‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்திற்காக அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள முதல் பாடல் ‘மனசிலாயோ’ வெளியானது.
‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்திற்காக அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள முதல் பாடல் ‘மனசிலாயோ’ வெளியானது.
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த படத்தின் ‘மனசிலாயோ’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலின் சிறப்பம்சமாக மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் மீண்டும் கொண்டுவந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் மூலம், 27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் படத்தில் மலேசியா வாசுதேவனின் குரல் இடம்பெறுகிறது.
பாடலின் தொடக்கமே மலையாள வரிகளில் துள்ளல் மிக்க இசையுடன் உள்ளது. துள்ளல் மிக்க இசைக்கேற்ற வரிகளும் பாடல் முழுக்க இடம்பெற்றுள்ளன. கூடவே, ரஜினி, மஞ்சு வாரியர் அசத்தல் நடனமும். அனிருத் ரஜினியுடன் டான்ஸ் ஆடியுள்ளார்.