போலீஸ் உடையில் இன்ஸ்டாகிராமில் காதல் வலை வீசி என்ஜினீயரிங் மாணவியுடன் உல்லாசம்- வீடியோ எடுத்து மிரட்டிய நாடக நடிகர்

217 0

திருப்பதி:

கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 19 வயது மாணவி படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் யமனூரா (வயது 22) என்பவர் போலீஸ் உடையில் கம்பீரமான போட்டோவுடன் அறிமுகமானார். அவருடன் மாணவி இன்ஸ்டாகிராமில் பேசத் தொடங்கினார். அப்போது வாலிபர்தான் வாமஞ்சூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதாக தெரிவித்தார். நாளடைவில் இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர். அடிக்கடி வாலிபர் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி மாணவிக்கு ஆசை வார்த்தை கூறிக் கொண்டே இருந்தார்.

அவரது காதல் வலையில் விழுந்த மாணவி வாலிபரை காதலிக்க தொடங்கினார். இருவரும் கத்ரி கோவில் மங்களூருவில் உள்ள தன்னி பாவி கடற்கரைகளில் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து விதவிதமாக போட்டோ எடுத்தனர். அந்த போட்டோக்களை தனது செல்போனில் வைத்துக் கொண்ட வாலிபர் மாணவியிடம் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லாவிட்டால் இந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்ட தொடங்கினார்இதனை கேட்டதும் மனைவி அதிர்ந்து போனார். பயந்து போன மாணவி வாலிபருடன் செல்லத் தொடங்கினார். பெங்களூர் அருகில் உள்ள நெலமங்களாவில் உள்ள ஒரு லாட்ஜிக்கு மாணவியை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார்.

மேலும் மங்களூருக்கு அருகிலுள்ள கிளி கோழியில் உள்ள ஒரு லாட்ஜுக்கும் மாணவியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ, படம் எடுத்தார்.நாளுக்கு நாள் வாலிபர் மாணவியிடம் அத்துமீறி கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் தனக்கு ரூ.1.50 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் உனது நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார். மாணவி பணம் தர மறுத்ததால் மாணவியின் நிர்வாண படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இது குறித்து அங்குள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.அப்போதுதான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மாணவியை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்த வாலிபர் உண்மையான போலீஸ்காரர் இல்லை என்பது தெரியவந்தது. அவர் ஒரு நாடக நடிகர். நாடகங்களில் போலீஸ் வேடம் ஏற்று நடித்துள்ளார் .அதனை புகைப்படமாக எடுத்து வைத்துக்கொண்டு மாணவியிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை பதிவிட்டு ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் வாலிபர் தான் போலீஸ்காரர் எனக்கூறி அந்த பகுதியைச் சேர்ந்த சிலரிடம் வேலை வாங்கி தருவதாகவும் மோசடி செய்து தெரிய வந்தது. போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து வாலிபர் யமனூராவை கைது செய்தனர். சமூக வலைதளங்களில் நட்பு வைத்துக் கொண்டு, காதல் என்ற பெயரில் பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பெண்கள் மற்றும் பெற்றோர்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Post

முதலிரவில் குழந்தை பெற்ற மணப்பெண்- கனவுகளோடு காத்திருந்த கணவன் அதிர்ச்சி

Posted by - June 30, 2023 0
ஆயிரம் பொய் சொல்லி யாவது திருமணத்தை நடத்த வேண்டும். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா என்ற பழமொழி உள்ளது. இந்த பழமொழிகளை நிரூபிக்கும் வகையில் இளம்…

சிறுவனை கொன்ற கல்நெஞ்ச தாயுடன் பயணம்: திக்… திக்… அனுபவங்களை பகிர்ந்த கார் டிரைவர்

Posted by - January 13, 2024 0
பெங்களூரு: பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெசிடன்சி ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுசனா சேத்(வயது 39). இவரது கணவர் வெங்கட்ராமன். கருத்து வேறுபாடு காரணமாக…

தனி நபர்களுக்கு கடன் வழங்க ரிசர்வ் வங்கி விதிக்கும் புதிய கட்டுப்பாடுகள்

Posted by - November 17, 2023 0
புதுடெல்லி: சமீபகாலமாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் தனி நபர்களுக்கு (பர்சனல் லோன்) கடன் வழங்குவதில் பல்வேறு நிபந்தனைகள் தளர்வு ஏற்பட்டன. இதன்…

விஸ்வரூபம் எடுத்த கோமியப் பிரச்னை – மன்னிப்பு கோரிய திமுக எம்.பி.! என்ன நடந்தது?

Posted by - December 6, 2023 0
அந்த சொல்லை உள்நோக்கத்துடன் பயன்படுத்தவில்லை, தவறான பொருள் தருவதால், வெளிப்படையாக மன்னிப்புக் கேட்பதாக கூறிய திமுக எம்.பி. 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்…

5ஜி சேவையால் டேட்டா வேகமா காலியாகுதா? ஏர்டெல் வழங்கும் சூப்பர் டேட்டா வவுச்சர் பிளான்

Posted by - December 20, 2022 0
AIRTEL: எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் சப்ஸ்கிரிப்ஷன் 28 நாட்களுக்கு மட்டுமே என்பதையும், மேலும் இந்த 28 நாட்களுக்கு யூஸர்கள் ஏதாவது ஒரு பிளாட்ஃபார்மை மட்டுமே தேர்வு செய்ய முடியும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *