உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை – மகன்! காரணமான முகுந்தன் யார்?

209 0

விழுப்புரத்தில் இன்று பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸும் தலைவர் அன்புமணியும் கலந்து கொண்டு பேசினர்.

சென்னை பனையூரில் எனக்கு ஒரு அலுவலகம் வைத்துள்ளேன். அங்கே என்னை வந்து பார்க்கலாம் என கோபத்தில் மேடையிலேயே மைக்கை தூக்கி வீசிவிட்டு அன்புமணி வெளியேறிய சம்பவம் பாமக தொண்டர்கள் மத்தியில் ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் இன்று பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸும் தலைவர் அன்புமணியும் கலந்து கொண்டு பேசினர். அப்போது ராமதாஸ் பாமக இளைஞரணித் தலைவர் முகுந்தனுக்கு பொறுப்பு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் முகுந்தனௌக்கு பொறுப்பு வழங்க கூடாது என அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் எப்படி பொறுப்பு வழங்க முடியும். கட்சியில் வந்து 4 மாதம் ஆனவருக்கு என்ன அனுபவம் இருக்கும் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய ராமதாஸ், ”பாமகவை உருவாக்கியது நான் தான் இதனை. நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். அதுதான் நடக்கணும். ஏற்கவில்லை என்றால் விருப்பம் இல்லாதவர்கள் விலகி கொள்ளுங்கள்” என ராமதாஸ் கோபமாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய் அன்புமணி, பனையூரில் எனக்கு ஒரு அலுவலகம் இருக்கிறது. என்னை சந்திக்க நினைத்தால் அங்கு வந்து பார்க்கலாம் என தெரிவித்தார்.

மேடையிலேயே தந்தை மகன் கருத்து வேறுபாடு வெளிப்பட்டது பாமக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்புமணி ராமதாஸ் இடையே குழப்பத்துக்கு காரணமான முகுந்தன் ராமதாஸின் பேரன் ஆவார். பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன் தான் ப.முகுந்தன். சகோதரி மகன் முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பதவியை கொடுத்ததால்தான் இந்த பிரச்சினை வெடித்துள்ளது. முன்னதாக ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் பாமக இளைஞரணி தலைவராக இருந்தார். பின்னர் அன்புமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் அந்த பதவியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பதவிக்கு ஆள் நியமிக்கப்படாமல் சும்மாகவே இருந்தது. அதற்கு முன்னதாக அன்புமணிதான் இளைஞரணித் தலைவராக பதவி வகித்து வந்தார். அவர் தலைவரானதும்தான் அந்த பதவி ஜி.கே. மணியின் மகனுக்கு சென்றது. அவரும் ராஜினாமா செய்யவும் தற்போது முகுந்தனுக்கு வழங்கி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பாமக எம்.எல்.ஏ அருள் கூறுகையில் “ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. இப்போது வெளிப்பட்டது சலசலப்புதான். இன்றைக்குள் எல்லாம் சரியாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாமக பொதுக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது ”அதானி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என திமுக அரசுக்கு கண்டனம். சாதிவாரி கணக்கெடுப்பை கட்டாயமாக்க சட்ட திருத்தம் தேவை. தமிழகத்தில் 3 முறை உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Post

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.பி. கல்யாண சுந்தரம் விடுவிப்பு .

Posted by - July 14, 2025 0
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக எம்.எல்.ஏ. சாக்கோட்டை க.அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் வடக்கு மாவட்டக்…

கரூர் துயர சம்பவம்! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. 41 குடும்பங்களை தத்தெடுக்கும் விஜய்..

Posted by - October 13, 2025 0
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோகால் மூலம் விஜய் பேசினார்.…

நான் முதலமைச்சரானால்! #விஜய்

Posted by - February 23, 2026 0
2026 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.…

திமுக மாணவரணி செயலாளர் மாற்றம் – காரணம் என்ன ?

Posted by - March 15, 2026 0
நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, 2021ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக செய்தி தொடர்பு இணை…

எல்லா பக்கமும் அணை கட்டிய ஈபிஎஸ்.. தவிக்கும் செங்கோட்டையன் – பதறியடித்து நோ சொல்ல காரணம் என்ன?

Posted by - September 26, 2025 0
அதிமுகவின் முழு அதிகாரமிக்க தலைமையாக எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து இருப்பதால், போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் செய்வதறியாமல் தவித்து வருகிறாராம். எடப்பாடி பழனிசாமியை மேலும் பகைத்துக் கொள்ள வேண்டாம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *