10 ரூபாய்க்கு ஸ்போர்ட்ஸ் ட்ரிங்ஸ்…

251 0

ஒரு காலத்தில் பெப்சி கோக் போன்ற கார்பரேட் ட்ரிங்ஸ்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பாக கோலி சோடா, மோர், ரஸ்னா போன்ற குளிர்பானங்கள் மட்டுமே தேசத்தில் இருந்து வந்தன, இந்த பெப்சி மற்றும் கோக் உள்நுழைந்து 7 ரூபாய்க்கு 7up, 7 ரூபாய்க்கு Sprite என விளம்பரப்படுத்தி தேசத்தின் குளிர்பான குடிசைத் தொழில்களை முற்றிலுமாக ஓய்த்துக் கட்டின.

பெரும்பாலான கோலி சோடா கம்பெனிகளும், குளிர்பானங்களை குடிசைத் தொழிலாக செய்து வந்த பல நிறுவனங்களும் இதனால் இழுத்து மூடப்பட்டன, தேசம் முழுக்க குளிர்பான மார்க்கெட்டில் பெப்சி மற்றும் கோக் ஆதிக்கம் செலுத்தின, அதற்கு பின்னர் இந்த பெப்சி, கோக்கிற்கு மாற்றாக இந்திய நிறுவனங்களும், ஒரு சில தனிநபர்களும் களம் இறங்கின.

பெப்சி கோக்கள் 500 மிலி 40 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருந்த போது, 10 ரூபாய்க்கு குளிர்பானங்களை இந்தியர்கள் களம் இறக்கினர்,  அதும் 7up, கோக், கொய்யா, மேங்கோ, பன்னீர், லெமன் என பல சுவைகளில் களம் இறக்கியதால் Pepsi, Coke நிறுவனங்கள் ஆட்டம் கண்டன, இந்திய நிறுவனங்களை காபி அடித்து பெப்சி குட்டி பாட்டில்களை போட்ட போதும் அது மார்க்கெட்டில் சரியாக போகவில்லை.

தற்போது பெப்சி, கோக்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்தியர்களின் பெட் பாட்டில்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன, இந்த மார்க்கெட்டை புரிந்து கொண்ட முகேஷ் அம்பானி ஸ்பின்னர் என்ற பெயரில் 10 ரூபாய் ஸ்போர்ட்ஸ் ட்ரிங்ஸ்சை அறிமுகப்படுத்த இருக்கிறார், ஏற்கனவே ரிலையன்ஸ்சின் கேம்பா குளிர்பானம் பெப்சி கோக்களை பல இடங்களில் புறந்தள்ளி இருக்கிறது.

” 10 ரூபாய் ஸ்பின்னர் மார்க்கெட்டிற்கு வரும் பட்சத்தில் பல அந்நிய ஸ்போர்ட்ஸ் குளிர்பான கார்பரேட் நிறுவனங்கள் தகர்க்கப்படலாம், இதற்காக முதற்கட்டமாக ஸ்பின்னர் மார்க்கெட்டிங்கை முகெஷ் அம்பானி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஐபிஎல் மூலம் விளம்பரப்படுத்தப்பட இருப்பதாக தகவல் “

 

 

Related Post

5 நிமிட ஜாலிக்காக இது தேவையா!! போலீஸார் செய்த தரமான செயல் – இணையத்தில் வைரலாகிய வீடியோ!

Posted by - August 28, 2023 0
இணைய மோகம் யாரை தான் விட்டு வைத்தது. உயர் தரத்திலான கேமராக்களை கொண்ட மொபைல் போன்கள் வந்த பிறகு அன்றாட வாழ்நாளில் செய்யும் அனைத்தையும் காட்சிப்படுத்தி இணையத்தில்…

மீனாட்சி அம்மன் கோவில் அருகில் ஷாரிக் தங்கி இருந்தாரா?- கர்நாடக தனிப்படை விசாரணை

Posted by - November 26, 2022 0
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக…

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் காலமானார்..

Posted by - August 15, 2025 0
நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல. கணேசன் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியாவில் 3 பேருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி!

Posted by - January 6, 2025 0
சீனாவில் HMPV வைரஸ் பரவி அச்சத்தை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது இந்தியாவில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.சீனாவில் புதியதாக HMPV என்ற…

840 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா ‘ஆர்டர்’: 17 ஆண்டுகளில் இதுவே முதல் தடவை

Posted by - February 17, 2023 0
புதுடெல்லி : மத்திய பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டாடா குழுமம் விலைக்கு வாங்கியது. இந்தநிலையில், ஏர் இந்தியாவை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *