ஆந்திராவில் ஆட்சியை பிடித்த சந்திரபாபு நாயுடுவுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து..!!

252 0

ஆந்திராவில் வரலாறு காணாத வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க இருக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடுவுக்கு நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் இன்று நாடு முழுவதும் வாக்கு என்னும் பணி வெற்றிகரமாக நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம் ,சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களும் நடைபெற்றன . ஆந்திராவை பொருத்தவரை ஆரம்பம் முதல் தெலுங்கு தேசம் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வந்தது .

ஆந்திராவில் மொத்தம் 175 சட்டப்பேரவை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.

அந்தவகையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி 120 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது பாஜக 6 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த தேர்தலை விட 100 இடங்களுக்கு மேல் இந்த முறை இழந்துள்ள நிலையில் .இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது.

இதையடுத்து ஜூன் 9 தேதி சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்வராக மீண்டும் அரியணையில் அமர உள்ளார்.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள சந்திரபாபு நாயுடு அவர்களுக்கும், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

உங்கள் தொலைநோக்கு தலைமையின்கீழ் ஆந்திர மக்கள் பெரும் முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறேன் என விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Post

’’நான் நிலம் வாங்கியது உண்மைதான்.. விரைவில் இன்னொரு நிறுவனம்’’- அண்ணாமலை பரபர விளக்கம்!

Posted by - September 12, 2025 0
இந்த நிலத்தை நான், என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியுள்ளேன்.- அண்ணாமலை இயற்கை விவசாய நிலம் வாங்கியது உண்மை என்று…

’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!

Posted by - August 19, 2025 0
‘காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள என்று பல்வேறு விமர்சனங்கள் எடப்பாடி பழனிசாமி பயணம் குறித்து எழுந்தாலும் அவரின் இந்த சுற்றுப்பயணம் அதிமுகவிற்கு புதிய தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது’‘மக்களை காப்போம்,…

கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?

Posted by - December 8, 2025 0
பணி நியமனங்களில் முறைகேடு விவகாரத்தில் 1,020 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்துள்ள அமலாத்துறை அமைச்சர் கே என் நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோரி…

செம அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! ஏன்?

Posted by - February 17, 2026 0
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வரும் மாணிக்கம் தாகூரால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொரு…

அதிகரித்த டிமாண்ட்.. எங்களுக்கு இத்தனை சீட்டு வேணும்.. திமுக-விடம் திருமா கேட்பது இதுதான்!

Posted by - July 17, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை வைக்க திருமாவளவன் முடிவு செய்துள்ளார். தமிழ்நாட்டு அரசியல் களம் நாளுக்கு நாள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *