டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?

139 0

முதலமைச்சர் ஸ்டாலினின் அண்மையில் டெல்லி சென்று வந்த நிலையில், சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த, சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்?

தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பிய டாஸ்மாக் வழக்கை விசாரித்து வரும் அமலாகக்த்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குநர் பியூஷ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் கனிம வளக் கொள்ளை  தொடர்பான வழக்குகளிலும் விசாரணை அதிகரிகளாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கையும், பியூஷ் குமார் மற்றும் கார்த்திக் விசாரித்து வந்தனர்.

முதலமைச்சர் டெல்லி பயணம்:

டாஸ்மாக் அலுவலகம், முதலமைச்சரின் உறவினரான ஆகாஷ் பாஸ்கரன் வீடு என, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை அடுத்தடுத்து அதிரடியான சோதனைகளில் ஈடுபட்டு வந்தது. குறிப்பாக டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதோடு, டாஸ்மாக்கில் முறைகேடு செய்யப்பட்ட பணம் ஆகாஷ் பாஸ்கரன் வாயிலாக, சினிமாவில் முதலீடு செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதில் உதயநிதியின் தலையீடு இருப்பதாகவும் சிலர் இணையத்தில் தீவிரமாக களமாடி வந்தனர். இத்தகைய பரபரப்பான சூழலில் தான், 3 ஆண்டுகளாக இல்லாத வகையில், கடந்த மாதம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:

மூன்று ஆண்டுகளாக பங்கேற்காத நிதி ஆயோக் கூட்டத்தில் இப்போது மட்டும் முதலமைச்சர் பங்கேற்பது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். வழக்குகளில் இருந்து தனது அரசையும், மகனையும் காப்ப்பாற்றிக் கொள்ளவே முதலமைச்சர் டெல்லி செல்வதாக விமர்சித்து இருந்தனர். ஆனால், மாநிலத்திற்கான நிதி தொடர்பான கோரிக்கைகளை வைக்கவே டெல்லி சென்றதாக, முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் டாஸ்மாக், செந்தில் பாலாஜி மற்றும் கனிமவளக் கொள்ளை தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த, அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிடப்பில் போடப்படும் வழக்குகள்:

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், டாஸ்மாக் வழக்கில் பல அதிரடியான திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக முக்கிய அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் அந்த வழக்குகளின் விசாரணை முடங்கும் அல்லது தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் வழக்கை தற்போதைக்கு பெரிதாக்க மத்திய அரசு விரும்பவில்லையா? அல்லது திமுக உடன் திரை மறைவில் ஏதேனும் ஒப்பந்தங்கள் உறுதியாகியுள்ளனவா? என ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன. அதேநேரம், அதிகாரிகள் மாற்றம் என்பது திமுகவினருக்கு சிறிது காலத்திற்கு நிம்மதியை தரும் என கூறப்படுகிறது.

Related Post

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

Posted by - January 13, 2026 0
இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்க உடனடியாக அரசாணை வழங்க வேண்டும் என்று சீமான் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

அதிமுக ஆட்சியை விமர்சிக்க பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி வேண்டும் : பழனிசாமி ஆவேசம்!

Posted by - December 3, 2022 0
  அதிமுக ஆட்சியை விமர்சிக்க தகுதி வேண்டும். குடும்ப ஆட்சி நடத்தும் ஸ்டாலினுக்கு எந்தவித தகுதியும் இல்லை என கோவையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக…

விஜய் உதயசூரியனுக்கு ஓட்டு போடச் சொன்னாரா? வைரலாகும் வீடியோ- நடந்தது என்ன?

Posted by - March 31, 2026 0
திமுக சின்னம் உதய சூரியனுக்கு ஓட்டுப்போடச் சொன்ன தவெக விஜய்? வைரலாகும் வீடியோ- நடந்தது என்ன? தவெக தலைவர் விஜய், தனது தேர்தல் பிரச்சாரத்தில் உதய சூரியனுக்கு…

மேடையில் அமித் ஷா அப்படி என்ன சொன்னார்? தமிழிசை அளித்த பதில்

Posted by - June 13, 2024 0
ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழாவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசையை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.…

சும்மா இருங்கயா..! ஷூட்டிங்லாம் இல்லையாம், விஜய் மும்பை போக காரணம் இதுதான் – வதந்தி வாய்கள்

Posted by - March 21, 2026 0
தவெக தலைவர் விஜய் ஜனநாயகன் திரைப்படத்தின் ரிஷுட்டிங்கிற்காக மும்பை சென்றதாக வெளியான தகவலில் உண்மையில்லை என கூறப்படுகிறது. TVK Vijay: இயக்குனர் அட்லி வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *