மெட்ரோவுக்கு மத்திய அரசு கொடுத்த ரூ.21,000 கோடியில் ரூ.15,120 கோடி என்ன ஆனது?- ஹெச்.ராஜா

159 0

மெட்ரோவுக்கு மத்திய அரசு கொடுத்த ரூ.21,000 கோடியில் ரூ.15,120 கோடி என்ன ஆனது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார் .கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மழை வெள்ள சேதத்திற்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை என அரசியல் நாடகத்தை அரங்கேற்றினார் முதல்வர் ஸ்டாலின்! ஆனால், சென்னைக்கு ரூ.5000 கோடி சிறப்பு நிதியாக வழங்கப்பட்டது.

வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடனேயே தமிழகத்துக்கு ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி வழங்கப்பட்ட நிதிகளை தமிழக அரசு என்ன செய்தது?” என்று கடந்த ஏப்ரலில் நிதி அமைச்சர் கேட்ட பதில் கேள்விக்கு தற்போது வரை பதில் இல்லை!

அதே போல் ‘சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல், பிற மாநில மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது’ என்று திமுக அரசினால் மீண்டும் அரங்கேற்றப்பட்ட சென்னை மெட்ரோ நாடகத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நிதி அமைச்சர்..

“மாநில அரசால் முன்னெடுத்த இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு, மத்திய அரசு பல்வேறு வழிகளில் 21,000 கோடி ரூபாய் நிதியை திரட்டி தந்தது. அதில் வெறும் 5880 கோடி மட்டுமே உபயோகம் செய்யப்பட்டிருக்கிறது. மீதமிருக்கும் 15,120 கோடி என்ன ஆனது?” என்று மீண்டும் உண்மையை உடைத்து கேள்வி எழுப்பியிருக்கிறார் மாண்புமிகு நிதி அமைச்சர்.

இந்தக் கேள்விக்கும் நீங்கள் மௌனத்தை மட்டுமே மொழியாக முன்மொழிந்தால், நீங்கள் கூறுவதெல்லாம் பொய்யென்றே ஆகிறது என்கிறபட்சத்தில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுவிட்டு, மக்களை ஏமாற்றும் இத்தகைய மலிவு அரசியலை விட்டொழியுங்கள்! என ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

’’நான் நிலம் வாங்கியது உண்மைதான்.. விரைவில் இன்னொரு நிறுவனம்’’- அண்ணாமலை பரபர விளக்கம்!

Posted by - September 12, 2025 0
இந்த நிலத்தை நான், என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியுள்ளேன்.- அண்ணாமலை இயற்கை விவசாய நிலம் வாங்கியது உண்மை என்று…

“புலம்பெயர் பிகார் மக்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக இங்கே வாக்களிக்க முடியும்” – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Posted by - August 4, 2025 0
புலம்பெயர்ந்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக அங்கீகரிப்பது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த பிகார் மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டு வாக்காளர்களாக,…

இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா… விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு

Posted by - September 8, 2025 0
விஜய் தங்குவதற்கு திருச்சியில் உள்ள ஹோட்டல் அதிபர்கள் இடம் கொடுக்க மறுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. திருச்சி: அரசியல் சதுரங்கத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் காய் நகர்த்துகின்றனர். ஆனால் இதெற்கெல்லாம்…

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை – சீமான்

Posted by - February 7, 2024 0
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை – சீமான் நாம் தமிழர் கட்சிக்கு எதிரான மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்த அனைவருக்கும்…

தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை – சசிகலா பகிரங்க குற்றச்சாட்டு..!!

Posted by - November 25, 2024 0
தமிழ்நாட்டில் சமீப காலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளதாக சசிகலா கூறியுள்ளார். இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *