பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,

149 0

அன்று நீதிமன்றம் ஏறி அயோத்தி ராமர் கோயிலுக்காக நீதி கேட்டோம். இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மக்கள் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உள்ளது” என அனுராக் தாகூர் கூறினார்.

சனாதன தர்மத்திற்கு எதிராக இந்தியாவில் தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்ததற்கு திமுக எம்.பி., ராணி ஸ்ரீ குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லி வரை எதிரொலித்த திருப்பரங்குன்றம் விவகாரம் 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பின்புறம் உள்ள மலை மீது உச்சியின் ஒருபுறம் காசி விஸ்வநாதர் ஆலயமும், மறுபுறம் இஸ்லாமிய தர்காவும் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் மலை உச்சியில் தர்காவுக்கு தீபத்தூண் அமைந்திருப்பதாக சொல்லப்படும் இடத்தில் திருக்கார்த்திகை அன்று தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் அனுமதி அளித்த நிலையில் மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடலாம் என கருதி தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கப்படவில்லை. இரண்டு முறை உத்தரவிட்டும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தும் தமிழ்நாடு அரசு அனுமதியளிக்கவில்லை. இதுதொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வருகிறது. அதேசமயம் இந்த விவகாரம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது.

தமிழ்நாட்டை சாட்டிய அமைச்சர் அனுராக் தாக்கூர் 

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து இந்தியா கூட்டணி சார்பில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை மாற்ற வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சம்பவம் மக்களவையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் திமுக – பாஜக எம்.பி.,க்கள் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் மத்திய பாஜக அமைச்சர் அனுராக் தாகூர் நேற்று (டிசம்பர் 12) மக்களவையில் உரையாற்றினார். அப்போது திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசும்போது திமுக அரசை கடுமையாக சாடினார். அதாவது, “இந்தியாவில் ஒரு மாநில அரசு சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்படுகிறது. நீதிமன்றம் அனுமதி கொடுத்தும் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்காமல் ஏன் தடுக்கிறார்கள்?. அன்று நீதிமன்றம் ஏறி அயோத்தி ராமர் கோயிலுக்காக நீதி கேட்டோம். இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மக்கள் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உள்ளது” என கூறினார்.

பதிலடி கொடுத்த திமுக எம்.பி., 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென்காசி தொகுதி திமுக எம்.பி.,யான ராணி ஸ்ரீகுமார், “எங்களுடைய திமுக அரசு மக்கள் அமைதியாக மற்றும் சுதந்திரமாக வழிபாட்டு முறையை பின்பற்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. தமிழ் கடவுளான முருகனை எப்படி வழிபட வேண்டும் என்று தமிழ் மக்களாகிய எங்களுக்கு யாரும் கற்றுத்தர வேண்டாம். அனைத்து சமூக மக்களும் தமிழ்நாட்டில் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். சில மதவாத சக்திகள் பொய் தகவல்களை பரப்பி அமைதி பூங்காவான தமிழ்நாட்டில் கலவரம் செய்ய முயற்சிக்கிறார்கள். அதனை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே மதவாத சக்திகளை எதிர்த்து தமிழ்நாடு போராடும், அதில் வெல்லும்” என தெரிவித்துள்ளார்.

Related Post

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, அகவிலைப்படி உயர்வு.. அதிரடி அறிவிப்பு

Posted by - April 23, 2024 0
அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், இறப்பு கிராஜூவிட்டி, பயணப்படி ஆகியவை 25 விழுக்காடு வரை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில்  பணியாற்றும் அரசுப்பணியாளர்களுக்கு படித்…

மும்பையில் சினிமாவை மிஞ்சும் விபத்து: சுங்கசாவடியில் 6 கார்கள் மோதியதில் 3 பேர் பலி

Posted by - November 10, 2023 0
மும்பை: மும்பையில் பாந்த்ரா-ஒர்லி கடல் பாலம் மிகவும் பிரபலமாகும். இந்தப் பாலத்தில் அடிக்கடி தற்கொலைச் சம்பவங்கள் நடக்கிறது. மும்பையில் பாந்த்ரா-ஒர்லி கடல் பாலம் மிகவும் பிரபலமாகும். இந்தப்…

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்திய மத்திய அரசு- எவ்வளவு?

Posted by - April 7, 2025 0
இந்த கலால் வரி உயர்வால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மீதான கலால்…

இன்று அதல பாதாளத்தில் பங்குச்சந்தை! காரணம் என்ன? எப்படி மீள்வது? என்ன செய்ய வேண்டும்?

Posted by - April 7, 2025 0
இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை அதாவது இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்த வாரத்தை மிகப்பெரிய சரிவுடன் பங்குச் சந்தை தொடங்கியுள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை…

நாடு முழுவதும் நடந்த 2 மாத கால ஆய்வில் ரூ.15 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு

Posted by - July 6, 2023 0
புதுடெல்லி: வர்த்தக நிறுவனங்கள், ஜி.எஸ்.டி. சட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்வது கட்டாயம். அப்படி பதிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. அடையாள எண் அளிக்கப்படும். ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *