கொடிபசலைக்கீரை.. கொட்டி கொட்டி கொடுக்கும் நன்மைகள்.. பளபள சருமத்துக்கு கைகொடுக்கும் கொடிபசலை இலைகள்

266 0

சென்னை:

கொடிபசலை கீரைகளின் நன்மை என்ன தெரியுமா? சரும பாதுகாப்புக்கு எப்படியெல்லாம் இந்த கீரையின் சாற்றினை பயன்படுத்தலாம் தெரியுமா?

சிகப்பு, பச்சை என்று 2 வகையான கொடி பசலைகளுமே உடலுக்கு நன்மை தரக்கூடியவை.. இந்த கீரைகளை போலவே, இதன் தண்டுகளிலும் நிறைய சத்துக்கள் உள்ளன. இரண்டிலுமே நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாகும். இதைத்தவிர, வைட்டமின் A, B, சுண்ணாம்பு, இரும்பு போன்ற சத்துக்கள் உள்ளன.கொடிபசலைக்கீரை.. கொட்டி கொட்டி கொடுக்கும் நன்மைகள்.. பளபள சருமத்துக்கு  கைகொடுக்கும் கொடிபசலை இலைகள் | Do you know the Amazing Health Uses of  Kodipasalai and ...எனவே, ரத்தம் சுத்தமாவதுடன், ரத்த விருத்தி அதிகமாகி ஹீமோகுளோபின் பிரச்சனை தீரும். நார்ச்சத்து நிறைந்த தாவரம் என்பதால், மலச்சிக்கலும் தீரும்.. இதனால், குடல் ஆரோக்கியமும் காக்கப்படும்.

சரும பாதுகாப்பு: சரும பாதுகாப்பை தருவதில், கொடிபசலைக்கு பெரும்பங்கு உள்ளது.. கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும்போது, முகம் பொலிவு பெறும், சருமம் பளபளப்பாகும். வீக்கம், கட்டிகள் இருந்தாலும், இந்த கீரையின் சாறு பயன்படுத்தி வரலாம்.

பாலுணர்வை தூண்டக்கூடிய கீரை என்பதால், மருத்துவத்தில் பெரும்பாலும் சிகிச்சைக்கு பயன்படுத்துகிறார்கள்.. உடலிலுள்ள உஷ்ணத்தை தவிர்த்து, குளிர்ச்சி தரக்கூடிய கீரை..

சிறுநீர் பிரச்சனை: அதனால்தான், சிறுநீர் பிரச்சனை என்றால், இந்த கீரையை வேகவைத்து சூப் போல குடிக்க சொல்வார்கள்.. ஆனால், சளி, இருமல், காய்ச்சல் நேரத்தில் இந்த கீரையை தவிர்த்துவிடலாம். கர்ப்பிணிகளுக்கு இந்த கீரையை சமைத்து தந்தால், வயிற்றை சுற்றி இருக்கும் திரவம் சுத்தமாகும்…

கொடி பசலைக்கீரை சாறில், ஒரு ஸ்பூன் எடுத்து அதில், கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்கு தந்து வந்தால் நீர்க்கட்டு குணமாகும். அதேபோல, கொடி பசலைக்கரையுடன் மல்லிவிதை, சீரகம் சேர்த்து கஷாயம் போல குடித்து வந்தால் மலச்சிக்கல் தீர்ந்து விடும்.. கொடி பசலை கீரையுடன் விளக்கெண்ணெய், மஞ்சள் சேர்த்து வதக்கி கட்டினால், எவ்வளவு பெரிய கட்டிகள் என்றாலும் பழுத்து உடைந்துவிடும்..

பாதாம்பருப்பு: இந்த கொடி பசலைக்கீரையை உளுந்து ஊற வைத்த தண்ணீர் சேர்த்து அரைத்து குடித்து வந்தால், பெண்களுக்கு எற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும். கொடிபசலைக்கரை சாறுஎடுத்து, அதில் பாதாம் பருப்பை ஊறவைத்து உலர்த்தி பொடி செய்து, பசும்பாலில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் விந்தில் உயிரணுக்ககளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பல நன்மைகளை பெற்றுத்தரும் இந்த கொடிபசலையை, மருந்தாக உட்கொள்ளும்முன்பு, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற வேண்டும்.

Related Post

உக்கிரமா இருக்கும்.. தென் மாவட்டங்களில் மீண்டும் அதிகனமழைக்கு வாய்ப்பு! 3 நாட்கள் அலர்டா இருங்க

Posted by - December 26, 2023 0
சென்னை: தென் மாவட்டங்களில் மீது அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் எச்சரித்து உள்ளார். ராஸ்பி அலைவு கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிக்கு…

கோவில்களுக்குள் செல்போன், கேமராக்கள் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது- அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - September 2, 2023 0
சென்னை: பழனி தண்டாயுதபாணி கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒரு படம் சமூக வலைதளங்களில் உலாவி வருவதாக சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த…

எதிர்நீச்சலில் இவர் தான் இனி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பவரா??வெளியான Recent தகவல்!

Posted by - September 13, 2023 0
எந்த ஒரு கலைஞனும் சினிமாவில் நுழைந்த உடனே வெற்றியை காண்பது இல்லை என்று தான் சொல்லவேண்டும்…எல்லோருமே பல போராட்டங்களுக்கு பிறகு தான் பலரும் வெற்றிக்கனியை சுவைக்கிறார்கள் என்றே…

முக்கிய ரெயில் நிலையங்களில் ‘கியூஆர்கோடு’ ‘யு.பி.ஐ. செயலி’ மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் வசதி

Posted by - February 21, 2023 0
சென்னை: நவீன தகவல் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக அனைத்து தொழில் சார்ந்த நடவடிக்கைகளும் வங்கியின் மூலமே பணபரிமாற்றம் செய்யப்படுகிறது. கையில் ரொக்கமாக செலுத்துவதற்கு பதிலாக ‘கூகுள்…

என் குழந்தையோட அப்பா..! கர்ப்பமாக்கி ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்? ஜாய் கிரிசில்டா புகார்

Posted by - August 29, 2025 0
நடிகரும், சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா குற்றம்சாட்டியுள்ளார். Madhampatty Rangaraj: மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *