ரூ.10.71 லட்சம் கோடி கடன் சுமை

44 0

Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசின் கடன்சுமை 2027ம் நிதியாண்டின் முடிவில் ரூ.10.71 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசு வரும் 2026-27 நிதியாண்டில் 1.79 லட்சம் கோடி ரூபாயை கடனாக பெற திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பொருளாதார நிலை

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் அறிக்கையின்படி, மாநிலமானது வலுவான பொருளாதார வளர்ச்சியுடன், பெயரளவு மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பு 2025-26 ஆம் ஆண்டில் 14.5 சதவிகிதமாக வளர்ச்சியடையும் எனவும், உண்மையான வளர்ச்சி 9 சதவிகிமாகவும், சராசரி பணவீக்கம் 5.5 சதவிகிமாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2027-28 மற்றும் 2028-29 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி ஆண்டுக்கு 14 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வருவாய் விவரங்கள்

வருவாய் வரவினங்கள்:

மத்திய அரசின் நிதிப் பகிர்வு உட்பட, மாநில அரசின் மொத்த வருவாய் 2025-26 நிதியாண்டில் 3,09,697.92 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட நிலையில்,  2026-27 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் இந்த தொகையானது 3,44,575.31 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசின் சொந்த வரி, வரி அல்லாத வருவாய்:

மாநில அரசின் சொந்த வரி வருவாய், 2025-26 நிதியாண்டில் 2,06,540.36 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில்,  2026-27 நிதியாண்டில் 2,29,579.12 கோடி ரூபாயாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதேநேரம், 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் இந்த வரி அல்லாத வருவாய் 27 ஆயிரத்து 703 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வரிகளில் மாநில அரசின் பங்கு

2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் 56,819.23 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்த மத்திய அரசின் வரிகளில் மாநில அரசுக்கான பங்கு, 2026-27 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் 62,530.65 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் செலவின விவரங்கள்:

2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் வருவாய் செலவினங்கள் 3,93,271.63 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025-26 நிதியாண்டிற்கானதை காட்டிலும் 3.79 சதவிகிதம் அதிகமாகும். இதில் ஊதிய செலவினங்களுக்கு மட்டுமே 94 ஆயிரத்து 377 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சம்பளம் அல்லாத செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பிற்கான செலவினமாக 18 ஆயிரத்து 735 கோடி ரூபாயாகவும், ஓய்வூதியம் தொடர்பான செலவினங்களுக்காக 45 ஆயிரத்து 323 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.  மானியங்கள் மற்றும் நிதி மாற்றங்களுக்காக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 108 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் கடனுக்கான வட்டி செலுத்துவதற்காக 78 ஆயிரத்து 677 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நடப்பு நிதியாண்டில் 51 ஆயிரத்து 442 கோடியை மூலதன செலவிற்காக ஒதுக்கப்பட்ட நிலையில், 2026-27 நிதியாண்டிற்காக 59 ஆயிரத்து 561 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு அரசின் நிதி, வருவாய் பற்றாக்குறை

2026-27 நிதியாண்டிற்கான இடைக்காலபட்ஜெட்டில் மாநில அரசின் வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.  மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பில் நிதிப்பற்றாக்குறையின் விகிதம், 3.00 சதவிகிதமாக உள்ளது.

தமிழ்நாடு அரசின் கடன் விவரங்கள்

மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதலும் திரும்பச் செலுத்துதலும் மதிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, 2026-27 ஆம் ஆண்டில் மாநில அரசு 1,79,809.65 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. அதேநேரம், 60,413.42 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்த உள்ளது. இதன் விளைவாக, 31.03.2027 அன்று நிலுவையில் உள்ள கடன் 10,71,770.34 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 2026-27 ஆம் ஆண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 26.35 சதவிகிதம் ஆக இருக்கும்”என தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

பா.ம.க.வில் இருந்து அன்புமணி நீக்கம்- ராமதாஸ் அதிரடி

Posted by - September 11, 2025 0
விளக்கமளிக்காததால் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவே அர்த்தம். இதுவரை எவரும் கட்சியில் செயல்படாத வகையில் தான்தோன்றித்தனமாக அன்புமணி செயல்பட்டுள்ளார்.அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு உரிய…

பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!

Posted by - July 23, 2025 0
அதிமுக கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வருவதற்காக பாஜக-வை கூட்டணியில் இருந்து வெளியேற்ற எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற…

அமைச்சர் மெய்யநாதனை புறக்கணிக்கிறாரா அமைச்சர் ரகுபதி?

Posted by - August 26, 2025 0
புதுக்கோட்டை மாவட்ட திமுக-வில் அமைச்சர்கள் ரகுபதியும் சிவ.வீ.மெய்யநாதனும் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பவர்கள். இதில், ரகுபதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பதால் கூடுதல் அதிகாரத்துடன் கோலோச்சி…

விண்டேஜ் கார் ஓட்டுவதையும், சிலம்பம் சுற்றுவதையும் ரீல்ஸ் பதிவிட்டு விளையாடுவதா.!

Posted by - January 12, 2026 0
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, 3 மாத காலத்திற்குள் முடிவு எட்டப்படும் என தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் கொலை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அதிகாலையில் ரவுடி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் தலைநகர்…

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!

Posted by - February 26, 2026 0
அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி; அதிரடியாக அறிவித்த அமைச்சர் கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அண்ணா பல்கலை. தற்காலிக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *