முருகன் மாநாட்டால் திமுக அதிர்ச்சி – அதிமுக வாய் திறக்காது ஏன்? அடுக்கடுக்கான கேள்வி

117 0

பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாட்டினை, திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா? எனவும் கிண்டல் செய்து வருகின்றனர்.

முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல்:

மதுரையில் பாஜகவின் மற்றொரு பிரிவாக கருதப்படும் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில், முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோக பாஜகவின் கூட்டணியில் உள்ள அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முருக பக்தர்கள் மாநாடு என்று கூறினாலும், இதில் முற்றிலுமான அரசியல் நெடியே வீசியது. அப்போது நடந்த சில நிகழ்வுகளுக்கு எந்தவித கருத்தும், ஆட்சேபனையும் கூட தெரிவிக்காமல்  முன்னாள் அமைச்சர்கள் அமைதியாக இருந்ததே, தற்போது அதிமுகவின் மீதான விமர்சனங்களுக்கு காரணமாகியுள்ளது.

சைலண்ட் மோடில் முன்னாள் அமைச்சர்கள்:

மாநாட்டு திடலில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒன்றில், “முருகா திராவிடத்தை அழிக்க வேலெடுத்து ஓடி வா” என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இதனை குறிப்பிட்டு. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்னு பேரு வச்சிருக்கிங்க. அவன் என்னடான்னா திராவிடத்தை அழிக்கனும்னு பேனர் வெச்சிட்டு இருக்கான். அத பாத்து எப்படியா எதுவுமே பேசாமா சைலண்ட இருக்கிங்க?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ”அந்த அம்மா இருந்திருந்தா இப்படிலாம்நடந்து இருக்குமா?” என கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து இருக்கின்றனர்.

”வீடியோவிற்கும் வாய் திறக்கல”

பேனர் ஒருப்பக்கம் சர்ச்சையை கிளப்ப, மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ ஒன்றும் அதிமுகவினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அதிமுக தனது கொள்கை தலைவர்களாக கொண்டிருக்கும் பெரியார் மற்றும் அண்ணா ஆகியோர் விமர்சிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், அதற்கு கூட அதிமுகவினர் எந்தவித கருத்தும் ,ஆட்சேபனையும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்ததும் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்காகவும் பேசமாட்டீர்கள்? கட்சி கொள்கை தலைவர்களுக்காகவும் பேசமாட்டீர்களா? அதிமுகவை மொத்தமாக பாஜகவிடம் அடகு வைத்துவிட்டீர்களா? என்றும் திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். வழக்குகளுக்கு பயந்து தான் வேண்டா வெறுப்பாகவே பாஜகவுடன், அதிமுக கூட்டணி வைத்து இருப்பதையே இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன என்றும் குற்றம்சாட்டிவருகின்றனர்.

Related Post

கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர்! பூதாகரமான பண விவகாரம்!

Posted by - November 12, 2024 0
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் பலகார கடையை அடித்து நொறுக்கிய திமுக கவுன்சிலர். மதுரை மாவட்டம், திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி வணிக வளாக கட்டிடத்தில்…

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய பிச்சைக்காரர்- நாமக்கல் கலெக்டரிடம் வழங்கினார்

Posted by - February 20, 2023 0
நாமக்கல்: நாமக்கல் பிச்சையெடுப்பவர்கள், ‘ஐயா தர்மபிரபு ஏதாவது தர்மம் பண்ணுங்க’ என்று யாசகம் பெறுவது வழக்கம். ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஒரு பிச்சைக்காரர் தனக்கு கிடைத்த பணத்தை…

கனமழைக்கு வாய்ப்பு

Posted by - September 26, 2023 0
#Rain | #RainAlert | #ChennaiRains | #Weather | #pixeltv | #pixelmedia தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்…

காஷ்மீருக்கு அடுத்தபடியாக கொடைக்கானலில் குங்குமப்பூ விளைவித்து விவசாயி சாதனை

Posted by - November 25, 2023 0
கொடைக்கானல்: மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் மலைக்காய்கறிகள் விளைச்சலுக்கு அதிக பெயர் பெற்றது. இங்கு முக்கிய காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர், பீன்ஸ், காரட், புரோக்கோலி போன்ற…

சனாதனம் குறித்து பேச்சு: தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு ..

Posted by - September 14, 2023 0
சென்னை: தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 2-ந்தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசும்போது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *