அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!

224 0

அம்பேத்கர் பெயரை, உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம் என தவெக தலைவர் விஜய் , மத்திய அமைச்சர் அமித்சாவைக் கண்டித்துள்ளார்.

அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை வன்மையாக கண்டிக்கிறேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அமித்சா சர்ச்சை பேச்சு:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா, நேற்றைய தினம் அம்பேத்கர் குறித்து பேசியது, பெரிதும் சர்ச்சையானது. அமித்சா தெரிவித்திருந்ததாவது, “எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர் என சொல்வது, தற்போது ஃபேசனாகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இத்தனை முறை கூறியிருந்தால், சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று மாநிலங்களவையில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா பேசியிருந்தார்.

அமித்சாவின் இந்த  பேச்சானது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் எதிர்ப்புகள் தெரிவித்தனர். மேலும், நாடாளுமன்றத்திலும் , எதிர்க்கட்சிகள் அம்பேத்கர் பெயர் பதிக்கப்பட்ட பலகையை அணிந்தும் கோசங்கள் எழுப்பினர்.

தவெக விஜய் கண்டனம்:

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, “ யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்;

அம்பேத்கர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம்.

எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.

Related Post

தமிழ்நாட்டில் மயோனிசுக்கு தடை! வெளியான அதிரடி உத்தரவு! காரணம் என்ன?

Posted by - April 24, 2025 0
மயோனிஸ் மூலம் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் என அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மயோனிசுக்கு…

சிறுத்தை நடமாட்டம்… மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

Posted by - April 5, 2024 0
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை பிடிக்க…

நிலக்கடலை.. இதயத்தை காக்கும் அட்டகாசமான வேர்க்கடலை.. ஆனா “இவங்க” மட்டும் நிலக்கடலையை தொடவே கூடாதாம்

Posted by - December 14, 2023 0
சென்னை: பல்வேறு சத்துக்களை கொண்டிருக்கும் நிலக்கடலையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? யாரெல்லாம் நிலக்கடலை சாப்பிடக்கூடாது? தெரியுமா? மிகச்சிறந்த புரதத்தின் ஆதாரமாக விளங்கக்கூடியது வேர்க்கடலை என்று சொல்லக்கூடிய…
trihy

திருச்சி செவிலியர் உயிரிழப்புக்கு காரணம் என்ன.? வெளியான ஆய்வறிக்கையில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?

Posted by - June 3, 2026 0
Trichy nurse death Investigation report : திருச்சியில் செவிலியர் உயிரிழப்பு விவகாரத்தில் அறுவை சிகிச்சையின் போது தரமற்ற மருந்தை பயன்படுத்தியதே காரணம் என ஆய்வறிக்கையில் தகவல்…

அன்றே மோசடி செய்த நிகிதா.. அதுவும் அவர் பேர்ல? அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்

Posted by - July 3, 2025 0
2011ல் துணை முதலமைச்சரின் பிஏ-வை வைத்து வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கின் எஃப் ஐஆர் தற்போது வெளியாகியுள்ளது. திருப்புவனம் இளைஞர் அஜித்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *