Gemini Generated Image 80ljk280ljk280lj

இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்!

149 0

திமுக – அதிமுக கட்சிகளிடையே தொடரும் தாக்குதல் பாணி பிரச்சாரமானது தமிழக தேர்தல் களத்தை 4 முனைப் போட்டி என்ற நிலையில் இருந்து இருமுனைப் போட்டிக்கு நகர்த்தி வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணி, நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாதக என நான்கு முனை போட்டி நிலவுவதாக முன்பு பேசப்பட்டது. இந்த நிலையில், மூச்சுக்கு முந்நூறு முறை, “தவெக-வுக்கும் திமுக-வுக்கும் தான் போட்டி. களத்திலேயே இல்லாத மற்றும் பலரைப் பற்றி நாங்கள் ஏன் பேசவேண்டும்?” என தவெக தலைவர் விஜய்யும் பேசினார்.

இதன் மூலம், அதிமுக களத்திலேயே இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க நினைத்தார் அவர். ஆனால், திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் இடையில் இப்போது நடக்கும் அதிரடி தாக்குதல் பிரச்சாரமானது அதை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, போட்டி திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் இடையில் தான் என்ற இலக்கை நோக்கி நகர்த்தி வருகிறது.

தவெக-வைப் பொறுத்தவரை அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை விட விஜய் மீதான மக்களின் ஈர்ப்பு மட்டுமே அந்தக் கட்சியின் பிரதான சொத்தாக இருக்கிறது. இலவசங்களை எதிர்க்கும் நாதக, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நிர்வாக மேலாண்மை என கவலைப்படுகிறது. அதனால் அந்தக் கட்சி யதார்த்த அரசியலை விட்டு ஒதுங்குகிறது. அதேசமயம், திமுக, அதிமுக கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பேசு பொருளாக இருக்கிறது. ஸ்டாலின் வந்தால் சொன்னதைச் செய்வார், எடப்பாடி வந்தால் செய்வாரா? என்ற வாதப் பிரதிவாதங்களும் பெண்கள் மத்தியில் களைகட்டுகின்றன.

இந்த நிலையில், திமுக-வும் அதிமுக-வும் களத்தை தங்களை மையப்படுத்தி திருப்ப ஏதுவாக ‘தாக்குதல்’ விமர்சனத்தில் இறங்கி இருக்கின்றன. இதனால், மற்ற கட்சிகளின் பிரச்சாரங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு இந்த இரண்டு கட்சிகளின் பிரச்சாரங்கள் குறித்து மட்டுமே இப்போது மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

அதிமுக அணியில் பழனிசாமி மட்டுமே பிரச்சார பீரங்கியாக இருக்கிறார். திமுக அரசின் ஊழல் முறைகேடுகள், குடும்ப அரசியல் என இவர் வைக்கும் விமர்சனங்களுக்கு ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என திமுக தலைவரின் குடும்பமே வரிசைகட்டி வந்து பதிலடி கொடுக்கிறது.

இந்தப் பதிலுக்குப் பதில் பிரச்சாரத்தில் தங்களது சாதனைகளையும் வேதனைகளையும் சொல்வதை விட்டுவிட்டு இப்போது தனி மனித தாக்குதலும் தடதடக்கிறது. அது கொஞ்சம் தரம் தாழ்ந்தும் செல்வது வாக்காளர்களை சங்கடப்படவும் வைக்கிறது.

ஒருவிதத்தில் இந்தப் பிரச்சாரங்கள் மூலம் போட்டி எங்களுக்கும் திமுக-வுக்கும் தான் என நிரூபித்துக் கொண்டிருக்கிறது அதிமுக. ஆனால், இதே பாணியிலான பிரச்சாரங்கள் நீடிக்கும் பட்சத்தில், நீ, நான் என ஒருவரை ஒருவர் ஒருமையில் ’வாழ்த்திக்’ கொள்ளுமளவுக்கு களம் மாறினாலும் கவலைப்பட ஒன்றுமில்லை.

Related Post

தேர்தல் களத்தில் அதிமுக தான் முதல் இடத்தில் இருக்கிறது

Posted by - September 25, 2025 0
அடுத்த ஆண்டு தேர்தலுக்கான களத்தில் அதிமுக தான் முதல் இடத்தில் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்திற்கத் தான் போட்டி நடப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
Gemini Generated Image slc13kslc13kslc1

காரைக்குடியில் ஓட்டு கூட கிடையாது.. இவர் வேட்பாளரா? – சீமானை விளாசிய கார்த்தி சிதம்பரம்!

Posted by - April 7, 2026 0
சீமானின் மாமனார் மறைந்த காளிமுத்து 1998ல் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் நின்றார். நான் ஜெயித்தாலும், தோற்றாலும் காரைக்குடிக்கு வருவேன் என சொன்னார். அந்த தேர்தலில் காளிமுத்து…
Generated Image November 17 2025 11 32AM

பிரசாந்த் கிஷோரிடம் இருந்து பாடம் கற்பாரா விஜய்?

Posted by - November 17, 2025 0
குஜராத் முதல்வராக இருந்த மோடியை நாட்டின் பிரதமராக உயர்த்த வியூகம் வகுத்தவர், பிஹாரில் நிதிஷ்குமார், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின்…
Generated Image November 19 2025 10 32AM e1763528556825

பிஹார் தோல்வி பிடிக்குள் சிக்கிய காங். – என்ன செய்யப் போகிறது திமுக?

Posted by - November 19, 2025 0
பிஹார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தங்களின் பேரவலிமையைக் கூட்டிக் கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் கட்சி, இப்போது திமுக தரும் இடங்களை மறு பேச்சுப் பேசாமல்…
OPS

ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா?

Posted by - February 28, 2026 0
அதிமுக-வால் ஓரங்கட்டப்பட்டு திமுக-வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு மீண்டும் ஆட்சி அமைந்தால் சபாநாயகர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் விசுவாசி என்று மக்களால் அறியப்பட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *