10 ரூபாய்க்கு ஸ்போர்ட்ஸ் ட்ரிங்ஸ்…

227 0

ஒரு காலத்தில் பெப்சி கோக் போன்ற கார்பரேட் ட்ரிங்ஸ்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பாக கோலி சோடா, மோர், ரஸ்னா போன்ற குளிர்பானங்கள் மட்டுமே தேசத்தில் இருந்து வந்தன, இந்த பெப்சி மற்றும் கோக் உள்நுழைந்து 7 ரூபாய்க்கு 7up, 7 ரூபாய்க்கு Sprite என விளம்பரப்படுத்தி தேசத்தின் குளிர்பான குடிசைத் தொழில்களை முற்றிலுமாக ஓய்த்துக் கட்டின.

பெரும்பாலான கோலி சோடா கம்பெனிகளும், குளிர்பானங்களை குடிசைத் தொழிலாக செய்து வந்த பல நிறுவனங்களும் இதனால் இழுத்து மூடப்பட்டன, தேசம் முழுக்க குளிர்பான மார்க்கெட்டில் பெப்சி மற்றும் கோக் ஆதிக்கம் செலுத்தின, அதற்கு பின்னர் இந்த பெப்சி, கோக்கிற்கு மாற்றாக இந்திய நிறுவனங்களும், ஒரு சில தனிநபர்களும் களம் இறங்கின.

பெப்சி கோக்கள் 500 மிலி 40 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருந்த போது, 10 ரூபாய்க்கு குளிர்பானங்களை இந்தியர்கள் களம் இறக்கினர்,  அதும் 7up, கோக், கொய்யா, மேங்கோ, பன்னீர், லெமன் என பல சுவைகளில் களம் இறக்கியதால் Pepsi, Coke நிறுவனங்கள் ஆட்டம் கண்டன, இந்திய நிறுவனங்களை காபி அடித்து பெப்சி குட்டி பாட்டில்களை போட்ட போதும் அது மார்க்கெட்டில் சரியாக போகவில்லை.

தற்போது பெப்சி, கோக்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்தியர்களின் பெட் பாட்டில்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன, இந்த மார்க்கெட்டை புரிந்து கொண்ட முகேஷ் அம்பானி ஸ்பின்னர் என்ற பெயரில் 10 ரூபாய் ஸ்போர்ட்ஸ் ட்ரிங்ஸ்சை அறிமுகப்படுத்த இருக்கிறார், ஏற்கனவே ரிலையன்ஸ்சின் கேம்பா குளிர்பானம் பெப்சி கோக்களை பல இடங்களில் புறந்தள்ளி இருக்கிறது.

” 10 ரூபாய் ஸ்பின்னர் மார்க்கெட்டிற்கு வரும் பட்சத்தில் பல அந்நிய ஸ்போர்ட்ஸ் குளிர்பான கார்பரேட் நிறுவனங்கள் தகர்க்கப்படலாம், இதற்காக முதற்கட்டமாக ஸ்பின்னர் மார்க்கெட்டிங்கை முகெஷ் அம்பானி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஐபிஎல் மூலம் விளம்பரப்படுத்தப்பட இருப்பதாக தகவல் “

 

 

Related Post

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைப்பது எப்படி? இது நல்ல ஐடியாவா இருக்கே..!

Posted by - December 13, 2024 0
புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என விரும்புபவர்கள் தற்போது மக்களுக்கு எதற்கான தேவை அதிகரித்திருக்கிறது என்பதை பொறுத்து தொழிலை அமைத்தால் எளிதாக அதில் வெற்றி பெற முடியும்.…

இன்றைய பங்குச் சந்தையில் இந்த 5 பங்குகளை வாங்கலாம்.. கிரீன் சிக்னல் கொடுத்த சந்தை நிபுணர்!

Posted by - August 5, 2024 0
அமெரிக்க நாட்டின் பொருளாதார மந்தநிலையால், உலக அளவில் பங்குச் சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது. வெள்ளிக்கிழமை…

இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

Posted by - December 20, 2023 0
மும்பை பங்குச்சந்தை கடந்த சில தினங்களாக உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் சிறிது நேரத்தில் மளமளவென உயர்ந்து 71,913.07 புள்ளியில்…

கோவில் உண்டியலில் ரூ.100 கோடிக்கு காசோலை செலுத்திய பக்தர் – அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்

Posted by - August 25, 2023 0
அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராகலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. இந்நிலையில், கோவில்…
rfseff4b

தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

Posted by - April 17, 2026 0
தொகுதி மறுவரையால் தென்மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்பது அரசியல் காரணங்களுக்கான பொய்ப் பிரசாரம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *