தலித் மக்களின் குரலாக திகழ்ந்தவர், ஒட்டுமொத்த சென்னையே பேசும் அளவுக்கு வளர்ந்துள்ள ஆம்ஸ்ட்ராங் யார்?
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகனான ஆம்ஸ்ட்ராங், பள்ளிக் காலம் முதலே அரசியலில் ஆர்வமுடையவராக இருந்துள்ளார்.
விளிம்பு நிலை மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் லட்சியத்துடன் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து, கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
அம்பேத்கர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங், 2006-ல் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் என்ற அமைப்பை உருவாக்கினார். அதே ஆண்டு சென்னை மாநகராட்சியின் 99 ஆவது வார்டில் போட்டியிட்டு மாமன்ற உறுப்பினராக தேர்வாகியிருந்தார்2007-ல் அப்போதைய உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 2011 ஆம் ஆண்டில் அம்பத்தூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக தொடர்ந்து 17ஆண்டுகள் இருந்த இவர், தூய்மை பணியாளர்களுக்கான போராட்டம், நீட் எதிர்ப்பு, தலித் மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள் பலவற்றை முன்னெடுத்துள்ளார்.இதுமட்டுமில்லாமல் சென்னை பெரம்பூரில் தான் வசித்து வந்த வீட்டிற்கு அருகில் பௌத்த விகாரம் ஒன்றைக் கட்டியவர் ஆம்ஸ்ட்ராங். இவர் தற்போது வெட்டி படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.