டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?

158 0

முதலமைச்சர் ஸ்டாலினின் அண்மையில் டெல்லி சென்று வந்த நிலையில், சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த, சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்?

தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பிய டாஸ்மாக் வழக்கை விசாரித்து வரும் அமலாகக்த்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குநர் பியூஷ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் கனிம வளக் கொள்ளை  தொடர்பான வழக்குகளிலும் விசாரணை அதிகரிகளாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கையும், பியூஷ் குமார் மற்றும் கார்த்திக் விசாரித்து வந்தனர்.

முதலமைச்சர் டெல்லி பயணம்:

டாஸ்மாக் அலுவலகம், முதலமைச்சரின் உறவினரான ஆகாஷ் பாஸ்கரன் வீடு என, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை அடுத்தடுத்து அதிரடியான சோதனைகளில் ஈடுபட்டு வந்தது. குறிப்பாக டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதோடு, டாஸ்மாக்கில் முறைகேடு செய்யப்பட்ட பணம் ஆகாஷ் பாஸ்கரன் வாயிலாக, சினிமாவில் முதலீடு செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதில் உதயநிதியின் தலையீடு இருப்பதாகவும் சிலர் இணையத்தில் தீவிரமாக களமாடி வந்தனர். இத்தகைய பரபரப்பான சூழலில் தான், 3 ஆண்டுகளாக இல்லாத வகையில், கடந்த மாதம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:

மூன்று ஆண்டுகளாக பங்கேற்காத நிதி ஆயோக் கூட்டத்தில் இப்போது மட்டும் முதலமைச்சர் பங்கேற்பது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். வழக்குகளில் இருந்து தனது அரசையும், மகனையும் காப்ப்பாற்றிக் கொள்ளவே முதலமைச்சர் டெல்லி செல்வதாக விமர்சித்து இருந்தனர். ஆனால், மாநிலத்திற்கான நிதி தொடர்பான கோரிக்கைகளை வைக்கவே டெல்லி சென்றதாக, முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் டாஸ்மாக், செந்தில் பாலாஜி மற்றும் கனிமவளக் கொள்ளை தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த, அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிடப்பில் போடப்படும் வழக்குகள்:

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், டாஸ்மாக் வழக்கில் பல அதிரடியான திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக முக்கிய அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் அந்த வழக்குகளின் விசாரணை முடங்கும் அல்லது தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் வழக்கை தற்போதைக்கு பெரிதாக்க மத்திய அரசு விரும்பவில்லையா? அல்லது திமுக உடன் திரை மறைவில் ஏதேனும் ஒப்பந்தங்கள் உறுதியாகியுள்ளனவா? என ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன. அதேநேரம், அதிகாரிகள் மாற்றம் என்பது திமுகவினருக்கு சிறிது காலத்திற்கு நிம்மதியை தரும் என கூறப்படுகிறது.

Related Post

”இந்து மதம் என்று ஒன்று கிடையாது, அதில் சகோதரத்துவமே இல்லை” – இறங்கி அடித்த திருமா, பேசுமா பாஜக?

Posted by - June 25, 2025 0
இந்து மதம் என்பதே 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இல்லை என, விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். இந்து மதத்தில் சகோதரத்துவம் இல்லை என அரசியலமைப்பு சட்டம்…

அம்பேத்கர் நூல் வெளியீட்டில் சமூக நீதி, அரசியல், மற்றும் மக்கள் சேவை குறித்து விஜய் – திருமாவளவன் கருத்துக்கள்!”

Posted by - December 7, 2024 0
#vijay #tvk #bjp #vck #dmk #aiadmk #congress #thirumavalavan #thalapathyvijay  அம்பேத்கர் நூல் வெளியீட்டில் சமூக நீதி, அரசியல், மற்றும் மக்கள் சேவை குறித்து விஜய்…

“86 வயதில் பொய்யா? திமுகவின் பித்தலாட்டம்” துரைமுருகனை நேரடியாகச் அட்டாக் செய்த ஈபிஎஸ்

Posted by - August 9, 2025 0
இன்று வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இபிஎஸ் வாய்த்திறக்காதது ஏன் என்று துரைமுருகன் கேள்வி கேட்கிறார். 86 வயதில் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார் என்று ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.…

தமிழக சட்டப்பேரவை கூடியது: கரூர் கூட்ட நெரிசலில் பலியானோருக்கு அஞ்சலி

Posted by - October 14, 2025 0
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்.14) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கரூர் துயரம் தொடர்பாக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின்…
Gemini Generated Image ijuv8gijuv8gijuv e1775712729499

திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்

Posted by - April 21, 2026 0
திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது அதிர்ச்சி அளிக்கிறது பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரவித்துள்ளார். அவர் விடுத்துள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *