நெய் சுத்தமானதா..? கலப்படமானாதா..? எளிதில் கண்டறிய உதவும் டிப்ஸ் இதோ

225 0

நெய்யில் உள்ள வைட்டமின் ஏ நமது கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நெய் உதவுகிறது. நெய்யில் ஒமேகா 3 ஆசிட் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.#TirupatiLaddus #TirupatiControversy

நெய் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்று, சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. நெய்யில் உள்ள வைட்டமின் ஏ நமது கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நெய் உதவுகிறது. நெய்யில் ஒமேகா 3 ஆசிட் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. தற்போது பெரும்பாலானோர் கடைகளில் கிடைக்கும் நெய்யை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இந்த நெய் சுத்தமானதா அல்லது கலப்படம் செய்ததா? என்ற சந்தேகம் நாம் அனைவருக்கும் இருக்கும். இதனை தெரிந்து கொள்ள எளிமையான சோதனைகள் போதுமானது. அதுகுறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

உப்பு சோதனை : நமது அனைவரது சமையலறையில் உப்பு கண்டிப்பாக இருக்கும். இதில் ஒரு ஸ்பூன் உப்பு போதும் உங்கள் கையில் உள்ளது நல்ல நெய்யா? அல்லது போலியானதா என கண்டறிய… ஒரு கிண்ணத்தில் நீங்கள் சோதனை செய்து பார்க்க நினைக்கும் நெய்யை எடுத்து கொள்ளுங்கள். இதில் ஒரு சிட்டிகை அளவு ஹைட்ரோகுளோரிக் ஆசிட் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு எடுத்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை சுமார் 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிடுங்கள். பின்னர் இதில் சிவப்பு நிறம் மாறி இருந்தால் உங்கள் நெய் கலப்படம் என்றும் இல்லையென்றால் கலப்படம் இல்லாதது என்றும் கண்டறியலாம்.

தண்ணீர் சோதனை ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். இதில் நீங்கள் வைத்திருக்கும் நெய்யில் இருந்து ஒரு சொட்டு எடுத்து உள்ளே விடுங்கள். நெய் தண்ணீரில் மிதந்தால் அது கலப்படமற்றது. மாறாக தண்ணீரில் கலந்தால் அது கலப்படம் செய்தது என தெரிந்து கொள்ளுங்கள். இதேபோல ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வைத்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் சிறிதளவு நெய் சேர்த்து அப்படியே வைத்து விடுங்கள். சிறிது நேரத்திற்கு பின்னர் தண்ணீரின் மீது ஒரு லேயர் படர்ந்து இருந்தால் கலப்படமானது என அறியலாம்.

உள்ளங்கை சோதனை : ஒரு ஸ்பூன் நெய்யை எடுத்து உங்களது உள்ளங்கையில் ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் இரண்டு கையால் நன்கு தேய்த்து அதனை முகர்ந்து பாருங்கள். சுத்தமான நெய் என்றால் அதனை வாசனையே நன்கு தெரியும். அதேபோல நாம் நன்கு தேய்த்த பின்னர் நிறமற்றதாக இருந்தால் கலப்படமானது என அறியலாம்.

சுத்தமான நெய்யை வீட்டில் தயார் செய்வது எப்படி? ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பாலை எடுத்து நன்கு கொதிக்க வைத்து கொள்ளுங்கள். ஆடை பிரிந்து வரும் வரை நன்கு காய வைத்து பின்பு ஆற வைக்க வேண்டும். இந்த பாலாடையை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொண்டே வாருங்கள். இதனை பிரிட்ஜில் வைத்தால் கெடாமல் இருக்கும். ஒரு வாரம் கழித்து நீங்கள் சேகரித்து வைத்துள்ள பாலாடை வெண்ணெய் போல மாறி இருக்கும். இதனை எடுத்து குளிர்ந்த தண்ணீர் சேர்த்து அரைத்தால் வெண்ணெய் நன்கு பிரிந்து வரும். இந்த வெண்ணெய்யை எடுத்து மிதமான சூட்டில் சூடு செய்தால் நெய் தயார். இதில் சீரகம் சேர்த்தால் வாசனை நன்றாக இருக்கும். இதன் நெய்யை ஒரு பாட்டிலில் வைத்து பயன்படுத்தினால் கெடாமல் இருக்கும்.

Related Post

640 கிலோ மீட்டர்ல இருக்கு..! எப்போ மழை? எவ்வளவு வேகத்தில் காற்று வீசப்போகிறது?

Posted by - December 8, 2022 0
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 640 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மாண்டஸ்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து

Posted by - March 1, 2024 0
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, அகவிலைப்படி உயர்வு.. அதிரடி அறிவிப்பு

Posted by - April 23, 2024 0
அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், இறப்பு கிராஜூவிட்டி, பயணப்படி ஆகியவை 25 விழுக்காடு வரை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில்  பணியாற்றும் அரசுப்பணியாளர்களுக்கு படித்…

பாகிஸ்தானில் கல்லறைக்கு பூட்டு அணிவிக்கப்பட்ட விவகாரத்தில் புது டுவிஸ்ட் – என்ன ஆச்சு தெரியுமா?

Posted by - May 1, 2023 0
பாகிஸ்தான் நாட்டில் பெற்றோர் தங்களது மகள்களின் கல்லறையை பூட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. கல்லறையில் இருக்கும் பெண் சடலங்களுடன் மர்ம ஆசாமிகள் உடலுறவு…

ஆகஸ்ட் 31 ஆம் தேதி மதுக்கடைக்கு விடுமுறை அறிவிப்பு – காரணம் என்ன?

Posted by - August 29, 2025 0
புதுச்சேரி மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால் மதுக்கடைகள், மதுபார்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மூட உத்தரவு புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *