தன்னைத் தானே 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை – நூதன போராட்டம்!

238 0

“எங்களை நாங்களே வருத்திக்கொண்டு போராட இருக்கின்றோம். எனக்கு நானே சாட்டையடித்து கொள்ளும் போராட்டம் நடத்த போகின்றேன். என் இல்லத்திற்கு வெளியில் நின்று சாட்டையடித்து கொள்ள போகின்றேன்.”

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார்.

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர். வெளியாவது, முதலில் இரு நபர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிவித்து பிறகு ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்றது, சம்பவத்தின் போது ஞானசேகரன் செல்போனில் யாரிடமோ, ‘சார்’ என பேசியதாக முதலில் தகவல் வெளியானது, பிறகு அவர் போனை ஃப்ளைட் மோடில் வைத்துவிட்டு போலியாக பேசினார் என்று தகவல் வெளியானது என பல்வேறு சர்ச்சைகள் சூழ்ந்துள்ளது.மேலும், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் திமுக நிர்வாகி என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததும், அவர் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் கொடுத்திருப்பதும் பெரும் கவனம் பெற்றுள்ளது.இந்நிலையில், நேற்று கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அதில் அவர், “எங்களை நாங்களே வருத்திக்கொண்டு போராட இருக்கின்றோம். எனக்கு நானே சாட்டையடித்து கொள்ளும் போராட்டம் நடத்த போகின்றேன். என் இல்லத்திற்கு வெளியில் நின்று சாட்டையடித்து கொள்ள போகின்றேன். தொண்டர்களும் இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்கள், வீட்டு வாசலில் நின்றால் போதும். மக்கள் கவனத்தை ஈர்க்க வேறு வழியில்லை. நடுத்தர மக்கள் வெளியில் வர வேண்டும். மீடியாவில் இதை விவாதிக்க வேண்டும். இதைப் பேச வேண்டும்” என்று தெரிவித்தார்.இதற்கிடையே, சொன்னது போலவே, கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு அண்ணாமலை, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். 6 முறை எனக் கூறிய நிலையில், மொத்தம் 8 முறை தன்னைத் தானே சாட்டையால் அடித்து உடலை வருத்திக் கொண்டார்.9ம் முறை அடிக்க முயன்றபோது அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரைத் தடுத்த நிறுத்தினர். முன்னதாக, வெற்றிவேல் வீரவேல் என சுற்றி இருந்த ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.

Related Post

ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா..? திமுகாவின் சர்ச்சை பேச்சாளரை வச்சு செய்த ராதிகா..!!

Posted by - May 15, 2024 0
நடிகர் சரத்குமார் குறித்து ஒருமையில் பேசிய திமுகாவின் சர்ச்சை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு நடிகை ராதிகா சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பல மேடைகளில் பல சர்ச்சை…

மின் கட்டண மென்பொருள் மாற்றம்!

Posted by - May 14, 2024 0
தமிழ்நாடு மின்சார வாரியம் அதிக உயரம் கொண்ட மின் வயர்கள் மூலமாகவும், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட புதைவடங்கள் மூலமாகவும், நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்து வருகிறது.இதில் அதிக…

பணிநேரம் முடியும்வரை ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு

Posted by - March 29, 2023 0
விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள்…

சென்னையை நெருங்கும் மிச்சாங் புயல்: வெளுத்து வாங்கும் மழை- பரங்கிமலை மெட்ரோ மூடல்

Posted by - December 4, 2023 0
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் மிச்சாங் புயலாக உருவானது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை…

வாழை இலை.. வெயிட் லாஸ் முதல் சரும ஆரோக்கியம் வரை உதவும் அதிசய சாறு.. தலைமுடி வளர்ச்சிக்கு வாழை இலை

Posted by - November 21, 2023 0
சென்னை: வாழையிலையில் உள்ள நன்மைகள் ஏராளம்.. இந்த வாழையிலையை அரைத்து பயன்படுத்துவதால், ஏற்படும் நன்மைகள் அதைவிட ஏராளம்.. அவை என்னென்ன தெரியுமா? வாழையிலையில் உள்ள சத்துக்களை லிஸ்ட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *