இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்!

69 0

திமுக – அதிமுக கட்சிகளிடையே தொடரும் தாக்குதல் பாணி பிரச்சாரமானது தமிழக தேர்தல் களத்தை 4 முனைப் போட்டி என்ற நிலையில் இருந்து இருமுனைப் போட்டிக்கு நகர்த்தி வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணி, நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாதக என நான்கு முனை போட்டி நிலவுவதாக முன்பு பேசப்பட்டது. இந்த நிலையில், மூச்சுக்கு முந்நூறு முறை, “தவெக-வுக்கும் திமுக-வுக்கும் தான் போட்டி. களத்திலேயே இல்லாத மற்றும் பலரைப் பற்றி நாங்கள் ஏன் பேசவேண்டும்?” என தவெக தலைவர் விஜய்யும் பேசினார்.

இதன் மூலம், அதிமுக களத்திலேயே இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க நினைத்தார் அவர். ஆனால், திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் இடையில் இப்போது நடக்கும் அதிரடி தாக்குதல் பிரச்சாரமானது அதை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, போட்டி திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் இடையில் தான் என்ற இலக்கை நோக்கி நகர்த்தி வருகிறது.

தவெக-வைப் பொறுத்தவரை அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை விட விஜய் மீதான மக்களின் ஈர்ப்பு மட்டுமே அந்தக் கட்சியின் பிரதான சொத்தாக இருக்கிறது. இலவசங்களை எதிர்க்கும் நாதக, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நிர்வாக மேலாண்மை என கவலைப்படுகிறது. அதனால் அந்தக் கட்சி யதார்த்த அரசியலை விட்டு ஒதுங்குகிறது. அதேசமயம், திமுக, அதிமுக கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பேசு பொருளாக இருக்கிறது. ஸ்டாலின் வந்தால் சொன்னதைச் செய்வார், எடப்பாடி வந்தால் செய்வாரா? என்ற வாதப் பிரதிவாதங்களும் பெண்கள் மத்தியில் களைகட்டுகின்றன.

இந்த நிலையில், திமுக-வும் அதிமுக-வும் களத்தை தங்களை மையப்படுத்தி திருப்ப ஏதுவாக ‘தாக்குதல்’ விமர்சனத்தில் இறங்கி இருக்கின்றன. இதனால், மற்ற கட்சிகளின் பிரச்சாரங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு இந்த இரண்டு கட்சிகளின் பிரச்சாரங்கள் குறித்து மட்டுமே இப்போது மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

அதிமுக அணியில் பழனிசாமி மட்டுமே பிரச்சார பீரங்கியாக இருக்கிறார். திமுக அரசின் ஊழல் முறைகேடுகள், குடும்ப அரசியல் என இவர் வைக்கும் விமர்சனங்களுக்கு ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என திமுக தலைவரின் குடும்பமே வரிசைகட்டி வந்து பதிலடி கொடுக்கிறது.

இந்தப் பதிலுக்குப் பதில் பிரச்சாரத்தில் தங்களது சாதனைகளையும் வேதனைகளையும் சொல்வதை விட்டுவிட்டு இப்போது தனி மனித தாக்குதலும் தடதடக்கிறது. அது கொஞ்சம் தரம் தாழ்ந்தும் செல்வது வாக்காளர்களை சங்கடப்படவும் வைக்கிறது.

ஒருவிதத்தில் இந்தப் பிரச்சாரங்கள் மூலம் போட்டி எங்களுக்கும் திமுக-வுக்கும் தான் என நிரூபித்துக் கொண்டிருக்கிறது அதிமுக. ஆனால், இதே பாணியிலான பிரச்சாரங்கள் நீடிக்கும் பட்சத்தில், நீ, நான் என ஒருவரை ஒருவர் ஒருமையில் ’வாழ்த்திக்’ கொள்ளுமளவுக்கு களம் மாறினாலும் கவலைப்பட ஒன்றுமில்லை.

Related Post

”பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்துக்கு பாடம் புகட்டும்” தவெகவுக்கு சவால்விட்ட சேகர்பாபு!

Posted by - March 20, 2026 0
பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆற்றல்மிக்க தலைவவரை விமர்சிப்பவர்களை, தன் தாயே தடுத்தாலும் திமுக தொண்டன் எதிர்ப்பான். பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்- சேகர்பாபு…

திமுகவில் இணைந்த அதிமுக மாஜி முதலமைச்சர்

Posted by - February 27, 2026 0
அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் தனித்து செயல்பட்டு வந்தவர், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில்…

அமைச்சர் மெய்யநாதனை புறக்கணிக்கிறாரா அமைச்சர் ரகுபதி?

Posted by - August 26, 2025 0
புதுக்கோட்டை மாவட்ட திமுக-வில் அமைச்சர்கள் ரகுபதியும் சிவ.வீ.மெய்யநாதனும் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பவர்கள். இதில், ரகுபதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பதால் கூடுதல் அதிகாரத்துடன் கோலோச்சி…

திமுகவுக்கு பலனளிக்குமா ‘டாப்ஸ்’ ஓய்வூதியத் திட்டம்? – மீண்டும் போராடத் தயாராகும் சங்கங்கள்

Posted by - January 7, 2026 0
கடந்த 2021- சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ‘பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வோம்’ என திமுக வாக்​குறுதி அளித்​தது. அது திமுக-​வின் வெற்​றிக்கு பெரிதும் உதவியது. ஆனால், 4 ஆண்​டு​களுக்​கும்…

பிஹார் தோல்வி பிடிக்குள் சிக்கிய காங். – என்ன செய்யப் போகிறது திமுக?

Posted by - November 19, 2025 0
பிஹார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தங்களின் பேரவலிமையைக் கூட்டிக் கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் கட்சி, இப்போது திமுக தரும் இடங்களை மறு பேச்சுப் பேசாமல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *