படிக்கும் காலத்தில் இது தேவைதானா என எதிர்ப்பு- கல்லூரி காதல் ஜோடி திருமணம் செய்துவிட்டு தற்கொலை

257 0

திருப்பதி:

ஆந்திரா மாநிலம், அன்னமய்யா மாவட்டம், செட்டேவாரி பள்ளியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். லதிகம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது வாலிபர். இருவரும் புங்கனூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வந்தனர். கல்லூரியில் படிக்கும் போது இருவரும் நட்பாக பழகி வந்தனர்.தற்கொலை எண்ணத்துக்கான காரணம் என்ன? விடுபடுவது எப்படி? - BBC News தமிழ்

நட்பு காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் அவர்களது பெற்றோருக்கு தெரிய வந்தது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் காதல் தேவைதானா என இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருப்பதி அருகே உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். மகன், மகளை காணாததால் அவர்களது பெற்றோர்கள் புங்கனூர் போலீசில் புகார் செய்தனர்.

பெற்றோர்கள் போலீசில் புகார் செய்ததை அறிந்த காதல் ஜோடி எப்படியாவது தங்களை பிரித்து விடுவார்கள் என எண்ணி கவலை அடைந்தனர். இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி திருப்பதி பீளேரு சோதனை சாவடி அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றனர். அங்குள்ள மரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நேற்று மாலை வனப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் காதல் ஜோடி தூக்கில் தொங்குவதை கண்டனர். இது குறித்து பாக்ராபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் தொங்கியவர்களின் பிணங்களை மீட்டனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

மற்றவர்களை விட நீங்கள் குளிரை அதிகமா உணர்கிறீர்களா..? ‘இந்த’ வைட்டமின் குறைபாடு இருக்கலாம்!

Posted by - December 16, 2024 0
உங்களைச் சுற்றியுள்ளவர்களை விட நீங்கள் குளிரால் நடுங்கினால், உங்கள் உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததே காரணம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உங்கள் உடல் வெப்பநிலையை ஒழுங்குப்படுத்துவதில் முக்கிய பங்கு…

நித்தியானந்தவின் புதிய திட்டம்

Posted by - February 16, 2023 0
புதுடெல்லி: சாமியார் நித்யானந்தா சமூக வலைதளங்கள் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்களிடம் சொற்பொழிவாற்றி வருகிறார். இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்திருந்த அவர்…

மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்

Posted by - May 31, 2025 0
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் தமிழ்நாடு அரசு முகக்கவச கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்திய ஒரு சொல் கொரோனா.…

மணிப்பூரில் உயிரிழப்பு, தீவைப்பு, வழிபாட்டு தலங்கள் சேதம் எவ்வளவு?- முழுத் தகவல்

Posted by - September 15, 2023 0
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி ஒரு பிரிவினர் சார்பில் பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் மோதல் ஏற்பட்டு, பின்னர் அது இரு பிரிவினர் இடையே மிகப்பெரிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *