மகனை போட்டுத்தாக்கிய ராமதாஸ்! உடனடியாக நிர்வாகிகளுக்குக்கு அன்புமணி போட்ட முக்கிய உத்தரவு

197 0

தன்னை சந்திக்க யாரும் தற்போது சென்னை வரவேண்டாம். நான் அழைக்கும் வரை யாரும் சென்னைக்கு வரவேண்டாம் என நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

தன்னை சந்திக்க யாரும் தற்போது சென்னை வரவேண்டாம். நான் அழைக்கும் வரை யாரும் சென்னைக்கு வரவேண்டாம் என நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

இன்று திண்டிவனம் தைலாவரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பல விஷயங்களை பொதுவெளியில் போட்டு உடைத்தார் ராமதாஸ்.அப்போது பேசிய அவர், “அன்புமணி பேசியதை கேட்டேன். அவர் மக்களையும் கட்சியினரையும் நிர்வாகிகளையும் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டட்தில் 8 பேர் மட்டுமே கலந்துகொண்ட போதே நான் செத்துப்போய்விட்டேன். எனது தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கூடாது என நிர்வாகிகளை தடுத்துவிட்டார்.

பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் நீங்கள்தான் எனக்கு கொள்ளி வைக்கணும் என அன்புமணி என்னை மிரட்டினார். அவரும் சௌமியாவும் என் காலை பிடித்து அழுதனர். என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.

கூட்டணிக்கான எல்லா வேலையையும் சௌமியாவே செய்துவிட்டார். மறுநாள் காலை வாசலில் பாரத் மாதா கி ஜே என கோஷம் கேட்கிறது. இது அனைத்தும் எனக்கு தெரியாமலேயே நடந்தது.

தனது தாய் சரஸ்வதி மீதே பாட்டிலை எறிந்து தாக்க முயன்றவர் அன்புமணி. பாமக என்ற அழகான கட்சியை ஒரே நாளில் கண்ணாடி போல் நொறுக்கியவர் அன்புமணி.

தவறு செய்தது அன்புமணி அல்ல, நான் தான். எனது சத்தியத்தையும் மீறி 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கியது எனது தவறு தான். அன்புமணி தவறான ஆட்டத்தை தொடங்கி, அடித்து ஆடத் தொடங்கினார்.

பொதுக்குழு கூட்டத்தில் மேடை நாகரீகம் இன்றி அன்புமணி நடந்துகொண்டார். எடுத்தேன் கவிழ்த்தேன் என பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொண்டது யார்?

நான் பாடுபட்டு வளர்த்த கட்சி எனக்கே நிர்வாகிகளை சந்திக்க கட்டுப்பாடு போடுகிறார்” என சரமாரியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் பாமக நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவை போட்டுள்ளார். அதில், தன்னை சந்திக்க யாரும் தற்போது சென்னை வரவேண்டாம். நான் அழைக்கும் வரை யாரும் சென்னைக்கு வரவேண்டாம் என நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

Related Post

”மோன்தா” புயல், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட், மிக கனமழை – வானிலை அறிக்கை

Posted by - October 27, 2025 0
TN weather Montha Cyclone Update: மோன்தா புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் இன்று சென்னை உட்பட4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.…

உங்கள் கனவில் முருகன் வந்தாரா? அப்போ இதுதான் அர்த்தம் பக்தர்களே!

Posted by - November 11, 2025 0
முருகப்பெருமான் உங்கள் கனவில் தோன்றினால் அதற்கு என்ன அர்த்தம்? என்பதை கீழே விரிவாக காணலாம். தமிழ்க் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். தைப்பூசம், கார்த்திகை…

பட்டுபோன்ற மென்மையான நீளமான கூந்தலை பெறணுமா? அப்ப ‘இந்த’ 7 உணவுகளை மறக்காம சாப்பிடுங்க!

Posted by - December 26, 2023 0
ஆண், பெண் என அனைவரும் தங்கள் தலைமுடி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறார்கள். நவீன வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால், தலைமுடி பாதிப்படைகிறது.…

மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் – அரசு அறிவிப்பு

Posted by - March 11, 2025 0
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சுய உதவிக்குழு பெண்கள் இனி, லக்கேஜ்களுடனும் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழு பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்தும்…

இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!

Posted by - December 31, 2024 0
தமிழக மக்களுக்காக நடைபெற்ற அதிமுக ஆட்சியை மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று ஜீபூம்பா செய்து ஆட்சியை பிடித்து விட்டார். சிறைச்சாலை அதிமுகவினருக்காக கட்டப்பட்டது. நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *