முருகன் மாநாட்டால் திமுக அதிர்ச்சி – அதிமுக வாய் திறக்காது ஏன்? அடுக்கடுக்கான கேள்வி

124 0

பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாட்டினை, திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா? எனவும் கிண்டல் செய்து வருகின்றனர்.

முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல்:

மதுரையில் பாஜகவின் மற்றொரு பிரிவாக கருதப்படும் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில், முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோக பாஜகவின் கூட்டணியில் உள்ள அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முருக பக்தர்கள் மாநாடு என்று கூறினாலும், இதில் முற்றிலுமான அரசியல் நெடியே வீசியது. அப்போது நடந்த சில நிகழ்வுகளுக்கு எந்தவித கருத்தும், ஆட்சேபனையும் கூட தெரிவிக்காமல்  முன்னாள் அமைச்சர்கள் அமைதியாக இருந்ததே, தற்போது அதிமுகவின் மீதான விமர்சனங்களுக்கு காரணமாகியுள்ளது.

சைலண்ட் மோடில் முன்னாள் அமைச்சர்கள்:

மாநாட்டு திடலில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒன்றில், “முருகா திராவிடத்தை அழிக்க வேலெடுத்து ஓடி வா” என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இதனை குறிப்பிட்டு. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்னு பேரு வச்சிருக்கிங்க. அவன் என்னடான்னா திராவிடத்தை அழிக்கனும்னு பேனர் வெச்சிட்டு இருக்கான். அத பாத்து எப்படியா எதுவுமே பேசாமா சைலண்ட இருக்கிங்க?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ”அந்த அம்மா இருந்திருந்தா இப்படிலாம்நடந்து இருக்குமா?” என கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து இருக்கின்றனர்.

”வீடியோவிற்கும் வாய் திறக்கல”

பேனர் ஒருப்பக்கம் சர்ச்சையை கிளப்ப, மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ ஒன்றும் அதிமுகவினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அதிமுக தனது கொள்கை தலைவர்களாக கொண்டிருக்கும் பெரியார் மற்றும் அண்ணா ஆகியோர் விமர்சிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், அதற்கு கூட அதிமுகவினர் எந்தவித கருத்தும் ,ஆட்சேபனையும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்ததும் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்காகவும் பேசமாட்டீர்கள்? கட்சி கொள்கை தலைவர்களுக்காகவும் பேசமாட்டீர்களா? அதிமுகவை மொத்தமாக பாஜகவிடம் அடகு வைத்துவிட்டீர்களா? என்றும் திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். வழக்குகளுக்கு பயந்து தான் வேண்டா வெறுப்பாகவே பாஜகவுடன், அதிமுக கூட்டணி வைத்து இருப்பதையே இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன என்றும் குற்றம்சாட்டிவருகின்றனர்.

Related Post

ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

Posted by - February 1, 2023 0
ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக உள்ளார் K.S.தென்னரசு. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால்…

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக ஆட்சி! – சாதித்தது என்ன?

Posted by - May 6, 2023 0
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று, இரண்டு ஆண்டுகள் நிறைவுற்று செய்து,  மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மு.க.ஸ்டாலின் அரசு சாதித்தது என்ன? 2021 சட்டமன்றத்…

மருத்துவத்துறையை நாசமாக்கி விட்டு பதவியில் இருக்க கூச்சமா இல்லையா? – அமைச்சரை வெளுத்து வாங்கும் அண்ணாமலை

Posted by - February 14, 2025 0
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளன. கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு…
tamil news

CM Vijay: உதயநிதிக்கு நோ, ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு புன்னகைத்தபடி வணக்கம் சொன்ன விஜய் – வீடியோ வைரல்

Posted by - May 11, 2026 0
CM Vijay EPS: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தவிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு முதலமைச்சர் விஜய் வணக்கம் சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.…

முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் சிக்கலா…மாட்டிக்கொண்டு முழிக்கும் செந்தில் பாலாஜி…

Posted by - May 31, 2023 0
கோவையில் கோல்டு வின்ஸ் பகுதியில் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் நடைபெற்று வந்த சோதனை காலை 8.15 மணி அளவில் நிறைவு பெற்றது.   மின்சாரம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *