Generated Image February 26 2026 12 55PM

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!

130 0

அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி; அதிரடியாக அறிவித்த அமைச்சர்

கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.

திருவிடைமருதூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்த உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்தனர்.

பணியாளர்கள் மீது முதலமைச்சருக்கு அக்கறை

தமிழ்நாடு முதலமைச்சர் பணியாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளதால் இவர்கள் தொடர்ந்து பணிபுரிய அறிவுறுத்தினார்கள். அதனால் அண்ணா பல்கலைக்கழக தற்காலிக உதவி பேராசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி வந்த 328 தற்காலிக உதவி பேராசிரியர்கள் (Teaching Fellows) முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • மீண்டும் உடனடி நியமனம், பணி நீட்டிப்பு ஆணை வழங்குதல்.
  • ஜனவரி மாதத்திற்கான ஊதிய இழப்பை வழங்குதல்
  • நீதிமன்ற உத்தரவை உடனடியாக பின்பற்றி ஊதிய உயர்வு மற்றும் அனுபவ சான்றிதழ் வழங்கல்.
  • அடிப்படை தேவைகளான ESI, EPF, மருத்துவ காப்பீடு போன்றவற்றை நடைமுறைப்படுத்துதல்.
  • பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்திற்கு பணிக்கொடை மற்றும் ஈமச்சடங்கு நிதி வழங்கிட வேண்டுதல்.
  • கல்வித் தரத்தை பாதிக்கும் நடைமுறைகளை நிறுத்தல்
  • UGC விதிமுறைகளின்படி ஊதிய திருத்தம் செய்து சம வேலைக்கு சம ஊதியம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

Related Post

தமிழக செய்தி சேனல்களை சாடிய தவெக-வினர்..

Posted by - August 21, 2025 0
தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று நடைபெற்றது கட்சியின் தலைவர் விஜய் அவர்களின் அதிரடி உரையுடன் மாநாடு முடிவடைந்தது. இந்நிலையில் நேற்று முதலே தொண்டர்களின் கட்டுகடங்காத…
Gemini Generated Image ijuv8gijuv8gijuv e1775712729499

திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் – அண்ணாமலை உறுதி!

Posted by - April 9, 2026 0
கோவையில் செந்தில்பாலாஜி தோற்கடிக்கப்படுவார் என்றும், திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் என்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்…

திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் – எல்.முருகன் உறுதி!

Posted by - May 1, 2026 0
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும்,  திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன்…

பாஜக கொடுத்த பொறுப்பை தூக்கி எறிந்த அண்ணாமலை.!

Posted by - February 3, 2026 0
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தமிழக பாஜக சார்பாக தொகுதி பொறுப்பாளர்கள் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட நிலையில், அதனை அவர் நிராகரித்துள்ளார். இது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *