10 ரூபாய்க்கு ஸ்போர்ட்ஸ் ட்ரிங்ஸ்…

211 0

ஒரு காலத்தில் பெப்சி கோக் போன்ற கார்பரேட் ட்ரிங்ஸ்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பாக கோலி சோடா, மோர், ரஸ்னா போன்ற குளிர்பானங்கள் மட்டுமே தேசத்தில் இருந்து வந்தன, இந்த பெப்சி மற்றும் கோக் உள்நுழைந்து 7 ரூபாய்க்கு 7up, 7 ரூபாய்க்கு Sprite என விளம்பரப்படுத்தி தேசத்தின் குளிர்பான குடிசைத் தொழில்களை முற்றிலுமாக ஓய்த்துக் கட்டின.

பெரும்பாலான கோலி சோடா கம்பெனிகளும், குளிர்பானங்களை குடிசைத் தொழிலாக செய்து வந்த பல நிறுவனங்களும் இதனால் இழுத்து மூடப்பட்டன, தேசம் முழுக்க குளிர்பான மார்க்கெட்டில் பெப்சி மற்றும் கோக் ஆதிக்கம் செலுத்தின, அதற்கு பின்னர் இந்த பெப்சி, கோக்கிற்கு மாற்றாக இந்திய நிறுவனங்களும், ஒரு சில தனிநபர்களும் களம் இறங்கின.

பெப்சி கோக்கள் 500 மிலி 40 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருந்த போது, 10 ரூபாய்க்கு குளிர்பானங்களை இந்தியர்கள் களம் இறக்கினர்,  அதும் 7up, கோக், கொய்யா, மேங்கோ, பன்னீர், லெமன் என பல சுவைகளில் களம் இறக்கியதால் Pepsi, Coke நிறுவனங்கள் ஆட்டம் கண்டன, இந்திய நிறுவனங்களை காபி அடித்து பெப்சி குட்டி பாட்டில்களை போட்ட போதும் அது மார்க்கெட்டில் சரியாக போகவில்லை.

தற்போது பெப்சி, கோக்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்தியர்களின் பெட் பாட்டில்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன, இந்த மார்க்கெட்டை புரிந்து கொண்ட முகேஷ் அம்பானி ஸ்பின்னர் என்ற பெயரில் 10 ரூபாய் ஸ்போர்ட்ஸ் ட்ரிங்ஸ்சை அறிமுகப்படுத்த இருக்கிறார், ஏற்கனவே ரிலையன்ஸ்சின் கேம்பா குளிர்பானம் பெப்சி கோக்களை பல இடங்களில் புறந்தள்ளி இருக்கிறது.

” 10 ரூபாய் ஸ்பின்னர் மார்க்கெட்டிற்கு வரும் பட்சத்தில் பல அந்நிய ஸ்போர்ட்ஸ் குளிர்பான கார்பரேட் நிறுவனங்கள் தகர்க்கப்படலாம், இதற்காக முதற்கட்டமாக ஸ்பின்னர் மார்க்கெட்டிங்கை முகெஷ் அம்பானி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஐபிஎல் மூலம் விளம்பரப்படுத்தப்பட இருப்பதாக தகவல் “

 

 

Related Post

தமிழ் புத்தாண்டு – பிரதமர் மோடி வாழ்த்து!

Posted by - April 14, 2025 0
தமிழ் புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு…

30 மணி நேரம் தாமதமாக வந்த ஏர் இந்தியா விமானம்- 2 பேரின் திருமண நிச்சயதார்த்தம் ரத்தானது

Posted by - August 2, 2023 0
திருவனந்தபுரம்: துபாயில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு துபாயில் இருந்து திருவனந்தபுரத்துக்கு…

“யாரும் தாக்குதலை நிறுத்துமாறு கூறவில்லை, பாகிஸ்தானே கெஞ்சியது“ – ட்ரம்ப் பேச்சுக்கு மோடி பதிலடி

Posted by - July 30, 2025 0
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் விளக்கமளித்த பிரதமர் மோடி, ட்ரம்ப் கூறிவரும் கூற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசினார். அது குறித்து அவர் என்ன கூறினார் என்பதை…

திரும்பும் திசையெல்லாம் அழுகுரல் – வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நிதியுதவி..!!

Posted by - August 2, 2024 0
கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் நிவாரண பணிக்காக பிரபல…

சீனா, அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. அவசர ஆலோசனையில் இந்தியா?

Posted by - December 21, 2022 0
Coronavirus | இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. அனைத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *