‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி 18-வது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் 1,000 பேர் கைது

80 0

சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வலி​யுறுத்தி சென்​னை​யில் நேற்று 18-வது நாளாக போராட்​டத்​தில் ஈடு​பட்ட 1,000-க்​கும் மேற்​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்​யப்​பட்​டனர்.

தமிழகத்​தில் கடந்த 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு பணி​யில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், அதன் பின்​னர் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்​கும் அடிப்​படை ஊதி​யத்​தில் பெரிய அளவில் வேறு​பாடு உள்​ளது. இதனால் பாதிக்​கப்​பட்​டுள்ள 20 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்கள் ஊதிய முரண்​பாட்டை சரிசெய்​யக் கோரி நீண்ட கால​மாக போராடி வரு​கின்​றனர்.

வெவ்​வேறு இடங்​களில்… இந்த நிலை​யில், சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வலி​யுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்​கம் சார்​பில் சென்​னை​யில் கடந்த டிசம்​பர் 26-ம் தேதி கால​வரையற்ற போராட்​டம் தொடங்​கப்​பட்​டது.

கல்​வித் துறை தலைமை அலு​வல​கம் அமைந்​துள்ள நுங்​கம்​பாக்​கம் டிபிஐ வளாகம், எழும்​பூரில் உள்ள மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி அலு​வல​கம், சேப்​பாக்​கம் எழில​கம், கடற்​கரை சாலை​யில் உள்ள மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் என வெவ்​வேறு இடங்​களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

17-வது நாளான நேற்று முன்​தினம் (ஞா​யிறு) மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்​து, மாலை​யில் விடு​வித்​தனர். இந்​நிலை​யில் 18-வது நாளான நேற்​றும் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் பேரணி​யாக சென்று போராட்​டம் நடத்​தினர்.

‘சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வேண்​டும், திமுக அரசே! தேர்​தல் வாக்​குறு​தியை நிறை வேற்​று, ஊதிய உயர்வு கேட்​க​வில்​லை, உரிய ஊதி​யம்​தான் கேட்​கிறோம்’ என்று அவர்​கள் கோஷம் எழுப்​பினர். போராட்​டத்​தில் ஈடு​பட்ட 1,000-க்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். அனை​வரும் மாலை​யில் விடுவிக்​கப்​பட்டனர்​.

Related Post

பணிநேரம் முடியும்வரை ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு

Posted by - March 29, 2023 0
விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள்…

ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம்… டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு !

Posted by - May 20, 2023 0
டாஸ்மாக்கிற்கு மதுபானம் வாங்க வருபவர்களிடம் ரூ. 2 ஆயிரம் ரூபாய் தாள்களை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் வாடிக்கையாளரிடம் 2,000 ரூபாய்…

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவியிடம் ரூ.6 லட்சம் பறிப்பு: ஆன்லைனில் நூதன மோசடி

Posted by - September 8, 2023 0
புதுச்சேரி: வடமாநிலத்தை சேர்ந்த லாவண்யா (வயது 26) என்ற பெண், புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. படித்து வருகிறார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். காதலர்களுக்கு…

அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? – சாடிய உயர்நீதிமன்றம்

Posted by - April 18, 2025 0
பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார் பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என உயர்…

இறுதி மூச்சு வரை ஸ்டாலின் தான் முதல்வர்.. நாக்கை நீட்டி வாக்கு சொன்ன அமைச்சரால் சிரிப்பலை

Posted by - December 17, 2022 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் நிரந்தர முதலமைச்சர் என்றும், அவர் இறுதி மூச்சுவரை முதலமைச்சராக இருப்பார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். இறுதி மூச்சு உள்ள வரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *