பீகார் முடிவு… செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது

141 0

பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக கூட்டணியிடம் காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுக்க முடியாத நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

பீகாரில் அடித்து ஆடும் பாஜக

பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆரம்பம் முதலே பாஜக கூட்டணி அடித்து ஆட ஆரம்பித்தது. தொடர்ந்து முன்னிலை வகித்து கொண்டே இருந்தது. இதனால் பாஜக தொண்டர்கள் குஷியில் கொண்டாட ஆரம்பித்தனர். அதே நேரம் காங்கிரஸ் கட்சியின் நிலை தான் கவலைக்கிடமாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 60க்கும் மேற்பட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.குறைந்தது 40 முதல் 45 தொகுதிகளில் வெற்றி பெறும் என காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

மோசமான நிலையில் காங்கிரஸ்

ஆனால் 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இந்த தோல்வி அகில இந்திய காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதே நேரம் தமிழகத்தில் திமுக செம குஷியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்னும் 4 முதல் 5 மாத காலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் நீடித்து வருகிறது. தங்களுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்க வேண்டும், கூட்டணி ஆட்சி வேண்டும் என அவ்வப்போது அக்கட்சி நிர்வாகிகள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள். மேலும் திமுக கூட்டணியில் கூடுதல் இடம் தரவில்லையென்றால் விஜய் தலைமையிலான தவெக கூட்டணிக்கு சென்று விடுவோம் என மறைமுகமாக மிரட்டி வருவதாகவும் தகவல் வெளியானது.

தமிழகத்தில் காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீடு

இந்த நிலையில் பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கூடுதல் இடம் ஒதுக்கி தர வேண்டும் என திமுகவை மிரட்ட முடியாத நிலையானது காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் 2016ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகளை ஒதுக்கியது. ஆனால் 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனையடுத்து 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வென்றது. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு தேர்தலில் குறைந்தது 30 முதல் 35 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்து இருந்தது.

காங்கிரஸ்க்கு சிக்கல்

ஆனால் தற்போதைய பீகார் தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லாத நிலை உருவாகியுள்ளது. எனவே திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்க முடியாத நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. அதே நேரம் பீகாரில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தால் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுக்கும் நிலையானது ஏற்பட்டிருக்கும். எனவே இந்த தோல்வி திமுகவிற்கு ஒரு பக்கம் அதிர்ச்சியை கொடுத்தாலும் மறு பக்கம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாகவே கூறப்படுகிறது. 1

Related Post

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? – ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

Posted by - October 8, 2025 0
சென்னை: கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த முதல்வர் ஸ்டாலின், காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். காசா…

விஜய்க்கு விசில் சின்னம்..

Posted by - January 22, 2026 0
முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தவெக-விற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களுக்குள் நடைபெற உள்ள நிலையில், மிகப்பெரிய…

இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்!

Posted by - April 11, 2026 0
திமுக – அதிமுக கட்சிகளிடையே தொடரும் தாக்குதல் பாணி பிரச்சாரமானது தமிழக தேர்தல் களத்தை 4 முனைப் போட்டி என்ற நிலையில் இருந்து இருமுனைப் போட்டிக்கு நகர்த்தி…

சிட்டியில் DMK ஆட்டம் ஓவர்? 16 தொகுதிகளில் 14ல் சிக்கல், லட்சத்தில் காலி

Posted by - February 24, 2026 0
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் காரணமாக, தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை இழந்த மாவட்டமாக சென்னை உருவெடுத்துள்ளது. TN Voters List Election 2026 DMK: சென்னையில் அதிகப்படியான…

முரண்டு பிடிக்கும் விசிக, ம.கம்யூ, மநீம.! கூட்டணிக்குள் நடப்பது என்ன.?

Posted by - March 20, 2026 0
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்குள் தொகுதி பங்கீட்டை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *