முதல் நாளே ஹிட் அடித்த பிரீமியர் எனர்ஜிஸ் ஐபிஓ…. ரூ.450 முதலீடு செய்திருந்தால் ரூ.990 கிடைத்திருக்கும்… ஒரே நாளில் 120% லாபம்..

166 0

பிரீமியர் எனர்ஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ பங்குகள்  பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. முதல் நாள் பங்கின் விலை 120 சதவிகிதம் பிரீமியம் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. அதாவது ரூ.450க்கு வாங்கிய பங்கின் விலை 990 ரூபாயாக அதிகரித்தது. அதுவே பிஎஸ்இ சந்தையில் ரூ.991 என்ற விலை பட்டியலிடப்பட்டுள்ளது.

அதுவே க்ரே மார்க்கெட்டில் இந்த பங்கின் விலை 100% பிரீமியத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன. இது அதிகாரப்பூர்வமான சந்தை கிடையாது.

பிரீமியர் எனர்ஜிஸின் ஐபிஓ முதலீட்டாளர்களிடமிருந்து வலுவான முதலீட்டை பெற்றுள்ளது. நிறுவனம் சாராத முதலீட்டாளர்களின் முதலீடு சந்தா விகிதம் 74 மடங்கு அதிகமாக இருந்தது.

இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதி ஹைதராபாத்தில் 4 ஜிகாவாட் சோலார் பிவி டாப்கான் செல் மற்றும் 4 ஜிகாவாட் சோலார் பிவி டாப்கான் மாட்யூல் உற்பத்தி வசதியை நிறுவுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் , துணை நிறுவனமான பிரிமியர் எனர்ஜிஸ் குளோபலில் முதலீடு செய்ய நிகர வருமானத்தைப் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள நிதி பொது நிறுவன நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

பிரீமியர் எனர்ஜிஸ் 2023-24ம் நிதியாண்டின் இறுதியில் இந்தியாவில் இரண்டாவது பெரிய ஒருங்கிணைந்த நிறுவனமாக இருந்தது. செல் உற்பத்திக்கான வருடாந்திர நிறுவப்பட்ட திறன் 2 GW மற்றும் தொகுதி உற்பத்தி 4.13 GW ஆகும். 2023-24ம் நிதியாண்டில் அமெரிக்காவிற்கு சூரிய மின்கலங்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய இந்திய நிறுவனமாகவும் இது உள்ளது.

நிறுவனம் ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஐந்து உற்பத்தி வசதிகளை வைத்துள்ளது. மேலும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் எட்டு துணை நிறுவனங்கள் மூலம் செயல்பாடுகளை நடத்துகிறது.

புதிய 4 GW TOPCon சோலார் செல் லைன் உட்பட, நிறுவனத்தின் கணிசமான முதலீடுகள், மற்றும் மூலதனத்தின் மீதான அதன் மேம்பட்ட வருமானம் 2022ம் நிதியாண்டில் 3.6% ஆக இருந்து. 2023-24ம் நிதியாண்டில் 25.6% ஆக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மிகவும் வலுவாக உள்ளது.இந்தியாவின் மாட்யூல் உற்பத்தி திறன் 2024 நிதியாண்டில் தோராயமாக 72 ஜிகாவாட்டை எட்டியது. தற்போதைய சூரிய மின்கல உற்பத்தி திறன் 8.1 ஜிகாவாட் ஆகும். இது எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனத்தின் செயல்பாடுகளின் வருவாய், 2020-21ம் நிதியண்டில் முதல் 2022-23 வரை 42.71% என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் இருந்துள்ளது. 2023-24ம் நிதியாண்டில் வருவாய் 120% அதிகரித்து ரூ.3,143 கோடியாக இருந்தது. 24ஆம் நிதியாண்டில் ரூ.231 கோடி லாபம் ஈட்டியது. ஆனால் அதற்கு முந்தைய ஆண்டு ரூ.13.3 கோடி நஷ்டம் அடைந்திருந்தது.

Related Post

மனைவி இறந்ததால் விரக்தியில் வாழ்ந்த 62 வயது தந்தைக்கு திருமணம் செய்துவைத்த மகள்

Posted by - October 24, 2023 0
திருவனந்தபுரம்: திருமண வாழ்க்கை என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்கக்கூடிய ஒன்று. தான் கரம் பிடிக்கும் வாழ்க்கை துணையுடன் இறுதிவரை ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.…

மாணவியை காதலிப்பதில் தகராறு: தேர்வு அறையில் 9-ம் வகுப்பு மாணவனை கத்தியால் வெட்டிய சக மாணவன்

Posted by - April 21, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், ராஜமகேந்திராவரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி சாய் பிரசாத்(வயது14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் உதயசங்கர்…

பைக்கில் கடத்தப்பட்ட சிறுமியை காப்பாற்றிய திருநங்கை- போலீசார் பாராட்டு

Posted by - July 6, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், ஹயாத் நகரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் நேற்று காலை தனது வீட்டில் முன்பாக சாலையோரம் நின்று கொண்டு இருந்தார். அப்போது…

கேபிள் டிவி முடிஞ்சது.. Jio ஆபர்.. 800 டிவி சேனல்.. குவியுது கூட்டம் ரூ.1000-க்கு.. 12 ஓடிடி.. வாய்ஸ் கால்கள்!

Posted by - December 4, 2024 0
#jio #jioairfiber #jiosetupbox #jiotv #jiocinema #ipl2025 ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்துக்கு ஆஃபர்களை கொடுக்க சொல்லித் தரவா வேண்டும் என்று நினைக்கும்படி ரூ.1000-க்கும் கம்மியான…

இருபிரிவினர் இடையே திடீர் மோதல் – அரியானாவில் 144 தடை உத்தரவு அமல்

Posted by - August 1, 2023 0
கவுகாத்தி: அரியானா மாநிலம் குர்கான் அருகே நூக் என்ற இடத்தில் நுல்ஹர் மகாதேவ் கோயில் உள்ளது. இங்கு இன்று நடந்த விழா முக்கிய நிகழ்ச்சியாக புனிதநீர் யாத்திரையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *