“பண்பாடு இல்லாமல் பேசுவதால் வேதனை” – ஈபிஎஸ் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!

217 0

அதில், ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மக்களின் முகமலர்ச்சியே பதில் என்று குறிப்பிட்டுள்ளார்.

அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் உடன் சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்பதை எண்ணி வேதனைப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தன் பக்கம் இருப்பதால் சிலருக்கு வயிறு எரிவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பண்பாடு இன்றி பேசும் எதிர்க்கட்சித் தலைவருடன் சட்டப்பேரவையில் விவாதிப்பதை எண்ணி வேதனைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மக்கள் நம் பக்கம், மாற்று முகாம் கலக்கம் என்ற தலைப்பில், கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மக்களின் முகமலர்ச்சியே பதில் என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அதில் நடந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், “நியாயமாகக் கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஒருவர் கூட விடுபடக் கூடாது என்ற அக்கறை அதிகாரிகள் வரை இருப்பதால், மக்களின் தேவை அறிந்து நிறைவேற்ற முடியும்” என்று கூறியுள்ளார்.

பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகத்தை முன்பை விடச் சிறப்பாகத் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.பண்பாடு இன்றி, அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவருடன் சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்பதை எண்ணி வேதனைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு மாவட்டச் சுற்றுப்பயணத்திலும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பதைப் பார்த்து சிலர் வயிறு எரிவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Post

வரி ஏய்ப்பு புகார் – போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

Posted by - September 12, 2025 0
தமிழகத்தில் போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய…

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – தயார் நிலையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள்!

Posted by - October 14, 2024 0
கனமழை எச்சரிக்கையை அடுத்து, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

என்னது, 2026ல் விஜய்தான் முதல்வரா! படத்தில் இடம்பெற்ற காட்சி.. வைரலாகும் போஸ்டர்

Posted by - July 9, 2025 0
விஜய் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் படம் உருவாகி வருகிறது. இதுவே அவருடைய கடைசி படமாகும்.…

கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர்! பூதாகரமான பண விவகாரம்!

Posted by - November 12, 2024 0
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் பலகார கடையை அடித்து நொறுக்கிய திமுக கவுன்சிலர். மதுரை மாவட்டம், திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி வணிக வளாக கட்டிடத்தில்…

11 முதல் மதியம் 3 மணி வரை வெளியே வராதீங்க…

Posted by - April 12, 2023 0
குளிர்பானங்கள், மதுபானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ரசாயனம் மூலம் வாழைப்பழம், மாம்பழம், தர்பூசணி ஆகியவை பழுக்கவைப்பது கண்டறியப்பட்டால், கடையின் உரிமம் ரத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *