தகாத வார்த்தையால் திட்டிய ரசிகர்கள் : காதில் கேட்டு அழுத சேரன்; ஸ்லோவா ஹிட் கொடுத்த படம்!

243 0

தான் இயக்கிய படத்தை பார்க்க சென்ற சேரன், ரசிகர்கள் விமர்சனம் கொடுத்ததை கேட்டு கதறி அழுத சம்பவம் பற்றி பேசி உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சேரன். இயக்குனராக நிலையான இடத்தை பிடித்த பின்னர் நடிகராகவும் மாறினார்.  இவர் இயக்கிய படங்களில் பொற்காலம், வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

சேரன் தன்னுடைய 2ஆவது படமாக ‘பொற்காலம்’ படத்தை இயக்கினார். இந்தப் படத்தை காஜா முஹைதீன் தயாரித்தார். இதில் முரளி, மீனா, சங்கவி, மணிவண்ணன், வடிவேலு, டெல்லி கணேஷ், சிஆர் சரஸ்வதி என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் தான் இந்தப் படம் வெளியான போது படம் பார்க்க சென்ற அனுபவம் குறித்து காஜா முஹைதீன் கூறியிருக்கிறார்.

பொற்காலம் படம் வெளியான போது சேரன் மற்றும் காஜா முஹைதீன் இருவரும் இணைந்து படம் பார்க்க சென்றுள்ளனர்.  முதல் நாளில் மட்டும் 10 ஷோக்கள் முடிந்து 11ஆவது ஷோ போடப்பட்டிருக்கிறது. சேரன், மற்றும் காஜா முஹைதீன் இருவரும் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சிலர் தகாத வார்த்தைகளால் சேரனை வசைபாடியிருக்கின்றனர். இதை காதில் கேட்ட சேரன் திரையரங்கை விட்டு வெளியில் வந்து அழுதிருக்கிறார். பிறகு உள்ளே சென்ற சேரன், தயாரிப்பாளருடன் முழு படத்தையும் பார்த்து முடித்திருக்கிறார். கடைசியாக இருவரும் வீட்டிற்கு செல்ல வெளியில் நின்றிருந்த  ஒருவர் தனது நண்பரை பார்த்து என்னை ஏன் இப்படி ஒரு படத்திற்கு அழைத்து வந்த என்று கேட்டிருக்கிறார்.

Cheran: தகாத வார்த்தையால் திட்டிய ரசிகர்கள் : காதில் கேட்டு அழுத சேரன்; ஸ்லோவா ஹிட் கொடுத்த படம்!

பின்னர் இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். இப்படித்திற்கு இப்படி விமர்சனங்கள் வருவதை தொடர்ந்து முஹைதீன் வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளார். தன்னை சந்திக்க வந்தவர்களை கூட தவிர்த்துள்ளார். இதே போல் தான் சேரனும் தன்னுடைய வீட்டுக்கு யார் போன் செய்தாலும் அதை எடுக்காமல் தவிர்த்தாராம். 2 நாட்கள் கழித்து முஹைதீன் அலுவலக உதவியாளர் தங்களை பார்ப்பதற்காக விநியோகஸ்தர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் அலுவலகத்தில் வெயிட் பண்ணுறாங்க என்று கூறியிருக்கிறார்.

படம் தோல்வி அடைந்த நிலையில் விநியோகஸ்தர்கள் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முஹைதீனிடம் பணம் கேட்க வந்திருப்பதாக எண்ணிக்கொண்ட முஹைதீன் எல்லா பணத்தையும் கொடுத்து விடுகிறேன் என்று உதவியாளரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து அவர் அலுவலகத்திற்கு சென்று பார்த்திருக்கிறார். அப்போது தான் அவருக்கு விஷயமே புரிந்திருக்கிறது. அதாவது, தங்களுடைய படம் ஹிட் கொடுத்தைத் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் மாலையுடன் பாராட்டு தெரிவிக்க வந்திருக்கின்றனர். இதற்காகவா 2 நாட்கள் இப்படி செய்தோம் என்று மனதிற்குல் எண்ணிக் வருத்தப்பட்டாராம்.

Related Post

7 நாட்களில் மாமன்னன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை

Posted by - July 6, 2023 0
உதயநிதியின் கடைசி திரைப்படமாக உருவாகி கடந்த வாரம் வெளிவந்தது மாமன்னன். மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில், வடிவேலு, லால் உள்ளிட்ட பல…

கே.எஸ்.ரவிக்குமாருக்கு செட் ஆகாத ஒரே ஹீரோ விஜய்தான்.. தளபதியே சொன்ன வார்த்தை இதுதான்!

Posted by - May 20, 2025 0
கே.எஸ்.ரவிக்குமாருக்கு செட் ஆகாத ஒரே ஹீரோ நான்தான் என நடிகர் விஜய் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வரும் நடிகர் விஜய்.…

மங்காத்தா 2 தான் இந்த துணிவு.. அடுத்த ப்ளாக் பஸ்டர் ஹிட் தயார்

Posted by - December 29, 2022 0
மங்காத்தா நடிகர் அஜித்தின் திரையுலக பயணத்தில் மாபெரும் வெற்றியை தேடி தந்த திரைப்படம் மங்காத்தா. இது அஜித்தின் 50வது படம் என்பதினால் ரசிகர்கள் ரசிகர்கள் மிகப்பெறிய அளவில் இப்படத்தை கொண்டாடினார்கள்.…

சிம்பு திடீரென விளம்பரங்கள் மற்றும் படங்களில் கமிட் ஆக காரணம்.

Posted by - March 19, 2025 0
சிம்பு தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதல் நடிக்க தொடங்கியவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக…

விஜய்யால் தவறான பாதைக்கு செல்லும் ரசிகர்கள்.. கண்டித்தவர்களை எதிர்த்து பேசி பதிவு

Posted by - June 27, 2023 0
விஜய் விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருவதை நாம் அறிவோம். இப்படத்தில் இடம்பெறும் நான் ரெடி தான் வரவா பாடல் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளிவந்தது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *