உருவானது சக்கரம்.. 4 நாளில் புயல்?! வெளுக்கும் மழை-வெதர்மேன்!

309 0

தமிழக கடற்கரைரையை நோக்கி இந்திய சீன பகுதியில் இருந்து வரும் சக்கரம்  நான்கு நாட்கள் கழித்து நல்ல மழை கொடுக்க வாய்ப்புள்ளதாக வெதர்மேன் அப்டேட் போட்டுள்ளார்.

இந்தோ-சீனா பகுதியில் இருந்து உருவாகி வரும் சக்கரம் தற்போது ஆரம்ப நிலையில் உள்ளது இன்று அது மெதுவாக நகரத் தொடங்கி தாய்லாந்து வளைகுடாவில் இருந்து அந்தமான் கடலுக்குள் நுழையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி நகர்ந்து வரும் காற்றழுத்தம் 4 நாட்களில் அதாவது வரும் டிசம்பர் 8 ஆம் தேதி தமிழக கரையோர பகுதிகளில் புயலை உருவாக்கும் என்று கூறியுள்ளார். அப்போது மகாபலிபுரம் முதல் காரைக்கால் வரை புள் காற்றோடு மழை வர வாய்ப்புள்ளது. அதே சமயம் பாண்டிச்சேரி, கடலூர் படுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

மேடன்-ஜூலியன் அலைவு எனப்படும் கிழக்கு நோக்கி நகரும் மேக கூட்டங்கள் பூமத்திய ரேகைக்கு அருகில் வந்து மழைப்பொழிவு ஏற்படுத்தும். நமது கடலில் உள்ள கிங்மேக்கரரான இது தற்போது சக்கரத்தை தீவிரப்படுத்துவதற்கு சூடான கடல் காற்றுகளை அளித்து உதவுகின்றன,

இது வலுப்பெற்றால் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவக்காற்றின் 1வது சூறாவளியாக மாற 90% வாய்ப்பு உள்ளது. ஆனால் வறண்ட காற்றின் தாக்கத்தால் கடற்கரைக்கு அருகில் வந்து இந்த காற்றழுத்தம் வலுவிழக்க வாய்ப்புள்ளது. ஆனால் அது வலுப்பெற்றால் வட தமிழகம் அதீத மழையால் பாதிப்புக்கு உள்ளாகும்.

சென்னையில் கடந்த 30 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசியுள்ளது. அவை 1994 அக்டோபர் புயல் மற்றும் 2016 வர்தா. உடனே வரவிருக்கும் சக்கரம் 100 கிமீ வேகத்தில் வீறு கொண்டு வருமோ என்று தயவு செய்து நினைக்க வேண்டாம். புள்ளிவிவரங்களை மட்டும் போடுகிறேன்.6 ஆம் தேதிக்குள் அனைத்து புள்ளிவிவரங்களுடன் ஒரு சிறப்பு அப்டேட் போடப்படும்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Post

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. வானிலை மையம் எச்சரிக்கை

Posted by - May 22, 2024 0
 தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில்…

பாடசாலையா? பாலியல் குற்றவாளிகள் கூடாரமா? பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்! கொதிக்கும் ஈபிஎஸ்

Posted by - December 26, 2024 0
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? இந்த ஆட்சியின் அலட்சியத்தால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- ஈபிஎஸ். தமிழ்நாட்டின் பெருமைமிகு…

உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?

Posted by - April 25, 2024 0
தற்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது தான் உண்மை. அதேபோல் இந்தியா முழுவதும் கூகுள் பே…

2025 முடிவுக்கு முன் Tamil Nadu-வில் நடந்த முக்கிய 10 மாற்றங்கள் – Technology, Health, Lifestyle updates!

Posted by - December 12, 2025 0
2025 முடிவுக்கு வந்துட்டோம். இந்த வருடம் technology, health, education, lifestyle, economy எல்லாத்திலும் பெரிய மாற்றங்கள் நடந்துது. Tamil Nadu-வில் இந்த வருடம் அதிகம் பேசப்பட்ட,…

கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Posted by - May 17, 2023 0
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதலமைச்சர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்ப முதலமைச்சர் உத்தரவு தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *