முதல் நாளே ஹிட் அடித்த ஓலா எலக்ட்ரிக் ஐபிஓ….. பங்கு விலை 20% உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி….

198 0

நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது பங்குகளை இன்று பங்குச்சந்தையில் பட்டியலிட்டது. அந்த சமயத்தில், பங்கின் விலை பெரிய அளவில் உயரவில்லை. இதனால் முதலீட்டாளர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அதன் பிறகு ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்கு விலை கிடுகிடுவென உயர தொடங்கியது. கிட்டதட்ட பங்கின் விலை 20 சதவிகிதம் வரை உயர்ந்து அப்பர் சர்க்யூட் நிலையை அடைந்தது.

நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது பங்குகளை இன்று பங்குச்சந்தையில் பட்டியலிட்டது. அந்த சமயத்தில், பங்கின் விலை பெரிய அளவில் உயரவில்லை. இதனால் முதலீட்டாளர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் அதன் பிறகு ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்கு விலை கிடுகிடுவென உயர தொடங்கியது. கிட்டதட்ட பங்கின் விலை 20 சதவிகிதம் வரை உயர்ந்து அப்பர் சர்க்யூட் நிலையை அடைந்தது.

அதாவது ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்கு விலை என் எஸ் இ சந்தையில் ரூ.91.20 என்ற நிலையை அடைந்தது. அதாவது பங்கின் ஐபிஓ விலை ரூ.76 ஆக இருந்தது.

ஆகஸ்ட் 6ம் தேதியுடன் முடிவடைந்த ஓலா எலக்ட்ரிக் ஐபிஓவில் ரூ. 6,146 கோடி முதலீட்டுக்கான விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதாவது 4.26 முறை மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டது. அதாவது நிறுவனத்தின் எதிர்பார்ப்பை விட மிக குறைந்த அளவிலேயே விண்ணப்பங்கள் வந்திருந்தன. ஐபிஓவில் ஆங்கர் முதலீட்டாளர்களில் நோமுரா, ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவை முதலீடு செய்திருந்தன.

ஓலா நிறுவனம் தொடர்ந்து நஷ்டம் ஈட்டி வருவதால் அதன் எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது முதலீட்டாளர்களின் மிகப்பெரிய கவலையாக இருந்தது.

மேலும் தகுதி வாய்ந்த தனியார் நிறுவன முதலீடு பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைவான விலையே நிர்ணயிக்கப்பட்டது. அப்போது முதலீட்டாளர்கள் இதில் பெரிய அளவில் ஆர்வம் செலுத்தவில்லை. பெரும்பாலான முதலீட்டாளர்கள் இன்னும் குறைவான விலையில் பங்கை வாங்கலாம் என காத்திருந்தனர். மேலும் ரிஸ்க் எடுக்க தயாராக இருந்த முதலீட்டாளர்கள் மட்டுமே இதில் முதலீடு செய்திருந்தனர். இதில் லாபம் ஈட்ட குறைந்தபட்சம் 2,3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமென கருதுகின்றனர்.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தைக்கான நிறுவனத்தின் லட்சியமாக இருந்தாலும், முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் தற்போதைய நிதி செயல்திறன், தொடர் நஷ்டம், அதிக போட்டி ஆகியவை பெரும் சிக்கலாக இருப்பதால் முதலீட்டாளர்கள் பெரிய அளவில் முதலீடு செய்ய தயங்குகின்றனர்.

இந்த நிலையில் ஐபிஓவில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் ஒரளவு லாபம் கிடைத்ததும், இதிலிருந்து வெளியேறலாம் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் ஸ்டாப் லாஸ் ரூ.70க்கு குறைவாக வைத்து தங்களின் முதலீட்டை மேற்கொள்ளலாம் என ஸ்வஸ்திகா இன்வெஸ்ட்மார்ட்டின் வெல்த் தலைவர் ஷிவானி நியாதி பரிந்துரை செய்துள்ளார்.ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் 2024 நிதியாண்டில் ரூ. 5,009.8 கோடியாக அதிகரித்தது, 2023 நிதியாண்டில் ரூ. 2,630.9 கோடியாக இருந்தது. இந்த வளர்ச்சியானது Ola S1 மற்றும் Ola S1 ப்ரோ ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரிப்பு மற்றும் Ola S1 டெலிவரி தொடங்கப்பட்டது முக்கிய காரணங்கள் ஆகும். மேலும் இந்த ஆண்டில் Ola S1 X+ மாடல் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த உள்ளது.

Related Post

ஆகஸ்ட் 31 ஆம் தேதி மதுக்கடைக்கு விடுமுறை அறிவிப்பு – காரணம் என்ன?

Posted by - August 29, 2025 0
புதுச்சேரி மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால் மதுக்கடைகள், மதுபார்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மூட உத்தரவு புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில்…

வர்த்தகத்தை மூடும் அமேசான்.. இந்தியாவில் மட்டும் ஏன் இப்படி..?!

Posted by - November 29, 2022 0
உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடையும் முன்னணி பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா முதன்மையாக இருப்பது மட்டும் அல்லாமல் டிஜிட்டல் வர்த்தகச் சந்தையில் மாபெரும் வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு…

இந்தியாவில் 3 பேருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி!

Posted by - January 6, 2025 0
சீனாவில் HMPV வைரஸ் பரவி அச்சத்தை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது இந்தியாவில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.சீனாவில் புதியதாக HMPV என்ற…

எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. “ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு”

Posted by - June 5, 2025 0
ஏழைகள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கருணையுடன் கூடிய மத்திய அரசு, கடந்த பத்தாண்டுகளில், வறுமையின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி…

ராஜஸ்தானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு

Posted by - June 7, 2023 0
ராஜஸ்தா் மாநிலம், பிகானேர் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகியுள்ளது. பிகானேர் மேற்கே 685 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *