Tamil Nadu New DGP Mahesh Kumar IPS: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் அகர்வால். சட்டம் படித்துவிட்டு, சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார்.
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு புதிய டிஜிபியாக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யார் இவர்?
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் அகர்வால். சட்டம் படித்துவிட்டு, சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார். 1994ஆம் ஆண்டு தமிழக பேட்ச்சைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி இவர். காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.
முன்னதாக சென்னைப் பெருநகர காவல் ஆணையராகவும், பிஎஸ்எஃப் கூடுதல் டிஜிபியாகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பெயர் பரிசீலனையில் இருந்த நிலையில், தற்போது மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.