யாருடன் கூட்டணி.? பிரேமலதா போடும் அரசியல் கணக்கு

58 0

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், யாருடன் கூட்டணி என எந்த முடிவும் அறிவிக்காமல் தேமுதிக இழுத்தடித்து வருகிறது, எனவே இ ன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெருங்கும் தேர்தல்- தொடரும் கூட்டணி பேச்சுவார்த்தை

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. அதிலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையானது நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆளாக அதிமுக கூட்டணியை உறுதிசெய்துள்ளது. கடந்த ஆண்டே பாஜகவை தங்கள் அணியில் இணைத்த அதிமுக, அடுத்ததாக பாமக, அமமுக, ஐஜேகே, தமாகா உள்ளிட்ட கட்சிகளை சேர்த்துள்ளது.

அடுத்தாக தேமுதிக எந்த பக்கம் செல்லும் என தெரியாமல் அரசியல் களம் குழம்பியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அதிக தொகுதிகளை கேட்டதால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக கழட்டி விடப்பட்டது. இதனையடுத்து 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக கை கொடுத்தது தேமுதிக மட்டுமே, எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜ்யசபா சீட் கொடுக்காத அதிருப்தி காரணமாக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

எந்த கூட்டணியில் தேமுதிக

அதே நேரம் தேமுதிகவை சமாதானம் செய்யும் வகையில் மார்ச் மாதம் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலின் போது சீட் ஒதுக்கப்படும் என அதிமுக அறிவித்தது. ஆனால் இதனை தேமுதிக தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் தேமுதிக இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் 15 தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்க வேண்டும், ஒரு மாநிலங்களவை தொகுதி வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

ஆனால் அதிமுக தரப்போ அதிகபட்சமாக 6 முதல் 7 தொகுதியும் ஒரு மாநிலங்களவை பதவி மட்டும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதேபோல திமுக தரப்பில் அதிகபட்சம் 6 தொகுதி மட்டுமே என உறுதியாக தெரிவித்து விட்டது. ஆனால் 15 தொகுதிக்கும் குறைவாக கொடுத்தால் கூட்டணிக்கு வரமாட்டோம் என தெரிவித்து விட்டது. மேலும் நீங்கள் ஆட்சி அமைக்கவும், முதலமைச்சராக ஆகவும் நாங்கள் உதவி செய்கிறோம். எனவே எங்களை மதித்து, மரியாதையாக நடத்த வேண்டும் வெளிப்படையாகவே பிரேமலதா தெரிவித்திருந்தார்.

தேமுதிக இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இந்த நிலையில் இன்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்ந கூட்டத்தில் யாருடன் கூட்டணி என பிரேமலதா முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் திமுக- அதிமுக என இரு தரப்பிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனவும், அந்த வகையில் இன்றைய கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவெடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

“செந்தில் பாலாஜியின் பதற்றம் சந்தேகத்தை எழுப்புகிறது” – அண்ணாமலை

Posted by - October 2, 2025 0
சென்னை: நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், செந்தில் பாலாஜி இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறத என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

பாஜக கொடுத்த பொறுப்பை தூக்கி எறிந்த அண்ணாமலை.!

Posted by - February 3, 2026 0
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தமிழக பாஜக சார்பாக தொகுதி பொறுப்பாளர்கள் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட நிலையில், அதனை அவர் நிராகரித்துள்ளார். இது…

எதிர்க்கட்சிகளுக்கு செங்கோட்டையன் வார்னிங்!

Posted by - February 9, 2026 0
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தலைவர் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.…

‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!

Posted by - February 9, 2026 0
’கே.என்.நேரு தலைமையில் ஏ.வே.வேலு உள்ளிட்டோரை உள்ளடக்கிய தொகுதி பங்கீட்டு குழுவை திமுக அமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது’ சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தன்னுடைய  பிரச்சாரத்தை தீவிரமாக…

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

Posted by - August 18, 2025 0
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாதக பொதுக் கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. செஞ்சிக்கோட்டையை மராட்டிய மன்னர்கள் ஆண்ட கோட்டை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *