பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்திய மத்திய அரசு- எவ்வளவு?

158 0

இந்த கலால் வரி உயர்வால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இது பொது மக்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்த நிலையில், விலைக் குறைப்புக்குப் பதிலாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

 

பெட்ரோல், டீசல் விலை உயருமா?    

 

இந்த கலால் விலை உயர்வு நாளை (ஏப்ரல் 8ஆம் தேதி) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த கலால் வரி உயர்வால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.

 

இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’கலால் விலை உயர்வால், சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாது என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன’’ என்று பதிவிட்டுள்ளது.

 

 

அதே நேரத்தில் மத்திய அரசின் வரி விதிப்பால், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன் பறிக்கப்படுவதாகப் பொது மக்கள்  குற்றம் சாட்டி வருகின்றனர். கச்சா எண்ணெய் விலைக் குறைப்பால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரியை உயர்த்தி விலைக் குறைப்பு தடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

கடும் வீழ்ச்சி அடைந்த கச்சா எண்ணெய் விலை

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை 4.5% குறைந்து, ஒரு பீப்பாய் 59.16 டாலருக்கு விற்கப்படுகிறது. ஃப்ரண்ட் கச்சா எண்ணெயும் 4.39 சதவீதம் விலை குறைந்து, 62.7 டாலருக்கு விற்பனை ஆகிறது.

Related Post

பெங்களூருவில் கின்னஸ் சாதனையாளரை திருடனாக்கிய வறுமை

Posted by - July 8, 2023 0
பெங்களூரு : பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாசவி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் இருந்து வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில்…

படிக்கும் காலத்தில் இது தேவைதானா என எதிர்ப்பு- கல்லூரி காதல் ஜோடி திருமணம் செய்துவிட்டு தற்கொலை

Posted by - August 21, 2023 0
திருப்பதி: ஆந்திரா மாநிலம், அன்னமய்யா மாவட்டம், செட்டேவாரி பள்ளியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். லதிகம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது வாலிபர். இருவரும் புங்கனூரில் உள்ள…

பிரபல வங்கிக்கு ரிசரவ் பேங்க் திடீர் தடை.. உங்களுக்கு அதுல அக்கவுண்ட் இருக்கா?

Posted by - April 25, 2024 0
பிரபல வங்கிக்கு ரிசரவ் பேங்க் திடீர் தடை.. உங்களுக்கு அதுல அக்கவுண்ட் இருக்கா? நாட்டில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களை ரிசர்வ்…

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்த புதுமணத் தம்பதி

Posted by - February 23, 2023 0
ராய்ப்பூர்: சத்தீஷ்கார் மாநிலம் பிரிஜ்நகரில் அஸ்லம் (வயது 24), ககாஷா பானு (வயது 22) ஆகிய இருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. அவர்களின் திருமண வரவேற்பு…

தலைநகரில் வேகமெடுக்கும் கொரோனா- ஒரே நாளில் 1,603 பேருக்கு தொற்று உறுதி

Posted by - April 21, 2023 0
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *