கொடிபசலைக்கீரை.. கொட்டி கொட்டி கொடுக்கும் நன்மைகள்.. பளபள சருமத்துக்கு கைகொடுக்கும் கொடிபசலை இலைகள்

249 0

சென்னை:

கொடிபசலை கீரைகளின் நன்மை என்ன தெரியுமா? சரும பாதுகாப்புக்கு எப்படியெல்லாம் இந்த கீரையின் சாற்றினை பயன்படுத்தலாம் தெரியுமா?

சிகப்பு, பச்சை என்று 2 வகையான கொடி பசலைகளுமே உடலுக்கு நன்மை தரக்கூடியவை.. இந்த கீரைகளை போலவே, இதன் தண்டுகளிலும் நிறைய சத்துக்கள் உள்ளன. இரண்டிலுமே நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாகும். இதைத்தவிர, வைட்டமின் A, B, சுண்ணாம்பு, இரும்பு போன்ற சத்துக்கள் உள்ளன.கொடிபசலைக்கீரை.. கொட்டி கொட்டி கொடுக்கும் நன்மைகள்.. பளபள சருமத்துக்கு  கைகொடுக்கும் கொடிபசலை இலைகள் | Do you know the Amazing Health Uses of  Kodipasalai and ...எனவே, ரத்தம் சுத்தமாவதுடன், ரத்த விருத்தி அதிகமாகி ஹீமோகுளோபின் பிரச்சனை தீரும். நார்ச்சத்து நிறைந்த தாவரம் என்பதால், மலச்சிக்கலும் தீரும்.. இதனால், குடல் ஆரோக்கியமும் காக்கப்படும்.

சரும பாதுகாப்பு: சரும பாதுகாப்பை தருவதில், கொடிபசலைக்கு பெரும்பங்கு உள்ளது.. கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும்போது, முகம் பொலிவு பெறும், சருமம் பளபளப்பாகும். வீக்கம், கட்டிகள் இருந்தாலும், இந்த கீரையின் சாறு பயன்படுத்தி வரலாம்.

பாலுணர்வை தூண்டக்கூடிய கீரை என்பதால், மருத்துவத்தில் பெரும்பாலும் சிகிச்சைக்கு பயன்படுத்துகிறார்கள்.. உடலிலுள்ள உஷ்ணத்தை தவிர்த்து, குளிர்ச்சி தரக்கூடிய கீரை..

சிறுநீர் பிரச்சனை: அதனால்தான், சிறுநீர் பிரச்சனை என்றால், இந்த கீரையை வேகவைத்து சூப் போல குடிக்க சொல்வார்கள்.. ஆனால், சளி, இருமல், காய்ச்சல் நேரத்தில் இந்த கீரையை தவிர்த்துவிடலாம். கர்ப்பிணிகளுக்கு இந்த கீரையை சமைத்து தந்தால், வயிற்றை சுற்றி இருக்கும் திரவம் சுத்தமாகும்…

கொடி பசலைக்கீரை சாறில், ஒரு ஸ்பூன் எடுத்து அதில், கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்கு தந்து வந்தால் நீர்க்கட்டு குணமாகும். அதேபோல, கொடி பசலைக்கரையுடன் மல்லிவிதை, சீரகம் சேர்த்து கஷாயம் போல குடித்து வந்தால் மலச்சிக்கல் தீர்ந்து விடும்.. கொடி பசலை கீரையுடன் விளக்கெண்ணெய், மஞ்சள் சேர்த்து வதக்கி கட்டினால், எவ்வளவு பெரிய கட்டிகள் என்றாலும் பழுத்து உடைந்துவிடும்..

பாதாம்பருப்பு: இந்த கொடி பசலைக்கீரையை உளுந்து ஊற வைத்த தண்ணீர் சேர்த்து அரைத்து குடித்து வந்தால், பெண்களுக்கு எற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும். கொடிபசலைக்கரை சாறுஎடுத்து, அதில் பாதாம் பருப்பை ஊறவைத்து உலர்த்தி பொடி செய்து, பசும்பாலில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் விந்தில் உயிரணுக்ககளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பல நன்மைகளை பெற்றுத்தரும் இந்த கொடிபசலையை, மருந்தாக உட்கொள்ளும்முன்பு, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற வேண்டும்.

Related Post

பள்ளிகள் திறப்பு எப்போது? தள்ளிப்போக வாய்ப்பு? அமைச்சர் அன்பில் சொன்னது என்ன?

Posted by - May 22, 2025 0
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகான பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும்…

தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக தங்கத்தை வாரி வழங்கியதுதான் அதிமுக அரசாங்கம் – இபிஎஸ்

Posted by - April 13, 2024 0
தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக தங்கத்தை வாரி வழங்கியது தான் அதிமுக அரசாங்கம் என தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக…

உருவானது சக்கரம்.. 4 நாளில் புயல்?! வெளுக்கும் மழை-வெதர்மேன்!

Posted by - December 4, 2022 0
தமிழக கடற்கரைரையை நோக்கி இந்திய சீன பகுதியில் இருந்து வரும் சக்கரம்  நான்கு நாட்கள் கழித்து நல்ல மழை கொடுக்க வாய்ப்புள்ளதாக வெதர்மேன் அப்டேட் போட்டுள்ளார். இந்தோ-சீனா பகுதியில் இருந்து உருவாகி…

மும்முனை போட்டிக்கு தயாராகும் அரசியல் களம்!

Posted by - July 5, 2025 0
தமிழக அரசியல் களத்தில் புதிய வரவாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் திமுக அணி மற்றும் பாஜக அணிகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை…

நான் முதல்வன் திட்டம்: இவர்களுக்கெல்லாம் ரூ.50,000 ஊக்கத்தொகை! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

Posted by - November 13, 2025 0
நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 50.000 ரூபாய் ஊக்கத்தொகையாக நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நான் முதல்வன் திட்டத்தின்கீழ் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *