றப்பிரி்வு போலீசில் புகார் அளித்தார்.கோவையில் பண ஆசையை தூண்டி ரூ. 300 கோடிவரை மோசடி - என்ன நடந்தது? - BBC News  தமிழ்

வங்கி நகை மதிப்பீட்டாளரான கருப்பூர் தண்ணீர் தொட்டியை சேர்ந்த சக்திவேல் 60 உள்பட 25 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாருக்கு பயந்த சக்திவேல் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அதன் பிறகு இந்த வழக்கு வணிக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட 16 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

மோசடியில் ஈடுபட்ட ஒருவர் அதற்கான தொகையை செலுத்திவிட்டார். 4 பேர் முன் ஜாமீன் பெற்றுவிட்டனர். மேலும் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்த சின்ன திருப்பதி சரவணன் (53), ரூ.82 ஆயிரம் மோசடி செய்த அரிசிபாளையம் கிேஷார்குமார் (42), 1 லட்சத்து 61 ஆயிரம் மோசடி செய்த புது கல்லாங்குத்து புதூரை சேர்ந்த சுகவேனேஸ்வரன் (42) ஆகிய 3 பேரும் நேற்று கைது செய்ப்பயட்டனர். இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Post

“செய்தி சேனல் ஒளிப்பதிவாளர் மீது கொடூர தாக்குதல்” – கண்டனம் தெரிவித்த அண்ணாமலை

Posted by - March 1, 2024 0
திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தை, தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டதைப் படம்பிடித்த தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது கொடூர…

திண்டுக்கல் அருகே ஊராட்சிப் பணியிலிருந்து நீக்‍க முயன்ற திமுக கவுன்சிலர் – விஷம் குடித்த பணியாளர் மருத்துவமனையில் அனுமதி

Posted by - November 26, 2022 0
திண்டுக்கல் அருகே திமுக கவுன்சிலர் தலையீட்டால் வேலை இழந்த தொழிலாளி எலி மருந்து குடித்து உயிருக்‍கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார். வடமதுரை அடுத்த வி.மேட்டுப்பட்டியை சேர்ந்த…

கொட்டி தீர்த்த கனமழை.. இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் வெள்ளக்காடாக மாறிய சென்னை

Posted by - December 1, 2023 0
ஜி.கே.எம் காலனி ஜம்புலிங்கம் தெருவில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியதால் நோய் தொற்று பரவும் அபாயம்… சென்னையில் 2 ஆவது நாளாக இரவில் கனமழையால் பெய்ததால்…

இன்று அனைத்துக் கட்சி கூட்டம் – சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?

Posted by - March 5, 2025 0
இன்றை அனைத்துக் கட்சி கூட்டத்தில், தொகுதி மறுவரயறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன. அனைத்துக் கட்சி கூட்டம்: சென்னை தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது…

இந்த 6 பழங்களில் ஒன்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்க ஆயுளை அதிகரிக்குமாம்… எப்படி தெரியுமா?

Posted by - December 15, 2023 0
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பழங்கள் அவசியமானவை என்று சிறு வயது முதலே நமது மனதில் பதியவைக்கப்பட்டள்ளது. ஆனால் சில பழங்களை நாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கூடுதல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *