மனைவியை அடித்துக்கொன்று பிரீசரில் அடைத்த கணவர்? பரபரப்பு புகார்- போலீசார் விசாரணை

346 0

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி (வயது40). சுமித்ரி கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 30-ந்தேதி சுமித்ரி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு பாரத் மிஸ்ரா போன் செய்து கூறியுள்ளார்.Suggestions for making the Police Investigation more effective and  efficient with minimal scope of any lapse – Radhey Krishna Legal Aid  Foundation

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுமித்ரியின் குடும்பத்தினர் அவரது வீட்டுக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் பாரத் மிஸ்ரா தனது மனைவியின் உடலை பிரீசரில் வைத்து விட்டாராம். இது சுமித்ரியின் குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவரது சகோதரர் அபய் திவாரி கோட்வாலி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில் தனது மைத்துனருக்கும், எனது சகோதரிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் தான் எனது சகோதரி மர்மமான முறையில் இறந்துள்ளார். உடனடியாக அவர் எனது குடும்பத்தினருக்கோ, உறவினர்களுக்கோ தகவல் தெரிவிக்காமல் தாமதமாக கூறியுள்ளார். அவர் எனது சகோதரியை அடித்து கொலை செய்திருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் பாரத் மிஸ்ராவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சுமித்ரி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், அவரது இறுதி சடங்குக்காக தங்கள் மகன் மும்பையில் இருந்து திரும்ப வேண்டி இருந்ததால் மனைவியின் உடலை பிரீசரில் வைத்து இருந்ததாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து சுமித்ரியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். டெல்லியில் இளம்பெண் ஸ்ரத்தா உடலை அவரது காதலன் துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் அடைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதன் பிறகு சில நகரங்களில் இதே பாணியில் நடைபெற்ற கொலைகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில் அதே போல இந்த சம்பவத்திலும் சுமித்ரியை அவரது கணவர் கொன்று பிரீசலில் அடைத்து வைத்ததாக புகார் கூறப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

கேரள குண்டுவெடிப்பு: போலீசில் சரணடைவதற்கு முன்பு பேஸ்புக் லைவில் பேசிய மார்டின்- வைரலாகும் பரபரப்பு வீடியோ

Posted by - October 30, 2023 0
கேரளாவின் களமசேரியில் ஜெஹோவா’ஸ் விட்னெசஸ் சபையின் மத வழிபாட்டு கூட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில்…

நாடு முழுவதும் நடந்த 2 மாத கால ஆய்வில் ரூ.15 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு

Posted by - July 6, 2023 0
புதுடெல்லி: வர்த்தக நிறுவனங்கள், ஜி.எஸ்.டி. சட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்வது கட்டாயம். அப்படி பதிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. அடையாள எண் அளிக்கப்படும். ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல்…

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் காலமானார்..

Posted by - August 15, 2025 0
நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல. கணேசன் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் – காரணம் என்ன?

Posted by - March 11, 2025 0
அமெரிக்க அதிபர் ட்டம்பின் முடிவுகளால் இந்திய பங்குச்சந்தையும் இன்று கடும் சரிவை சந்தித்துள்ளன. இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்திருப்பதற்கான காரணம் என்ன? என்பது குறித்து கீழே…

மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்

Posted by - May 31, 2025 0
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் தமிழ்நாடு அரசு முகக்கவச கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்திய ஒரு சொல் கொரோனா.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *