பழக்கவழக்கம் சரியில்லை… மீன் வெட்டும் கத்தி… தஞ்சை ஆசிரியை கொலையில் பகீர் பின்னணி!

157 0

அதேசமயத்தில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த காவல் துறையினர் தகவலறிந்து வந்து மதன்குமாரைக் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு மறுத்ததாகக் கூறி, இளைஞர் ஒருவர் கொலை செய்த கொடூரத்தின் பகீர் பின்னணி என்ன?

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி. 26 வயதான இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூன் மாதம் முதல் தற்காலிக தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். ரமணியும் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதான மதன்குமாரும் கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மதன்குமார் பத்தாம் வகுப்பு படித்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தனது தங்கை திருமணத்திற்காக ஊருக்குத் திரும்பிய நிலையில், தற்போது மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மதன்குமாரின் பெற்றோர், ரமணியின் பெற்றோரை சந்தித்துப் பெண் கேட்டுள்ளனர். அப்போது ரமணியின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், கடந்த ஒரு மாதமாக ரமணியின் பெற்றோர், மதன்குமாருக்குப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்க ஆர்வம் காட்டாமல் இருந்துள்ளனர். ரமணியும் மதன்குமாரிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். ரமணியின் உறவினர் ஒருவர், மதன்குமாரின் பழக்கவழக்கம் சரியில்லை என ரமணியின் பெற்றோரிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ரமணியிடம், மதன்குமார் நேற்று முன் தினம் மாலை திருமணம் தொடர்பாகப் பேசியுள்ளார். அப்போது ரமணி, மதன்குமாரைத் திட்டி விட்டுச் சென்றதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார் நேற்று காலை ரமணி பணிபுரியும் பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு ஆசிரியர்கள் ஓய்வறையில் இருந்த ரமணியிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனக் கூறித் தகராறு செய்துள்ளார்.

அப்போது மதன்குமார் தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டப் பயன்படுத்தப்படும் கத்தியால் ரமணியின் கழுத்தில் குத்தி விட்டுத் தப்பியோட முயன்றார். அவரை சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.அதேசமயத்தில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த காவல் துறையினர் தகவலறிந்து வந்து மதன்குமாரைக் கைது செய்தனர்.

இதற்கிடையே ஆசிரியை ரமணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த பள்ளியில் டிஐஜி ஜியாவுல் ஹக், மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.ஏற்கனவே தெரிந்த நபர் என்பதால் யாரையும் கேட்காமல் நேராக ஓய்வறைக்குச் சென்ற மதன், ஆசிரியையைக் கொன்றதாக ஜியாவுல் ஹக் தெரிவித்தார். மதன் பள்ளிக்கு வந்தபோது காவலாளி இல்லை எனவும் ஜியாவுல் ஹக் தெரிவித்தார்.

Related Post

உஷார்: அடுத்த 3 மணி நேரத்துக்கு இந்த 32 மாவட்டங்களில் மழை.. எங்கெங்கு தெரியுமா?

Posted by - October 14, 2024 0
TN Rain | 16 – 17 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில்…

”கேஸ் வாங்குறதுலாம் துணிக்கடைல கட்டப்பை வாங்குற மாதிரி..” மீண்டும் சர்ச்சையில் சிக்கும் டிடிஎஃப் வாசன்!

Posted by - December 27, 2022 0
செம்ம வெறி ஆகிட்டேன். டிடிஎஃப் பிராண்ட் உருவாக்க போறேன். யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராதா? – டிடிஎஃப் வாசன் நம்மை விரட்டியே…

திரைப்படங்கள் வெளியீட்டில் உதயநிதி தலையீடு… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Posted by - January 21, 2023 0
தமிழ்நாடு போதைப் பொருட்கள் நிறைந்த மாநிலமாக உள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அரியலூர் பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று…

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?

Posted by - March 27, 2025 0
இடைநிலை ஆசிரியர் பணியில் கூடுதலாக சேர்க்கப்பட்ட ஆயிரம் பணி இடங்களுக்கான இட ஒதுக்கீட்டு விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எந்தெந்த சமூகத்தினருக்கு…

திக் திக் டிட்வா…சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் – வெதர்மேன் அலர்ட்

Posted by - November 29, 2025 0
டிட்வா புயல் காரணமாக தென் மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கிய நிலையில், இன்று டெல்டா மாவட்டங்களிலும் நாளை முதல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கன மழைக்கான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *