திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு

174 0

தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஜுன் 25ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம், தர்ணாவில் ஈடுபட உள்ளனர்.

தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஜூன் 25ஆம் தேதி பணியை புறக்கணித்து போராட்டம் நடத்த உள்ளதாக அரசு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறை அலுவலர்கள் இணைந்து ஜூன் 25ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம், தர்ணாவில் ஈடுபட உள்ளனர்.

வருவாய்த்துறை அலுவலர்களின் புறக்கணிப்பு போராட்டத்தில் அனைத்து நிலை வருவாய் நிலை அலுவலர்களும் ஈடுபட உள்ளதாகவும் சுமார் 40 ஆயிரம் பேர் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எதற்காக இந்த போராட்டம்?

பணி பாதுகாப்பு, காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த விவகாரத்தில் உடனடியாக முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ( ஃபெரா அமைப்பு) வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசு ஊழியர் சங்கங்களும் ஆசிரியர் சங்கங்களும் அதிருப்தி

2021ஆம் ஆண்டு திமுக அரசு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், அரசு காலி இடங்களை நிரப்புதல் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தன.

எனினும் இவை முறையாக நிறைவேற்றப்படவில்லை என்று கூறி, அரசு ஊழியர் சங்கங்களும் ஆசிரியர் சங்கங்களும் அதிருப்தியில் உள்ளன. இந்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றக் கோரி, அவ்வப்போது இந்த சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஜூன் 25-ல் போராட்டம்

இந்த நிலையில், தங்களின் பணி பாதுகாப்பு, காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஜூன் 25ஆம் தேதி பணியை புறக்கணித்து போராட்டம் நடத்த உள்ளதாக அரசு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Post

பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் அலட்சியபடுத்திய தமிழக அரசு…பொங்கி எழுந்த இடைநிலை ஆசிரியர்கள்…

Posted by - February 29, 2024 0
சென்னை: ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி அடுத்தகட்டமாக இன்று (பிப்.29) முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009…

குடந்தை:அரசு அதிகாரிகளின் அலட்சியபோக்கு..அவதிபடும் பொது மக்கள்…

Posted by - December 8, 2023 0
கும்பகோணம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கபடும் மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடபடுகிறது.அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யாமல் அதன் மீது நடவடிக்கை எடுக்காமலும் மக்களை…

”மோன்தா” புயல், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட், மிக கனமழை – வானிலை அறிக்கை

Posted by - October 27, 2025 0
TN weather Montha Cyclone Update: மோன்தா புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் இன்று சென்னை உட்பட4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.…

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி கிலோவுக்கு ரூ.15 அதிகரிப்பு

Posted by - July 25, 2023 0
தக்காளி விலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும ஜெட்வேகத்தில் உயர்ந்து 100-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி உற்பத்தியில் பாதிப்பு, கனமழை…

பழக்கவழக்கம் சரியில்லை… மீன் வெட்டும் கத்தி… தஞ்சை ஆசிரியை கொலையில் பகீர் பின்னணி!

Posted by - November 21, 2024 0
அதேசமயத்தில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த காவல் துறையினர் தகவலறிந்து வந்து மதன்குமாரைக் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் ஆசிரியை கத்தியால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *