உருவானது சக்கரம்.. 4 நாளில் புயல்?! வெளுக்கும் மழை-வெதர்மேன்!

296 0

தமிழக கடற்கரைரையை நோக்கி இந்திய சீன பகுதியில் இருந்து வரும் சக்கரம்  நான்கு நாட்கள் கழித்து நல்ல மழை கொடுக்க வாய்ப்புள்ளதாக வெதர்மேன் அப்டேட் போட்டுள்ளார்.

இந்தோ-சீனா பகுதியில் இருந்து உருவாகி வரும் சக்கரம் தற்போது ஆரம்ப நிலையில் உள்ளது இன்று அது மெதுவாக நகரத் தொடங்கி தாய்லாந்து வளைகுடாவில் இருந்து அந்தமான் கடலுக்குள் நுழையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி நகர்ந்து வரும் காற்றழுத்தம் 4 நாட்களில் அதாவது வரும் டிசம்பர் 8 ஆம் தேதி தமிழக கரையோர பகுதிகளில் புயலை உருவாக்கும் என்று கூறியுள்ளார். அப்போது மகாபலிபுரம் முதல் காரைக்கால் வரை புள் காற்றோடு மழை வர வாய்ப்புள்ளது. அதே சமயம் பாண்டிச்சேரி, கடலூர் படுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

மேடன்-ஜூலியன் அலைவு எனப்படும் கிழக்கு நோக்கி நகரும் மேக கூட்டங்கள் பூமத்திய ரேகைக்கு அருகில் வந்து மழைப்பொழிவு ஏற்படுத்தும். நமது கடலில் உள்ள கிங்மேக்கரரான இது தற்போது சக்கரத்தை தீவிரப்படுத்துவதற்கு சூடான கடல் காற்றுகளை அளித்து உதவுகின்றன,

இது வலுப்பெற்றால் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவக்காற்றின் 1வது சூறாவளியாக மாற 90% வாய்ப்பு உள்ளது. ஆனால் வறண்ட காற்றின் தாக்கத்தால் கடற்கரைக்கு அருகில் வந்து இந்த காற்றழுத்தம் வலுவிழக்க வாய்ப்புள்ளது. ஆனால் அது வலுப்பெற்றால் வட தமிழகம் அதீத மழையால் பாதிப்புக்கு உள்ளாகும்.

சென்னையில் கடந்த 30 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசியுள்ளது. அவை 1994 அக்டோபர் புயல் மற்றும் 2016 வர்தா. உடனே வரவிருக்கும் சக்கரம் 100 கிமீ வேகத்தில் வீறு கொண்டு வருமோ என்று தயவு செய்து நினைக்க வேண்டாம். புள்ளிவிவரங்களை மட்டும் போடுகிறேன்.6 ஆம் தேதிக்குள் அனைத்து புள்ளிவிவரங்களுடன் ஒரு சிறப்பு அப்டேட் போடப்படும்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Post

இந்த விழாவுக்கு அசுரன் பட டயலாக் முக்கிய காரணம் – மேடையில் விஜய் அதிரடி

Posted by - June 17, 2023 0
மாணவர்களை சந்திக்கும் நிகழ்வில் நடிகர் விஜய் தனுஷின் அசுரன் பட வசனத்தை மேற்கோள்காட்டினார். தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று…

சற்றுமுன் வந்த மழை அலர்ட்.. 6 மாவட்டங்களில் மதியம் 1 மணிக்குள் சம்பவம்! பறந்து வந்த வானிலை அறிவிப்பு

Posted by - December 20, 2023 0
சென்னை: அடுத்த 3 மணி நேரம் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து வெளியான வானிலை…

டிட்வா புயலால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு அபாயம்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

Posted by - November 29, 2025 0
திருச்சி: டிட்வா புய​லால் பல்​வேறு மாவட்​டங்​களில் வெள்ளப் பாதிப்பு ஏற்​படும் என்று தனி​யார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் கூறி​னார். இது தொடர்​பாக அவர் மேலும் கூறிய​தாவது: இலங்​கை​யில் இருந்து…

பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி நாளை முதல் ஸ்டிரைக் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Posted by - January 8, 2024 0
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகவும், எனவே திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. பேச்சுவார்த்தைக்கு பின் பேட்டியளித்த தொழிற்சங்க பிரதிநிதிகள்,…

2015ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு..!!!

Posted by - March 5, 2024 0
தமிழக அரசு சார்பில், 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த திரைப்படங்கள், நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு உள்ளிட்டோர் தெருவே செய்யப்பட்டு அவர்களுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *