ஹிண்டன்பர்க் அறிக்கையால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி…. முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்….

248 0

இந்திய பங்குச்சந்தைகள் தற்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன. ஹிண்டன்பர்க், அதானி விவகாரத்தினால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது அதானி குழும நிறுவனங்களின் செபி தலைவர் முதலீடு இருப்பதாக அறிக்கை வெளியானதை அடுத்து சந்தை முதலீட்டாளர்கள் சற்று பதற்றம் அடைந்துள்ளனர்.

நிஃப்டி-50 மற்றும் எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் ஆகியவை கடந்த ஒரு வாரத்தில் ஏற்ற இறக்கத்தைக் கண்டன. இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் திங்கட்கிழமையான இன்று பெரும் சரிவை சந்திக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் பலரும் கணித்தனர். ஏனெனில் செபி தலைவர் மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் ஆகியோர் மீதான அமெரிக்க ஷார்ட் செல்லார் நிறுவனத்தின் புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளது.

முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் குறைந்த பட்சம் திங்கட்கிழமை வர்த்தகத்தின் ஆரம்ப கட்டங்களில் சில சரிவு இருக்கும். தொடர்ந்து சந்தையில் ஒருவிதமான ஏற்றம் இறக்கம் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

ஹிண்டன்பர்க் அறிக்கையின் தாக்கம் கட்டாயம் சந்தையில் இருக்கும் என சந்தை நிபுணர் அம்பரீஷ் பாலிகா தெரிவித்துள்ளார். இந்த வீழ்ச்சி எதுவரை செல்கிறது என முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும். அதாவது புதிய வீழ்ச்சிக்கு சந்தை செல்கிறதா எனப்தை கூடுதல் கவனத்துடன் கவனிக்க வேண்டும்.

பங்குச்சந்தை கட்டுப்பட்டு அமைப்பான செபியின் தலைவர் மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் ஆகியோருக்கு எதிராக ஹிண்டன்பேர்க்கின் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. சனிக்கிழமை இரவு ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதால், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று அதனுடைய தாக்கம் கட்டாயம் சந்தையில் இருக்கும். ஆனால் அடுத்த சில நாட்களில் இதன் வீரியம் குறையும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அதானி குழுமம் அதை மறுத்தாலும், அதற்கான விசாரணையை செபி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் செபியின் தலைவர் மீது தற்போது புகார் எழுந்துள்ளதால், இது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. பொருளாதார ரீதியில் மட்டும் இல்லாமல் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. செபியின் தலைவர் பதவி விலக வேண்டும், அவர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

இது குறித்து செபியின் தலைவர் மதாபி பூரி புச் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களுக்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆதாரம் அற்றவை என்றும், இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மிட் மற்றும் ஸ்மால் கேப்களில் பங்குகளுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய வர்த்தகம் சரிவில் தொடங்கியுள்ளன. மேலும் இந்த சரிவை முதலீட்டாளர்கள் பங்கைகளை வாங்குவதற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டுமென்றும் கூறப்படுகிறது.

Related Post

90 நாடுகளில் 8,330 இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்: மத்திய அரசு தகவல்

Posted by - July 29, 2023 0
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வெளிநாடு சிறைகளில் வாடும் இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் எழுத்துப்பூர்வமாக…

பஞ்சாபில் பட்டப்பகலில் வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.22½ லட்சம் கொள்ளை

Posted by - February 17, 2023 0
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ரானி கா பாக் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மண்டல கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நகரின் முக்கிய பகுதியில்…

பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,

Posted by - December 13, 2025 0
அன்று நீதிமன்றம் ஏறி அயோத்தி ராமர் கோயிலுக்காக நீதி கேட்டோம். இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மக்கள் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உள்ளது”…

பைக்கில் கடத்தப்பட்ட சிறுமியை காப்பாற்றிய திருநங்கை- போலீசார் பாராட்டு

Posted by - July 6, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், ஹயாத் நகரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் நேற்று காலை தனது வீட்டில் முன்பாக சாலையோரம் நின்று கொண்டு இருந்தார். அப்போது…

தொடர் இருமல் மற்றும் சளி உள்ளதா..? ஒருவேளை இந்த நோய் காரணமாக இருக்கலாம்

Posted by - December 3, 2024 0
பருவகால ஒவ்வாமை, மாசுபடுத்திகள் அனைத்தும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. நீங்கள் தொடர்ந்து இருமல் மற்றும் சளியை அனுபவிக்கிறீர்களா? இது எளிதாக குணமாகவில்லையா? இது மற்றொரு நுரையீரல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *