தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகனை, நீதிமன்ற காவலில் அனுப்ப நீதிபதி மறுத்ததையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில், சாட்டை துரைமுருகனை, திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இதற்கு நாம் தமிழர் கட்சியினர் மட்டுமன்றி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தார்.தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாமிநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நீதிமன்ற காவலுக்கு செல்ல தேவையில்லை என கூறி, சாட்டை துரைமுருகனை விடுவித்தார். இதையடுத்து, தன் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடுவேன் என சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.